Saturday, October 10, 2015

குணசித்திர நடிகை மனோரமா ஒரு சகாப்தம்............



தென் இந்தியா ஒரு காலத்தில் கொடிக்கட்டி பறக்க காரணமாக இருந்த ஒரு நடிப்பு சகாப்தம் இன்று மறைந்து விட்டது.

நடிகை மனோரமா மாரடைப்பு காரணமாக இன்று காலை காலமாகி விட்டார். ஒரு காலத்தில் தென் இந்திய தமிழ்  சினிமா கொண்டாடிய மிக சிறந்த குணசித்திர நடிகை,நகைச்சுவை நடிகை. கிட்ட தட்ட தமிழ் சினிமாவில் ஆயிரம் திரைப்படங்களுக்கு மேல் நடித்த பெருமை இவரை சாரும்.தவிர தமிழ்  நாட்டின் 5 முதல் அமைச்சர்களுடன் நடித்த பெருமையும் இவரை சேரும்.எல்லா நடிப்பிலும் கைதேர்ந்த ஒரு மிக சிறந்த நடிகையை இன்று தமிழ் சினிமா இழந்து விட்டது.

மனோரமா பற்றிய சில தகவல்களை இங்கே பதிவிடுகிறேன்.இந்த தரவுகள் அடுத்த தலைமுறையில் நடிப்பில் சாதிக்க துடிக்கும் சாதனையளர்களுக்கு மனோரமா, ஆட்சி மனோரமா ஒரு வழிகாட்டியாக இருப்பார் என நான் நினைக்கின்றேன்.

19943.05.26 இல் மன்னார்குடியில் பிறந்த மனோரம்மாவின் இயற்பெயர் கோபி சாந்தா. தமிழ் நாட்டின் 5 முதல் அமைச்சர்களுடன் அதாவது  அண்ணாதுறை , மு. கருணாநிதி, தமிழ் நாட்டின் தற்போதைய முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஜெயராம், ம. கோ. ராமசந்திரன்,என்.டி. ராமராவ் நடித்திருக்கின்றார்.

இவரது நடிப்பு,கலையுலக சாதனை என எல்லா சாதனைகளும் கின்னஸ் புத்தகத்தில் பதியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். பத்மஸ்ரீ, தமிழ்நாடு அரசின் கலைமாமணி, தேசிய திரைப்பட விருது போன்ற பல விருதுகளை  சொந்தக்காரர்.தவிர பல தேசிய விருதுகளுக்கு சொந்தக்காரர்.

" தில்லிக்கு ராஜானாலும் பாட்டி சொல்லை தட்டாதே",மெட்ராசா சுத்தி பார்க்க போறேன் " போன்ற மிக சிறந்த பாடல்களின் மூலம் தமக்கு பாடும் திறமையும் இயல்பிலே இருக்கின்றது என்பதை பல முறை நிரூபித்தவர்.மேலும் தமிழ் சினிமா கண்ட மிக சிறந்த திரைப்படமான "தில்லான மோகனம்பாள் திரைப்படத்திலும் இவருக்கு பெரும் பங்கு உண்டு என்பது குறிப்பிட தக்கது. இறுதியாக சிங்கம், சின்காம் 2 போன்ற திரைபடங்களில் நடித்தார் என்பதும் குறிப்ப்பிட தக்கது.

இன்றோடு ஒரு சினிமா சகாப்பதம் மறைந்து விட்டது.அவர் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்.




No comments:

Post a Comment