Sunday, December 27, 2015

நூல் அறிமுகம்
கிறிஸ்தவ வரலாற்றில் மறைக்கப்பட்டனவும்,மாற்றப்பட்டனவும் உலகளாவிய தாக்கமும் நூல்

கடந்த 2000 ஆண்டு கால உலக வரலாற்றில் கிறிஸ்தவ மதத்துக்கான தாக்கம் மிகவும் வலுவானது.உலக வரலாறே கிறிஸ்துவுக்கு பின் என்று தான் வகுக்கப்பட்டு இலக்கியங்களில் விபரிக்கப்படுகிறது.
தேவ மைந்தன்  இயேசுவின் பிறப்பை அடிப்படையாகக் கொண்ட கிறிஸ்தவ மதம் சென்ற இடமெல்லாம்  ஏக போதித்ததுபோல அன்பை மட்டும் விதைக்கவில்லை.உலக வரலாற்றை படிக்கும் எவரும், அந்த வரலாற்றை  தெரிந்த எவரும் மத பரப்பலுக்காக சிந்திய ரத்தம் கொஞ்சம் நஞ்சமில்லை.இந்த பின்னணியில் கிறிஸ்தவத்தை பைபிள் ஆதரங்களுடன் கடுமையாக விமர்சனத்துக்கு உள்ளாக்கும் நூல்கள் பல ஏற்கனவே மேற்கத்தேய நாடுகளில் எழுதப்பட்டுள்ளன.ஆயினும் தமிழில் அதை போன்ற விரிவான நூல் வெளிவரவில்லை.அந்த குறையை இந்த நூல் நிவர்த்தி செய்திருக்கிறது என்று கூறலாம்.
பரிசுத்த வேதாகமத்திலிருந்து மேற்கோள்கள் காட்டுவதில் தொடக்கி பலநூறு நூல்களிலிருந்தும் கருத்துக்களை உள்வாங்கி இந்த நூல் எழுதப்பட்டுள்ளது.

பத்து பகுதிகள் கொண்ட இந்த நூலில் கிறிஸ்தவ சமயத்தின் வளர்ச்சி,நோக்கம்,விஞ்ஞானம் கூறும் உலகத்தோற்றத்திற்க்கு­­ முரண்பட்ட கிறுஸ்தவ கோட்பாடு,உலகின் பல்வேறு  நாகரிகங்களின் வரலாறு,இந்து சமவெளி நாகரிகத்தின் தொன்மை,அழியாத்தன்மை,செமிட்டிக் மதங்களின் தாயகமான பலஸ்தினத்தின் வரலாறு,உலக நாடுகளில் கிறிஸ்தவம் பரவிய வரலாறு,பிரிவினை வாதத்தை வளர்க்கும் மத குருமார்கள் என பல விடயங்கள் இந்த நூலில் தெள்ள தெளிவாக கூறப்பட்டும் ,பல உண்மைகள் தோலுரித்து காட்டப்படும் இருக்கின்றன.

இந்த வகையில் எழுத்தாளர் உமரி காசிவேலு மிக சிறந்த ஆதாரங்களை புத்தகத்தின் பக்கத்துக்கு பக்கம் தவள விட்டிறிக்கிறார்.பக்கத்துக்கு பக்கம் கிறிஸ்தவ மதம் பற்றிய மிக தெளிவான தரவுகள் கூறப்பட்டுள்ளன.வரலாற்றை சரியாக தெரிந்து கொண்டு இந்த நூலை வாசிக்கும் போது ஒரு மதத்தின் தெளிவான பல உண்மைகளை தெரிந்து கொள்ள முடியும்.வசிப்பளர்கள் வாசிக்க வேண்டிய சிறந்த நூல் என்று இந்த நூலை கூறலாம்.


Sunday, December 6, 2015

கால்பந்தில்  உலகை ஆளும் ஆடவர்கள்  இவர்கள் தான்.

32 அணிகள் உலகக் கோப்பைப் போட்டியில் மோதினாலும் கூட ஒவ்வொரு அணியிலும் ஏதாவது ஒரு நட்சத்திர வீரர்தான் இருப்பார். அந்த வகையில் பார்த்தால் தற்போதைய உலக கால்பந்து அணிகளை அலசிப் பார்க்கும்போது 11 பேர் மீதுதான் உலக கால்பந்து ரசிகர்களின் கவனம் முழுமையாக திரும்பி இருக்கும்.
அந்த முதல் 10 வீரர்கள் [பாரிய ஒரு சுவையான அலசல் இது.
    1.லியோனல் மெஸ்ஸி-அர்ஜென்டினா.


அட்டகாசமான மெஸ்ஸி, போட்டிகள் நடைபெறுகின்ற போது எதிரணிகளுக்கு நிச்சயம் பெரும் தலைவலிதான். அவருடைய ஒவ்வொரு மூவ்களை முறியடிப்பது எதிரணிக்கு மிக .மிகக் கடினமான ஒன்று. இப்படித்தான் பந்தை கவர்ந்து வருவார் இப்படி தான் பந்து வரும் என்று எதிர்பார்த்திருந்தால் வேறு பக்கம் பந்தை உதைத்துச் சென்று விடுவார்.மெஸ்ஸி – வலது பக்கம்  சிக்னல் போட்டு விட்டு இடது பக்கம்  வளையும் படி மிக சிறந்த கோள்களை பெற கூடிய ஒருவர்.இவருடைய விளையாட்டுக்கும், அழகுக்கும், ஐரோப்பாவில் ஏகப்பட்ட பேர் அடிமைகளாகவே மாறிப் போயுள்ளனர்.தவிர இந்த ஆண்டின் பல்லான் டி ஆர் விருதுக்கும் மெசியின்  பெயர்  தெரிவு செய்யப்பட்டுள்ளது.





இந்த முறையும் மெச்சி இந்த விருதை பெற்றால் இது அவருக்கு 6 வது பல்லான் டி ஆர் விருது.எனவே உலகில் ஒட்டு மொத்த கால்பந்து ரசிகர்களை கவர்ந்து இழுத்திருக்கும் மெஸ்சி தான் ஹிட் லிஸ்ட் நம்பர் வன்.
ஐரோப்பாவின் சிறந்த கால்பந்து வீரர் பட்டத்தை பல முறை வென்றவர் மெஸ்ஸி. இவரை பெரிதும் நம்பியுள்ளது அர்ஜென்டினா அணி என்று சொல்வதில் குறை ஒன்றும்  இல்லை..
2.      கிறிஸ்டியானோ ரொனால்டோ-போர்ச்சுகல்.


உலகில் மெசிக்கு அடுத்து அதிக கால்பந்து ரசிகர்களை கொண்டிருக்கின்ற ஒரு வீரர் என்றால் அது ரெனல்டோ தான்.விளையாடிய,விளையாடிக்கொண்டிருக்கின்ற காலப்பகுதியில் பல எண்ணற்ற விருதுகளை தான் வசப்படுத்தியிருக்கின்ற ஒரு வீரர்.
2006 உலகக் கோப்பைப் போட்டியில் அசத்தி தனது பெயரை அழுத்தமாக ரசிகர்களுக்கு சொன்னவர்.. ரியல் மாட்ரிட் அணி இவரை 132 மில்லியன் டாலருக்கு வாங்கிப் போட்டுள்ளது. தலையால் முட்டி கோலடிப்பதில் சாகசம் செய்யக்கூடியவர் இவரை தவிர எவரும் இல்லை என்று தான் கோர வேண்டும்.
ரியல் மாட்ரிட்டுக்காக விளையாடிய முதல் 35 போட்டிகளில் 33 கோல்களைப் போடு சாதனை படைத்துள்ள ஒரே ரியல் மாட்ரிட் வீரர் இவர் தான்.



3.       வேயன் ரூனி-  இங்கிலாந்து.
இவரை இலகுவில் ரசிகர்களும் என்னய்யா கால்பந்து பிரியர்களும் மறந்து  விட முடியாது காரணம் 2006ம் ஆண்டு  உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டியின்போது சிகப்பு நிற அட்டை  கொடுக்கப்பட்டவர்.ஆனால் அதற்கு அடுத்த போட்டியிலே அசுர வேகத்தில் 04 கோள்களை போட்டு இங்கிலாந்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றது மட்டும் இல்லாமல் தன்னையும் இங்கில்லாது அணியின் அபாயகரமான வீரர்களில் ஒருவராக நிலைநிறுத்தினார். தனி மனிதராக இருந்து வெற்றியை அடையக் கூடிய சாதுரியம் படைத்தவர். 2009ம் ஆண்டு தொடரில் 7 கோல்களை அடுத்தடுத்து அடித்து அசத்தியவர்.


2009-10ல் காலபகுதியில் இங்கிலாந்துக்காக 26 கோல்களை அடித்தவர். இங்கிலாந்துக்காக அதிக கோல்களைப் போட்ட 2வது வீரர் என்ற பெருமையும் பெற்றவர். இவரது அதிரடி ஆட்டம், எதிரணி வீரர்களுக்கு நிச்சயம் பீதியைக் கொடுப்பதாக அமையும்.

4.நெய்மர்-பிரேசில்



எதிரணிகளை துவம்சம் செய்கின்ற மற்றுமொரு வீரர் நெய்மர்.வெறும் 23 வயது தான்.ஆனால் உலகில் கால்பந்து ரசிகர்கள் மொத்தமாக 23 லட்சத்துக்கும் மேல் இவரது ரசிகர்கள் தான் என்கிறது இங்கிலாந்தின் போப் சஞ்சிகை. தென் அமெரிக்க கண்டத்தில் 2010ம் ஆண்டில் மிக சிறந்த வீரர் நெய்மர் தான்.உலகில் மிக பிரபலமான கால்பந்து வீர்கள் கொண்டாடுகிற பிபா பாலான் தி விருதுக்கு 2010 இல் நெய்மரின் பரிந்துரை செய்யப்பட்டாலும் அவருக்கு அந்த தரவரிசையில் 10வது இடமே கிடைத்தது.மிக விரைவான ஆட்டத்திற்கும் வேகமெடுக்கும் திறனுக்கும் காற்பந்தை கையாளும் (காலாளும்) சுழற்றி  கொண்டு செல்கின்ற விதத்திற்கும் இரண்டு கால்களையும் பயன்படுத்தக்கூடிய திறமைக்காகவும் எடுத்துச் சென்ற பந்தை முடிக்கும் திறமைக்காகவும் இவருக்கு உலகில் பல்லாயிரம் ரசிகர்கள்.

பிரேசில் கால்பந்து வரலாற்றில் பீலே பற்றி எல்லோரும் தெரியும் அவரது திறனுக்கு ஈடாக நெய்மர் பேசப்படுவதுடன் பிரேசிலின் 2வது பீலேவாகவும் பிரேசில் நாட்டில் நெய்மர் அறியப்படுகிறார்.ஒட்டு மொத்தத்தில் இவரது சிறப்பை ஒரே வார்த்தையில் கூறினால் கால்பந்தில் கில்லி.
5.மைகான்-தடுப்பட்ட வீரர்- காமரூன்
தடுப்பாட்டத்தில் வல்லவராக இருக்கும் அதே வேளையில் அட்டாக்கிங்கிலும் மைகான், மகா கில்லாடி. புதுப் பொலிவுடன் தென் ஆப்பிரிக்காவுக்கு வந்துள்ள பிரேசில் அணியில் உள்ள மிகத் துடிப்பான வீரர்களில் மைகானும் ஒருவர். அவருடைய விளையாடும் அழகே அலாதியானது.


6.சாமுவேல் எட்டோ

ஆப்பிரிக்காவின் சூப்பர் ஸ்டார் வீரர் சாமுவேல். மூன்று முறை ஆப்பிரிக்காவின் சிறந்த கால்பந்து வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். 3வது முறையாக உலகக்கோப்பைப் போட்டியில் மிக இளவயதில் களமிறங்கிய வீரர்.
உலகக் கோப்பை தகுதிச் சுற்றுப் போட்டியில் இதுவரை  79 கோல்களைப் போட்டுள்ளார். காமரூன் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் மட்டுமல்லாது அவ்வணியின் ரியல் ஹீரோ இவர் தான்.


7.இகர் கசில்லாஸ்-ஸ்பெயின்.



உலகின் மிகச் சிறந்த ஸ்ட்ரைகர்களில் இவறும் ஒருவர். 2008ம் ஆண்டு ஈரோ கோப்பை போட்டியை வென்று ஸ்பெயின் சாம்பியனாவதற்குமிக முக்கிய காரணமாக  இருந்தவர்.இந்த வெற்றியின் மூலம் 44 ஆண்டுகளாக பாய்த்துக் கொண்டிருந்த ஈரோ கோப்பையை ஸ்பெயின் வென்று வெற்றி தாகத்தைத் தணித்துக் கொண்டது.
ஈரோ கோப்பை நாக் அவுட் சுற்றில் ஸ்பெயினுக்கு எதிராக ஒரு கோல் கூட விழாமல் தடுத்த ஜாம்பவான் இவர். கோல் கம்பங்களுக்கிடையே இவர் செயல்படும் வேகம், எந்த பந்தாக இருந்தாலும் நிச்சயம் பயப்படும்.
   
8.கிளின்ட் டெம்ப்சி-அமெரிக்கா.

இவரை உலகின் தலை சிறந்த வீரர்களில் ஒருவரான பீட் மாரவிச்சுடன் ஒப்பிட்டுப் பேசுகிறார் அமெரிக்க அணியின் பயிற்ருவிப்ப்ளர். அமெரிக்காவின் மிக முக்கிய கால்பந்து நட்சத்திரங்களில் ஒருவராக திகழும் கிளின்ட், சர்வதேச அளவில் பிரபலமான வீரராகவும் திகழ்கிறார்.
2006ம் ஆண்டு உலகக் கோப்பைப் போட்டியில் கானாவுக்கு எதிராக நடந்த போட்டியில் விழுந்த ஒரே கோலை கிளின்ட்தான் போட்டார்.
   

 9.பெர்னாண்டோ டோரஸ்- ஸ்பெயின்.






ஈரோ 2008 கோப்பையை ஸ்பெயின் வெல்ல முக்கியக் காரணமாக இருந்தவர்களில் டோரஸும் ஒருவர். நல்ல வேகத்துடன் ஆடக் கூடியவர். கோலடிக்க வேண்டும் என்பதை மட்டுமே லட்சியமாக கொண்டிருப்பார் களத்தில்.தவிர களத்தில் இருக்கும் போது இவர் கொஞ்சம் ஆபத்தான வீரர் தான்.


    10.ஸ்டீவன் பியனார்-தென் ஆப்பிரிக்கா.
தென் ஆப்பிரிக்காவின் முக்கிய வீரர்களில் ஒருவர் பியனார். சிறந்த முறையில் பந்தை நகர்த்திக் கொண்டு செல்வதில் வல்லவர். இங்கிலாந்தின் எவர்டன் அணிக்காக விளையாடி வருகிறார்.இவரது சாதனைகளை ஒரே வார்த்தையில் நினைவுக்கு கொண்டு வரவேண்டுமெனின் 2008 ஸ்பெயின் அணிக்கு எதிரான போட்டியை நினைவில் வைத்து கொள்ள வேண்டும்.தனக்கு கிடைத்த கடைசி 5 நிமிடத்தில் 2 கோல்களை பெற்று தனது அணியை வெற்றி பெற செய்தார்.