Sunday, December 27, 2015

நூல் அறிமுகம்
கிறிஸ்தவ வரலாற்றில் மறைக்கப்பட்டனவும்,மாற்றப்பட்டனவும் உலகளாவிய தாக்கமும் நூல்

கடந்த 2000 ஆண்டு கால உலக வரலாற்றில் கிறிஸ்தவ மதத்துக்கான தாக்கம் மிகவும் வலுவானது.உலக வரலாறே கிறிஸ்துவுக்கு பின் என்று தான் வகுக்கப்பட்டு இலக்கியங்களில் விபரிக்கப்படுகிறது.
தேவ மைந்தன்  இயேசுவின் பிறப்பை அடிப்படையாகக் கொண்ட கிறிஸ்தவ மதம் சென்ற இடமெல்லாம்  ஏக போதித்ததுபோல அன்பை மட்டும் விதைக்கவில்லை.உலக வரலாற்றை படிக்கும் எவரும், அந்த வரலாற்றை  தெரிந்த எவரும் மத பரப்பலுக்காக சிந்திய ரத்தம் கொஞ்சம் நஞ்சமில்லை.இந்த பின்னணியில் கிறிஸ்தவத்தை பைபிள் ஆதரங்களுடன் கடுமையாக விமர்சனத்துக்கு உள்ளாக்கும் நூல்கள் பல ஏற்கனவே மேற்கத்தேய நாடுகளில் எழுதப்பட்டுள்ளன.ஆயினும் தமிழில் அதை போன்ற விரிவான நூல் வெளிவரவில்லை.அந்த குறையை இந்த நூல் நிவர்த்தி செய்திருக்கிறது என்று கூறலாம்.
பரிசுத்த வேதாகமத்திலிருந்து மேற்கோள்கள் காட்டுவதில் தொடக்கி பலநூறு நூல்களிலிருந்தும் கருத்துக்களை உள்வாங்கி இந்த நூல் எழுதப்பட்டுள்ளது.

பத்து பகுதிகள் கொண்ட இந்த நூலில் கிறிஸ்தவ சமயத்தின் வளர்ச்சி,நோக்கம்,விஞ்ஞானம் கூறும் உலகத்தோற்றத்திற்க்கு­­ முரண்பட்ட கிறுஸ்தவ கோட்பாடு,உலகின் பல்வேறு  நாகரிகங்களின் வரலாறு,இந்து சமவெளி நாகரிகத்தின் தொன்மை,அழியாத்தன்மை,செமிட்டிக் மதங்களின் தாயகமான பலஸ்தினத்தின் வரலாறு,உலக நாடுகளில் கிறிஸ்தவம் பரவிய வரலாறு,பிரிவினை வாதத்தை வளர்க்கும் மத குருமார்கள் என பல விடயங்கள் இந்த நூலில் தெள்ள தெளிவாக கூறப்பட்டும் ,பல உண்மைகள் தோலுரித்து காட்டப்படும் இருக்கின்றன.

இந்த வகையில் எழுத்தாளர் உமரி காசிவேலு மிக சிறந்த ஆதாரங்களை புத்தகத்தின் பக்கத்துக்கு பக்கம் தவள விட்டிறிக்கிறார்.பக்கத்துக்கு பக்கம் கிறிஸ்தவ மதம் பற்றிய மிக தெளிவான தரவுகள் கூறப்பட்டுள்ளன.வரலாற்றை சரியாக தெரிந்து கொண்டு இந்த நூலை வாசிக்கும் போது ஒரு மதத்தின் தெளிவான பல உண்மைகளை தெரிந்து கொள்ள முடியும்.வசிப்பளர்கள் வாசிக்க வேண்டிய சிறந்த நூல் என்று இந்த நூலை கூறலாம்.


Sunday, December 6, 2015

கால்பந்தில்  உலகை ஆளும் ஆடவர்கள்  இவர்கள் தான்.

32 அணிகள் உலகக் கோப்பைப் போட்டியில் மோதினாலும் கூட ஒவ்வொரு அணியிலும் ஏதாவது ஒரு நட்சத்திர வீரர்தான் இருப்பார். அந்த வகையில் பார்த்தால் தற்போதைய உலக கால்பந்து அணிகளை அலசிப் பார்க்கும்போது 11 பேர் மீதுதான் உலக கால்பந்து ரசிகர்களின் கவனம் முழுமையாக திரும்பி இருக்கும்.
அந்த முதல் 10 வீரர்கள் [பாரிய ஒரு சுவையான அலசல் இது.
    1.லியோனல் மெஸ்ஸி-அர்ஜென்டினா.


அட்டகாசமான மெஸ்ஸி, போட்டிகள் நடைபெறுகின்ற போது எதிரணிகளுக்கு நிச்சயம் பெரும் தலைவலிதான். அவருடைய ஒவ்வொரு மூவ்களை முறியடிப்பது எதிரணிக்கு மிக .மிகக் கடினமான ஒன்று. இப்படித்தான் பந்தை கவர்ந்து வருவார் இப்படி தான் பந்து வரும் என்று எதிர்பார்த்திருந்தால் வேறு பக்கம் பந்தை உதைத்துச் சென்று விடுவார்.மெஸ்ஸி – வலது பக்கம்  சிக்னல் போட்டு விட்டு இடது பக்கம்  வளையும் படி மிக சிறந்த கோள்களை பெற கூடிய ஒருவர்.இவருடைய விளையாட்டுக்கும், அழகுக்கும், ஐரோப்பாவில் ஏகப்பட்ட பேர் அடிமைகளாகவே மாறிப் போயுள்ளனர்.தவிர இந்த ஆண்டின் பல்லான் டி ஆர் விருதுக்கும் மெசியின்  பெயர்  தெரிவு செய்யப்பட்டுள்ளது.





இந்த முறையும் மெச்சி இந்த விருதை பெற்றால் இது அவருக்கு 6 வது பல்லான் டி ஆர் விருது.எனவே உலகில் ஒட்டு மொத்த கால்பந்து ரசிகர்களை கவர்ந்து இழுத்திருக்கும் மெஸ்சி தான் ஹிட் லிஸ்ட் நம்பர் வன்.
ஐரோப்பாவின் சிறந்த கால்பந்து வீரர் பட்டத்தை பல முறை வென்றவர் மெஸ்ஸி. இவரை பெரிதும் நம்பியுள்ளது அர்ஜென்டினா அணி என்று சொல்வதில் குறை ஒன்றும்  இல்லை..
2.      கிறிஸ்டியானோ ரொனால்டோ-போர்ச்சுகல்.


உலகில் மெசிக்கு அடுத்து அதிக கால்பந்து ரசிகர்களை கொண்டிருக்கின்ற ஒரு வீரர் என்றால் அது ரெனல்டோ தான்.விளையாடிய,விளையாடிக்கொண்டிருக்கின்ற காலப்பகுதியில் பல எண்ணற்ற விருதுகளை தான் வசப்படுத்தியிருக்கின்ற ஒரு வீரர்.
2006 உலகக் கோப்பைப் போட்டியில் அசத்தி தனது பெயரை அழுத்தமாக ரசிகர்களுக்கு சொன்னவர்.. ரியல் மாட்ரிட் அணி இவரை 132 மில்லியன் டாலருக்கு வாங்கிப் போட்டுள்ளது. தலையால் முட்டி கோலடிப்பதில் சாகசம் செய்யக்கூடியவர் இவரை தவிர எவரும் இல்லை என்று தான் கோர வேண்டும்.
ரியல் மாட்ரிட்டுக்காக விளையாடிய முதல் 35 போட்டிகளில் 33 கோல்களைப் போடு சாதனை படைத்துள்ள ஒரே ரியல் மாட்ரிட் வீரர் இவர் தான்.



3.       வேயன் ரூனி-  இங்கிலாந்து.
இவரை இலகுவில் ரசிகர்களும் என்னய்யா கால்பந்து பிரியர்களும் மறந்து  விட முடியாது காரணம் 2006ம் ஆண்டு  உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டியின்போது சிகப்பு நிற அட்டை  கொடுக்கப்பட்டவர்.ஆனால் அதற்கு அடுத்த போட்டியிலே அசுர வேகத்தில் 04 கோள்களை போட்டு இங்கிலாந்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றது மட்டும் இல்லாமல் தன்னையும் இங்கில்லாது அணியின் அபாயகரமான வீரர்களில் ஒருவராக நிலைநிறுத்தினார். தனி மனிதராக இருந்து வெற்றியை அடையக் கூடிய சாதுரியம் படைத்தவர். 2009ம் ஆண்டு தொடரில் 7 கோல்களை அடுத்தடுத்து அடித்து அசத்தியவர்.


2009-10ல் காலபகுதியில் இங்கிலாந்துக்காக 26 கோல்களை அடித்தவர். இங்கிலாந்துக்காக அதிக கோல்களைப் போட்ட 2வது வீரர் என்ற பெருமையும் பெற்றவர். இவரது அதிரடி ஆட்டம், எதிரணி வீரர்களுக்கு நிச்சயம் பீதியைக் கொடுப்பதாக அமையும்.

4.நெய்மர்-பிரேசில்



எதிரணிகளை துவம்சம் செய்கின்ற மற்றுமொரு வீரர் நெய்மர்.வெறும் 23 வயது தான்.ஆனால் உலகில் கால்பந்து ரசிகர்கள் மொத்தமாக 23 லட்சத்துக்கும் மேல் இவரது ரசிகர்கள் தான் என்கிறது இங்கிலாந்தின் போப் சஞ்சிகை. தென் அமெரிக்க கண்டத்தில் 2010ம் ஆண்டில் மிக சிறந்த வீரர் நெய்மர் தான்.உலகில் மிக பிரபலமான கால்பந்து வீர்கள் கொண்டாடுகிற பிபா பாலான் தி விருதுக்கு 2010 இல் நெய்மரின் பரிந்துரை செய்யப்பட்டாலும் அவருக்கு அந்த தரவரிசையில் 10வது இடமே கிடைத்தது.மிக விரைவான ஆட்டத்திற்கும் வேகமெடுக்கும் திறனுக்கும் காற்பந்தை கையாளும் (காலாளும்) சுழற்றி  கொண்டு செல்கின்ற விதத்திற்கும் இரண்டு கால்களையும் பயன்படுத்தக்கூடிய திறமைக்காகவும் எடுத்துச் சென்ற பந்தை முடிக்கும் திறமைக்காகவும் இவருக்கு உலகில் பல்லாயிரம் ரசிகர்கள்.

பிரேசில் கால்பந்து வரலாற்றில் பீலே பற்றி எல்லோரும் தெரியும் அவரது திறனுக்கு ஈடாக நெய்மர் பேசப்படுவதுடன் பிரேசிலின் 2வது பீலேவாகவும் பிரேசில் நாட்டில் நெய்மர் அறியப்படுகிறார்.ஒட்டு மொத்தத்தில் இவரது சிறப்பை ஒரே வார்த்தையில் கூறினால் கால்பந்தில் கில்லி.
5.மைகான்-தடுப்பட்ட வீரர்- காமரூன்
தடுப்பாட்டத்தில் வல்லவராக இருக்கும் அதே வேளையில் அட்டாக்கிங்கிலும் மைகான், மகா கில்லாடி. புதுப் பொலிவுடன் தென் ஆப்பிரிக்காவுக்கு வந்துள்ள பிரேசில் அணியில் உள்ள மிகத் துடிப்பான வீரர்களில் மைகானும் ஒருவர். அவருடைய விளையாடும் அழகே அலாதியானது.


6.சாமுவேல் எட்டோ

ஆப்பிரிக்காவின் சூப்பர் ஸ்டார் வீரர் சாமுவேல். மூன்று முறை ஆப்பிரிக்காவின் சிறந்த கால்பந்து வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். 3வது முறையாக உலகக்கோப்பைப் போட்டியில் மிக இளவயதில் களமிறங்கிய வீரர்.
உலகக் கோப்பை தகுதிச் சுற்றுப் போட்டியில் இதுவரை  79 கோல்களைப் போட்டுள்ளார். காமரூன் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் மட்டுமல்லாது அவ்வணியின் ரியல் ஹீரோ இவர் தான்.


7.இகர் கசில்லாஸ்-ஸ்பெயின்.



உலகின் மிகச் சிறந்த ஸ்ட்ரைகர்களில் இவறும் ஒருவர். 2008ம் ஆண்டு ஈரோ கோப்பை போட்டியை வென்று ஸ்பெயின் சாம்பியனாவதற்குமிக முக்கிய காரணமாக  இருந்தவர்.இந்த வெற்றியின் மூலம் 44 ஆண்டுகளாக பாய்த்துக் கொண்டிருந்த ஈரோ கோப்பையை ஸ்பெயின் வென்று வெற்றி தாகத்தைத் தணித்துக் கொண்டது.
ஈரோ கோப்பை நாக் அவுட் சுற்றில் ஸ்பெயினுக்கு எதிராக ஒரு கோல் கூட விழாமல் தடுத்த ஜாம்பவான் இவர். கோல் கம்பங்களுக்கிடையே இவர் செயல்படும் வேகம், எந்த பந்தாக இருந்தாலும் நிச்சயம் பயப்படும்.
   
8.கிளின்ட் டெம்ப்சி-அமெரிக்கா.

இவரை உலகின் தலை சிறந்த வீரர்களில் ஒருவரான பீட் மாரவிச்சுடன் ஒப்பிட்டுப் பேசுகிறார் அமெரிக்க அணியின் பயிற்ருவிப்ப்ளர். அமெரிக்காவின் மிக முக்கிய கால்பந்து நட்சத்திரங்களில் ஒருவராக திகழும் கிளின்ட், சர்வதேச அளவில் பிரபலமான வீரராகவும் திகழ்கிறார்.
2006ம் ஆண்டு உலகக் கோப்பைப் போட்டியில் கானாவுக்கு எதிராக நடந்த போட்டியில் விழுந்த ஒரே கோலை கிளின்ட்தான் போட்டார்.
   

 9.பெர்னாண்டோ டோரஸ்- ஸ்பெயின்.






ஈரோ 2008 கோப்பையை ஸ்பெயின் வெல்ல முக்கியக் காரணமாக இருந்தவர்களில் டோரஸும் ஒருவர். நல்ல வேகத்துடன் ஆடக் கூடியவர். கோலடிக்க வேண்டும் என்பதை மட்டுமே லட்சியமாக கொண்டிருப்பார் களத்தில்.தவிர களத்தில் இருக்கும் போது இவர் கொஞ்சம் ஆபத்தான வீரர் தான்.


    10.ஸ்டீவன் பியனார்-தென் ஆப்பிரிக்கா.
தென் ஆப்பிரிக்காவின் முக்கிய வீரர்களில் ஒருவர் பியனார். சிறந்த முறையில் பந்தை நகர்த்திக் கொண்டு செல்வதில் வல்லவர். இங்கிலாந்தின் எவர்டன் அணிக்காக விளையாடி வருகிறார்.இவரது சாதனைகளை ஒரே வார்த்தையில் நினைவுக்கு கொண்டு வரவேண்டுமெனின் 2008 ஸ்பெயின் அணிக்கு எதிரான போட்டியை நினைவில் வைத்து கொள்ள வேண்டும்.தனக்கு கிடைத்த கடைசி 5 நிமிடத்தில் 2 கோல்களை பெற்று தனது அணியை வெற்றி பெற செய்தார்.


Saturday, November 21, 2015

ச்லட்ஜிங் சிறுத்தை ஓய்வு பெற்று விட்டது.

எனக்கு தெரிந்த ஆஸ்திரேலிய வேக பந்து வீச்சாளர்களில் பிரெட்லீக்கு அடுத்து நான் அதிகம் ரசித்தது மிச்சல் ஜோன்சன் என்ற ச்லட்ஜிங் புயலைதான்.எந்த துடுப்பாட்ட வீரராக இருந்தாலும் சரி அவரது பவுன்சர் பந்துகள்.வேகம் எதிர்த்து துடுப்பெடுத்தாடும் வீரரை ஒரு நிமிடமா கதி கலங்க வைத்துவிடும்.ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி பல முறை உலக கிண்ணம் வெல்வதற்கும்,பல தொடர்களை வெல்வதற்கும் மிக முக்கியமான ஒரு வேக பந்து வீச்சாளர் என்றால் என்னை பொறுத்தவரை அது மிச்சல்  ஜோன்சன் தான் என்று கூறுவேன்.அவர் நவம்பர் 17-ம் திகதி  தனது ஓய்வை அறிவித்து விட்டார்.
சில நிமிடம் அவர் செய்தது சரியாய் என்று யோசித்தேன் கரணம் கிரிக்கட்டை உண்மையாக நேசிக்கிற ஒவ்வொரு ரசிகனுக்கும் ஒரு மிக சிறந்த வீரர் தனது ஓய்வை அறிவிக்கிறார் என்றால் மனதில் பல கேள்விகள் எழும் அந்த கேள்வி தான் எனது அந்த யோசனைக்கும் காரணம்.


மிச்சல் ஜோன்சன் பற்றிய சிறு பகிர்வு.
ஒருநாள் போட்டிகள் என்றாலும் சரி மிச்சல் ஜான்சனின் 10 ஓவர் எப்போது முடியும் என்பதுதான் எதிரணியின் எதிர்பார்ப்பாக இருக்கும். அதுவே, டெஸ்ட் போட்டி என்றால் இன்று யாரை வம்பிழுக்கப் போகிறார், இவரது பவுன்சரில் யார் யார் நிலைகுலையப் போகிறார்கள் என்பதுதான் எதிர்பார்ப்பாக இருக்கும். கிட்டத்தட்ட 10 வருட காலம் ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடி உள்ள  மிட்சல் ஜான்சன் பல பல சாதனைகளுக்கு  சொந்தக்காரர்.


ஆஸ்திரேலிய அணியில் பிரட்லீ, மெக்ராத், ஃப்ளெம்மிங் போன்றவர்கள் ஓய்வு பெற்றதற்கு பின்பு,  ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளருக்கான தேடலில் முக்கிய இடம்பிடித்தவர்களில் முதன்மையானவர் மிட்சல் ஜான்சன். ஓடிவரும் ஸ்டைல் துவங்கி, பந்தை ஆடுகளங்களில் அடித்து தலைக்கு மேலே பவுன்ஸர்களாக மாற்றுவது வரை பேட்ஸ்மேனை ஒரு நிமிடம் நிலைகுலைய வைப்பவர். உலகின் தலை சிறந்த ஆட்டக்காரர்களான சச்சின், தோனி, காலிஸ் போன்றவர்களை கலங்கடித்தவர் ஜான்சன்.

ஆஸ்திரேலிய அணியின் ஆஸ்தான ஆயுதமான ஸ்லெட்ஜிங்கை சிறப்பாக செய்தவர் ஜான்சன். அந்த  ஸ்லெட்ஜிங் மூலம் பல வெற்றிகளை ஆஸி அணி பெற்றுக்கொண்டது. சைமண்ட்ஸ், பிரெட்லீக்கு இணையாக ஸ்லெட்ஜிங்கில் ஈடுபட்டவர் ஜான்சன்தான். 2013 /2014 ஆம் ஆண்டுகளில்  இடம்பெற்ற ஆஷஸ் தொடரின்போது ஜோ ரூட்டை வம்பிழுத்ததுதான் இவரது ஸ்லெட்ஜிங்கின் உச்சக்கட்டம். ஜான்சனின் அனல் பறக்கும் பந்துவீச்சு, சரியான நேரத்தில் கைகொடுக்கும் பேட்டிங் இதனையெல்லாம் தாண்டி இவரது ஸ்லெட்ஜிங்கிற்கு தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது.

களத்தில் எப்போதும் அக்ரஸிவாக இருந்தால்தான் ஒரு வேகப்பந்து வீச்சாளரால் வேகமாக பந்துகளை வீச முடியும் என்பது அக்தர் காலத்து ட்ரிக்ஸ் அதனை இன்னும் ஒருபடி சிறப்பாக செய்தவர் ஜான்சன்.   பிலிப் ஹூயூக்ஸ், பவுன்ஸர் தாக்கி உயிரிழந்தார் அந்த சோகம் ஆஸி  வீரர்களை அதிகமாக தாகி விட்டது.அதன் பின்பு சுற்றுலா இந்திய அணிக்கு  எதிரான போட்டியில்     முதல் டெஸ்ட் போட்டியில்  ஜான்சன் இந்திய அணியின் தலைவர்  விராட் கோலிக்கு வீசிய பந்து ஹெல்மெட்டை தாக்கிய சந்தர்ப்பத்தில், சற்று நேரம் நிலைகுலைந்தார் கோலி. அந்த பவுன்ஸர் தான் ஆஸ்திரேலியா தொடரை வெல்ல ஆஸி வீரர்களை மனதளவில் தயார்படுத்தியது என்றே சொல்லலாம்.


ஆஸ்திரேலிய அணியின் அனைத்து போட்டிகளிலும் ஜான்சனின் பங்களிப்பு கட்டாயம் இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பும், அதே போல் அவரது ஆட்டமும் இருக்க வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பும் கண்டிப்பாக ஆஸ்திரேலிய ரசிகர்களிடம் கண்டிப்பாக இருக்கும். ஒற்றை ஆளாக அணியை வெற்றிப்பாதைக்கு  அழைத்து செல்வார் ஜோன்சன்.மேலே குறிப்பிட்ட கூற்றுக்கு  2013-2014 ம் ஆண்டில் இடம்பெற்ற ஆஷஸ் தொடரில் ஜோன்சன் கைப்பற்றிய விக்கட்டுகளே சான்று.

ஜான்சனின் பலமே பவுன்சர் பந்துகள் தான் . டெஸ்ட் போட்டிகளில் புதிதாக களமிறங்கும் வீரர் ஜான்சன் பந்துவீசும் போது துடுப்பெடுத்தாட  பயப்படுவார் காரணம் அவர் சந்திக்கும் முதல் பந்தை கணிக்க முடியாத பவுன்ஸராக்கி ஆட்டத்தை தன் கட்டுப்பாட்டுக்குள் எளிதில் திருப்பும் திறன் கொண்டவர் ஜான்சன். டென்னிஸ் லில்லி புகழ்ந்த வேகப்பந்துவீச்சாளர்களில் ஜான்சனும் ஒருவர். ஓய்வை அறிவித்த பின்பு இங்கிலாந்து முன்னாள் கேப்டன் வாகன் 'இங்கிலாந்து வீரர்கள் மகிழ்ச்சியடைவார்கள் காரணம் இனி அவர்கள் ஜான்சனை எதிர்கொள்ளமாட்டார்கள்' என புகழ்ந்துள்ளார் அந்த அளவுக்கு ஜோன்சனின் வேகபந்து வீச்சும்,பவுன்சர் பந்துகளும் எதிரணி வீரர்களை தாக்கியிருக்கிறது ,அதிலும் இங்கிலாந்து அணி துடுப்பாட்ட வீரர்களை சொல்லே வேண்டாம்.


ஆஸ்திரேலிய அணியின் பந்து வீச்சாளர்களில் விக்கெட் மெஷின் ஜான்சன் தான். டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்திய ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்களில் 4வது இடத்திலும், வேகப்பந்துவீச்சாளர்களில் 3வது இடத்திலும் உள்ளார். கடைசி போட்டியில் ( அதாவது நியூசிலாந்து அணிக்கு எதிராக  அவர் எடுத்த விக்கெட்) ஆஸியின் வேகப்பந்து  ஜாம்பவான் பிரெட்லீயின் சாதனையை முறியடித்தது. கிரிக்கெட் வாழ்க்கையின் கடைசிநாளில் கூட சாதனை படைத்தார் ஜான்சன். மூன்று (ஒரு நாள்,டி20,டெஸ்ட்) போட்டிகளிலும் சேர்த்து ஜான்சன் 590 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 2008ம் ஆண்டு தென்னாப்பிர்க்காவுக்கு எதிரான போட்டியில் 8 வீரர்களை ஒரே இன்னிங்ஸில் வீழ்த்தியதே அவரது சிறப்பான பந்துவீச்சு.

ஓய்வை அறிவித்த பின்பு இதுதான் பிரபலங்கள் அவருக்கு கூறும் வாழ்த்து.
1. சச்சின் டெண்டுல்கர்.
#. ஜான்சன் ஒரு ஸ்பெஷல் பந்துவீச்சாளர், அவரது ஆக்ரோஷமான பந்துவீச்சை ரசித்துள்ளேன்.

2. மைக்கேல் கிளார்க்
#.நான் விளையாடிய வீரர்களிலேயே மிகச் சிறந்த வீரர்.வாழ்த்துக்கள் கூறி ஒரு சிறந்த வீரனை வழியனுப்பி வைப்போம்.
3. ஏபி.டி. வில்லியர்ஸ்.
#.அவரது ஓய்வு சிறப்பாக அமைய எனது வாழ்த்துக்கள்
4.ஷேன் வாட்சன்.
#.ஜான்சனுடன் மறுபடியும் விளையாட முடியாததை நினைத்த போது எனது கண்கள் கலங்கிவிட்டன, சிறந்த நண்பர்.
ஒரு சிறந்த வீரனுக்கு வாழ்த்துக்கள் கூறி வழியனுப்பி வைபோம்.சர்வதேச போட்டிகளில் ஓய்வை அறிவித்தலும் அவரது கிரிக்கெட் வாழ்க்கை உள்ளூர்,ஐ.பி எல் போன்ற போட்டிகளில் தொடரட்டும்.
வாழ்த்துக்கள் தலைவா.

Thursday, November 19, 2015

அல்லாவின் பெயரால்....
கடந்த வெள்ளிக்கிழமை உலகம் என்றுமே நினைவில் வைத்துகொள்ள வேண்டிய முக்கியமான கருப்பு நாள்.வலி வேதனை எல்லா  மனிதர்களுக்கும் பொதுவான ஒன்று தான் ஆனால் மதத்தின் பெயரால்  மனிதம் உலகில் சாகடிக்கப்படுகிறது.சில வேளைகளில் இந்த கோர சம்பவம் காரணமாக உங்களை அறியாமலேயே உங்களது கண்கள் நீர் மழை பொழிந்திருக்கலாம் பாரிஸ் மக்களிஞ் கண்களில் இவரு தான் கண்ணீர் இன்னும் நின்ற நின்றபாடில்லை.


ஐ.எஸ்.ஐ.எஸ் உலகிலேயே மிகவும் இறுக்கமானதும் என்றுமே ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு தீவிரவாத இயக்கமாக பரிணமித்து விட்டது.கடந்த வெள்ளிகிழமை பிரான்ஸ் பாரிஸ் நகரில் இடம்பெற்ற கோர சம்பவம் இதற்கு ஒரு நல்ல உதாரணம்.சென்ற வாரம் வெள்ளிக்கிழமை பிரான்ஸ் நாடு  விழா கோலம் பூண்டிருந்தது.கரணம் நடப்பு உதப்பந்தட்ட சம்பியனான ஜெர்மனி அணியும் பிரான்ஸ் கால்பந்து அணியும் செயின் டி  பிரான்ஸ் மைதானத்தில் சினேகபூர்வமான கால்பந்தாட்டப் போட்டிகளில் ஒன்றை ஒன்று எதிர்த்தாடி கொண்டிருந்தன.இவை தவிர பிரான்ஸ் நகர்   சொல்லவே வேண்டாம் மகிழ்ச்சியில் நிரம்பி வழிந்துக்கொண்டிருந்தது.திடீரென யாரும் நினைத்து பார்க்காத தருணத்தில் பிரான்சின் முக்கிய 07 இடங்கள்  ரத்தமும் சதையுமாக  காட்சியளித்தது.ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் அந்த 07 இடங்களையும் குண்டு வைத்து தகர்த்து விட்டார்கள்.
இதுவரையில் 160 பேர் உயிரிழந்து இருக்கிறார்கள்.பலர் உயிருக்கு போராடிக்கொண்டு இருக்கிறார்கள் இன்னும் 200 பேர் கடுமையான காயங்களால் உந்தப்பட்டு வைத்தியசாலையில்  தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படிருக்கிரர்கள்.



பிரான்ஸ் நாடே ஒரு நீங்கா இருளுக்குள்  மூழ்கி போய்  இருக்கிறது.03 நாட்களுக்கு பிரான்ஸ் நாட்டில் துக்க தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள அதே வேலை அந்த நாட்டில் அவசர கால நிலையம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.குறித்த மனித வெடி குண்டு தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.இந்த தற்கொலை குண்டு தாக்குதலுக்கு ஐ.எஸ்..ஐ.எஸ் அமைப்பில் இருந்து வரும் நியாயம் இதுதான்.
#.பாலியல் தொழிலுக்கும் ஆபாசத்துக்கும் தலைநகராக விளங்கும் பாரிசில் தாக்குதல் நடத்தியிருப்பது புனித அல்லாவின் கிருபையே.
#.நடந்துக்கொண்டிருப்பது சிலுவை போர்  .ஆகவே எமது முஸ்லிம்கள் தான் எமக்கு முக்கியம்.
#.உலகில் எந்த நாடாக இருந்தாலும் சரி முஸ்லிம்கள் நாடுகள் மீது குண்டு வீசி போர் தொடுப்பவர்களுக்கு இதுதான்  கதி.
#.தற்கொலை தாக்குதல் நடத்திய எங்களது 08 சகோதரர்களுக்கும் அல்லா துணை இருப்பான்,.நாங்கள் தான் உலகை ஆளப்போகிறோம் என்பதற்கான ஆரம்பம் தான் இது.
மேலே ஒரு விடயத்தை நாம் கவனிக்க வேண்டும் ஐ.எஸ்.ஐ.எஸ்  சார்பில் பாதிக்கப்பட்ட இஸ்லாமிய மக்களுக்கு ஆதரவாக நடத்தப்பட்ட புனிதப்போர் என்று இந்த தாக்குதலுக்கு  ஒரு  தார்மிக நியாயம் சொல்லப்பட்டாலும் இறந்தது என்னவோ அப்பாவி உயிர்கள் மட்டுமே என்பது நிதர்சனம்.


இவை தவிர மேலை நாடு கிறிஸ்தவர்களும் ஒடுக்கப்படும் இஸ்லாமியர்களுக்கும் இடையில் பகையுணர்வை ஏற்படுத்தும் நோக்க்கமும் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பால் வெற்றிகரமானதாக நிறைவு  செய்யப்படிருக்கிறது.எல்லாவற்றுக்கும்  மேலாக ஐ.எஸ்.ஐ.எஸ் பிரமுகரான ஜிகாதி ஜான் அமெரிக்கப்படைகளால் கொள்ளப்பட்டதும் இந்த தாக்குதலுக்கு மிக முக்கியமானதொரு காரணமாக இருக்கலாம்.
ஒட்டுமொத்தத்தில் அமெரிக்க,ரஷ்யா என்ற இரு பெரும் வல்லரசுகள் தவிர உலகின் பல நாடுகளில் இருந்தும் பிரான்ஸ் தாக்குதலுக்கு  அனுதாபம் இன்னமும் போய் சேர்ந்துக்கொண்டு தான் இருக்கிறது.கடந்த சனிக்கிழமையில் இருந்து இன்றய நாள் வரைக்கும் உலகம்  முழுக்க சமூக வலைதளங்களில் பிரான்ஸ் தேசியக்கொடி அனைஒவரது சுயவிபர படமாக மாறிப் போய்  இருக்கிறது.
இந்த கோர சம்பவம் என்றுமே மன்னிக்க முடியாத ஒன்று.பிரான்ஸ் ஜனாதிபதி  ஐ.எஸ்.ஐ.எஸ்  அமைப்பை  பெயரிட்டு கண்டித்திருக்கிறார்.இது எங்கள் மீது தொடுக்கப்பட்ட போர் இதற்கு  விரைவில்  பலிக்கு பலி நிச்சயம் கருணையற்ற முறையில் பதிலடி கொடுக்கப்படும் என்று சூளுரைத்திருக்கிறார்.


ஐ.எஸ்.ஐ.எஸ்  அமைப்பு தீவிரத்தன்மை  கொண்ட வாஹபி இஸ்லாத்தை உலகம் முழுக்க எடுத்து செல்ல துடிக்கிறது.இந்த முயற்சிக்கு எதிரான கருத்தியல் போரை அறிவு ஜீவிகள் முன்னெடுக்க வேண்டியது  மிக மிக அவசியம்.வெறுப்பான அரசியல்  சித்தாந்தத்தையும் வளர்த்தெடுக்கும் இத்தகைய இகக்கங்களிடம் இருந்து அப்பாவி பொது மக்கள் காப்பாற்ற பட வேண்டும்.ஐ.எஸ்.ஐ.எஸ்  அமைப்பு தனிமைப்படுத்தப்பட வேண்டும்.

சுதந்திரம்,சகோதரத்துவம்.,சமத்துவம் ஆகிய மிக சிறந்த முழக்கங்களை உலகுக்கு பறை சாற்றிய நாடு பிரான்ஸ்.அந்த முழக்கங்களுக்கு பிரான்ஸ் மக்களுக்கும் உயிரிழந்த மக்களுக்காகவும் உயிர்த்துடிப்போடு பிரார்த்திப்போம்.ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பை தனிமைப்படுத்த எத்தனிப்போம்.
வைரமுத்து சிறுகதைகள்
உலக சிறுகதைகளோடு கண்டிப்பாக ஒப்பிடத்தக்கவை.
கவிதை ,திரை பாடல், கட்டுரை, தொடர்கதை,நாவல், தன் வரலாறு என இலக்கியத்தின் பல துறைகளில் கால்பதித்து சாதனைகளை தொட்ட நமக்கு  தெரிந்த பாடலாசிரியர் வைரமுத்து வின் வேறுபட்ட இலக்கிய முயற்சி இது.சிறுகதைகளுக்கான கதை கருக்கள் ஒன்று என்றாலும் இந்த புத்தகத்தில் பேசப்படுகின்ற கதைகலங்கள் வேறுவேறு.காலங்களும் வேறு,கதா பாத்திரங்களும் வேறு.அதிலும் வைரமுத்து சிறுகதைகளில் சிறப்பானது பொய் தானேடி கொள்ளும் மெய் கொல்லாது போன்ற வாசகங்கள் சிறுகதைகளுக்கு மிக சிறந்த வெற்றிகளை தேடிக்க் கொடுத்திருக்கின்றன எனலாம்.


இவற்றுக்கு இடையிலான பொது பண்பு இவை எல்லாமே மனிதத்தை பற்றி பேசுகின்றன.
இந்த அக உலகின் குறுக்கு வெட்டு தோற்றத்தை அச்சு அசலாக பதிவு செய்வதில்  வெற்றி  கண்டிருக்கின்றார்  பாடலாசிரியர்.அதிலும் (மாறும் யுகங்கள் மாறுகின்றன ) போன்ற சிறுகதைகள் மேற்குறிப்பிட்ட எடுத்துக்காட்டுக்கு பொருந்தும் சிறுகதைகள்.தவிர வறுமையில் செம்மையை வலியுறுத்தும் மார்க்கம்,மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம் என்று சொல்லும் ராஜராஜன் ,ஏற்பது இகழ்ச்சி என்பதை நினைவூட்டும் விதத்திலும்,காந்தியின் கடைசி கதைகள் போன்ற கதைகள் இன்றைய சிறுகதை தலைமுறையினர் படமாக பயில வேண்டியை


இந்த தொகுப்பிலுள்ள இறந்தக் காலங்கள் இறந்தே போகட்டும் இப்படியும் ஒருவன் இருந்தான் போன்ற சிறுகதைகள் தமிழுக்கு புதிது.அதிலும் பாடலாசிரியர் கூறியிருக்கும் கருத்துக்கள் வார்த்தைகள் கரிர் என்று தைகின்றன.எல்லாவற்றுக்கும் மேலாக புத்தர்,ஷாஜஹான்,ராஜராஜன்  போன்ற மனிதர்களில் தொடக்கி வாழ்வின் பல இடுக்குகளில் வாழ்பவர்கள் பல மதங்களை சேர்ந்தவர்கள், பல்வேறு குணங்கள் உடையவர்கள் என விதவிதமான மனிதர்கள் இந்தக் கதைகளில் இடம்பெற்றாலும் எல்லோருமே நம் முன் ரத்தமும் சதையும் உலவும் மனிதர்களாக தான் இருக்கின்றார்கள்.


குறிப்பாக என்னால் ஒன்று மட்டும் கூற முடியும் தமிழில் இது வரை வந்துள்ள சிருகதைகளிலும் பார்க்க இந்த சிறுகதைகள் புத்தித் என்று தான் கூற வேண்டும்.இந்த புத்தகத்தின் 40 சிறுகதைகளும் தமிழுக்கு 40 முகங்கள்.வைரமுத்து என்று ஒரு இலக்கிய கர்த்தாவை பார்க்கிறோம் என் தர கன்னட்டத்தோடு இந்த சிறுகதைகளை வாசித்து பாருங்கள்.
வாசிப்பின் முழு பலனையும் இந்த நூல் படித்து முடிக்கும் போது தந்து விடும்.இலக்கிய மோகம் கொண்டவர்களின் கையில் இருக்க வேண்டிய மிக அருமையான நூல் இது. 

Monday, October 26, 2015

கின்னஸ் கனவு தகர்ந்து விட்டது.

 வசந்த சொய்சா இந்த பெயர் சிலருக்கு நினைவில் இருக்கலாம். ஆனால் அண்மைய சில தினங்களாக
இந்த பெயர் செய்தி ஊடங்களிலும் மக்களிடத்திலும் அதிகமாக முணுமுணுக்கப்பட்ட மாறி விட்டது. இலங்கை நாட்டுக்காக தமது பெயரை, தமது நாட்டின் பெயரை உலகத்துக்கு  பல முறை பறைசாற்றிய சாதனையாளர்கள் சில வேளைகளில் புறக்கணிக்க பட்டிருக்கிறார்கள், சில வேளைகளில் உயிரையும் பணயம் வைத்திருக்கிறார்கள் இந்த கூற்றுக்கு மேலே கூறப்பட்ட வசந்த சொய்சாவின் பெயர் பொருந்தி விட்டது. அவர் இறந்து விட்டார்.



பல உலக சாதனைகளுக்கு சொந்தக்காரர்.தென்கிழக்கு ஆசிய நாடுகளின் மிக சிறந்த கராத்தே பயிற்றுவிப்பாளர்,இலங்கையில் கூட சிறந்த பயிற்றுவிப்பாளர் என பல முறை விருதுகளை பெற்றவர்.கராத்தே போட்டிகளின் ஆலோசகர். இன்னும் சில தினங்களில் ஜப்பானுக்கு பயணம் மேற்கொண்டு 10 உலக சாதனைகளை படைக்க இருந்த ஒரு சாதனை வீரர் மறைந்து விட்டார்.அவரது மரணம் இலங்கைக்கு மிக பெரிய இழப்பாக அமைந்து விட்டது. ஒரு சிறந்த பைட்ட்ருவிப்பலரை இழந்து விட்டது இலங்கை  என இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற உலக நாடுகள் பல வற்றிடமிருந்து அவரது மரணத்துக்கு பல அனுதாபங்கள் வந்த வண்ணம் உள்ளன.

அவரது மரணம் எப்படி நிகழ்ந்தது. கண்ணில் பட்ட உண்மையான தரவுகள் இதோ.
வசந்த சொய்சா அனுராதபுரம் கபடநாவ பகுதியை பியார்ப்பிடமாக கொண்டவர், 2 பிள்ளைகளின் தந்தையான இவர் 2 பிள்ளைகளின் தந்தை என்பது மட்டுமில்லாமல் இவருக்கு 57 வயது என்பது குறிப்பிடத்தக்கது.இவர் தற்காப்பு  கலை தவிர இரவு நேர விடுதி ஒன்றின் உரிமையாளர் என்பது சுட்டிக்காட்ட தக்கத.






வழமை போலவே தனது வேலைகளை நிறைவு செய்துக்கொண்டு தனது சொந்த இரவு நேர  விடுதியில் இரவு 11.45 மணியளவில் தனது கடமைகளை செய்துக்கொண்டிருந்த அவரது இரவு நேர விடுதிக்கு சல சலவென பெட்ரோல் கூண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பதறியவாறு அவரும் அவரது விடுதி ஊழியர்களும் நடந்தது என்ன என கவனிக்க முற்படும் போது அவருக்கும் அவரது ஊழியர்களுக்கும் சரமரியக்ஹா தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது வந்தவர்கள் சுமார் 25 பேர் கொண்ட முக மூடி அணிந்த மர்மக் குழு.

கூரிய கோடரியினால்  நடத்தப்பட்ட தாக்குதலில் வசந்த சொய்சாவின் முகம் தலை யின் மீது பலத்த காயம் விளைவிக்கப்பட்டுள்ளது தவிர அவரது ஊழியர்களும்  பலத்த காயமடைந்து விட்டார்கள்.பிறகென்ன சம்பவத்தை மர்மமாக நடத்திவிட்டு சந்தேக நபர்கள் விடுதியில் உள்ள ரூபா ஒரு லட்சத்து 50 ஆயிரம் பணத்தையும் எடுத்தது மட்டும் அல்லாமல் விலையுயர்ந்த 5 மது பான போத்தல்களையும் திருடி விட்டு சென்று விட்டனர்.வசந்த சொய்சாவின் மகன் அவரை வைத்திய சாலைக்கு கொண்டு சென்ற போது சிகிச்சை அவர் உயிரிழந்தார்.அவரது ஊழியர்கள் 3 பேரில் ஒருவர்  தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு. மற்றைய 2வரும் அனுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விடயம் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிசார் தேடுதல் வேட்டைகளை ஆரம்பித்த  போது கூரிய வாழ்,ரத்தம் பதிந்த 04 தடிகள் ,கூரிய கோடரி என்பன மீட்க பட்டுள்ளதோடு சந்தேக நபர்களின் வாகனங்கள் (கார், முச்சக்கர வண்டி) என்பனவும் மீட்கப்பட்டுள்ளன.தவிர சம்பவ இடத்தில் நடந்த அணைத்து நிகழ்வுகளும் CCTV  காமெராவினால் பதிவாகி உள்ளன.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது குறித்த 25 சந்தேக நபர்களில் 2வர் ராணுவ வீரர்கள் என்றும் ராணுவத்திலிருந்து தப்பி வந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ள அதேவேளை 08 பேர் கைது செய்யபட்டுள்ளதாகவும் 06வரிடம் விசாரணைகள் மேட்கொள்ளப்பட்டு வருவதாகவும் எஞ்சிய 15 சந்தேக நபர்களையும்  விசேட போலீஸ் குழு   தேடி வருவதாகவும் தெரிவிக்கபட்டுள்ளது.

கைதான சந்தேக நபர்கள் தையாகம,மஸ்மடுவ,விஜயபுரம் மற்றும் பாலன்குலம் பகுதிகளை சேர்ந்தவர்கள் என முதற்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.மேலும் இதில் இருவர் அவரது இரவு விடுதிக்கு பக்கத்தில் சொந்தமாக இரவு நேர விடுதிகளை நடத்திவந்துள்ளதகவும், தனிப்பட குரோதம் காரணமாகவே இந்த திட்டமிட்ட கொலை நடை பெற்றிருக்கலாம் எனவும் போலீஸ் ஊடக பேச்சாளர் காரியாலய தகவல்கள் தெரிவிக்கின்றன. எது எவ்வாறு இருப்பினும் இனிமேல் கராத்தே துறையில் வசந்த சொய்சா இல்லை, எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு சிறந்த கராத்தே வீரர் மண்ணை விட்டு பிரிந்து  விட்டார்.
சேவாக் எனும் இமயம் இனி மேல் இல்லை .

ஒருகாலத்தில் கங்குலி- சச்சின் கூட்டணி என்பது சில காலங்களில் மாறி ஷேவாக்- சச்சின்  ஆரம்ப துடுப்பட்ட வீரர்களாக  களமிறங்கியபோது ''யார் இவன் என்று உலகமே அதிசயித்த வரலாறுகள் ஏராளம். சச்சினைப் போலவே விளையாடுறான் என ஆரம்பித்து,  சச்சினையே முந்தி விடுவனோ  என்று அதிசயிக்கும் அளவுக்கு  பவுண்டரிகளாலும், சிக்ஸர்களாலும்  அதிசயிக்க வாய்த்த ஒரு சிறப்பான துடுப்பட்ட வீரர் ஷேவாக். சச்சின் 90 ஓட்டங்களை   நெருங்கியதும்  சதம் கடப்பதற்காக  தடுமாறும் போது  சாதரணமாக சிக்சர்களைத் பறக்க விட்டு  சதம், இரட்டை சதம், முச்சதம் என எதற்கும் எந்த ஆர்ப்பட்டமும்  காட்டாமல்  துடுப்பாட்டத்தில் மிரட்டியவர். பூஜ்ஜியத்தில் இருந்தாலும் சரி, 99 ஓட்டங்களில் இருந்தாலும்சரி , 295 ரன்களில் இருந்தாலும் சரி அவரது துடுப்பு பந்தை பதம் பார்க்குமே தவிர பணியாது காரணம் அவரது துடுப்புக்கு எதிரணி பந்து வீச்சாளர்கள் பயந்து நடுங்கிய வரலாறுகள் பல.


1999-ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக முதல் ஒருநாள் போட்டியில் அறிமுகமானவர  ஷேவாக். ஆரம்பமே அபசகுனம்தான். 1 ரன்னில் ஆட்டமிழந்தார்.பந்துவீச்சு சொல்லவே வேண்டாம் சொதப்பலோ சொதப்பல். அடுத்த ஒன்றரை ஆண்டுகள்,  இந்திய அணியில் ஆடும் வாய்ப்பே ஷேவாக்குக்கு கிடைக்கவில்லை. 2001-ஆம் ஆண்டு காலில் ஏற்பட்ட காயம் காரணமாக சச்சின் டெண்டுல்கர் இந்திய அணியில் இல்லை. நியூசிலாந்து, இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடருக்காக இந்திய அணி இலங்கை வந்தபோது . கங்குலியுடன் துடுப்பாட்ட  வீரராக யாரை களமிறக்குவது என இந்திய அணிக்குள் பல குழப்பம் . யுவராஜ் சிங், அபய் குரசியா என யார் யாரையோ எல்லாம் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக இந்திய கிரிக்கெட் சபை தெரிவு செய்து வைத்திருந்தது. எனினும் ஒரே ஒரு வாய்ப்பு தான் சேவாகுக்கு வழங்கப்பட்டது.நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய  நியூசிலாந்து 260 ஓட்டங்கள் எடுக்க . தனக்கு தரப்பட்ட  69 பந்துகளில் 100 ரன்கள் அடித்து அந்த ஆட்டத்தில் ஆட்டநாயகனாக தன்னை உயர்திக்கொண்டர் ஷேவாக். அதன்பிறகு இந்தியாவின் நிரந்தர ஆரபதுடுப்பட்ட வீரர் ஷேவாக்தான்.

கிரிக்கெட் ஜென்டில்மேன்களின் விளையாட்டு என்பார்கள். ஆனால், கிரிக்கெட்டை ஜென்டில்மேன்களைத் தாண்டி எல்லோரும் ரசிக்கும் விளையாட்டாக மாற்றியவர்கள் ஒரு சிலரே. அதில் மிக முக்கியமானவர் வீரேந்திர ஷேவாக். , 'டெஸ்ட் போட்டியிலும் ஆக்ரோஷம் காட்ட முடியும் அதிரடியாக துடுப்பெடுத்தடினால்  ஒருவரால் 300 ரன்கள் குவிக்க முடியும்' என்று ஆச்சரிப்படுத்தியவர் ஷேவாக். டெஸ்ட் போட்டிகளில் மட்டும் இரண்டு முச்சதங்களும், மூன்று இரட்டை சதங்களும் விளாசியிருக்கும் அன் டிப்ளோமேட்டிக் பேட்ஸ்மேன் ஷேவாக்.

இலங்கை சுற்றுப்பயணத்தின் போது அஜெந்தா மென்டிஸ் என்னும் புதிய சுழற்பந்து வீச்சாளரைப் பார்த்து இந்திய வீரர்கள் நடுங்கிக்கொண்டிருந்த சமயத்தில்  மென்டிஸை துவம்சம் செய்தவர் ஷேவாக். ''சுழற்பந்து வீச்சாளர்களை நான் பந்துவீச்சாளர்களாகவே கருதுவதில்லை. சுழற்பந்து வீச்சாளர் என்பவர் துடுப்பாட்ட  வீரரால் தான்  உருவாகிறார். அவர் பந்தை சுழல்வதற்கு முன்பே அடித்துவிட்டால் அப்புறம் ஏது சுழற்பந்து. பந்து சுழல்வதற்கு முன்பாகவே தூக்கி கிரவுண்டுக்கு வெளியே அடித்தால் ஒருவர் எனக்கு வாழ்நாள் முழுக்க ஸ்பின்னே போடமாட்டார்" என்று சொல்லி சுழற்பந்து வீச்சாளர்களை கதிகலங்க வைத்தவர் சேவாக்.

''எனக்கு டெக்னிக்ஸ் மீது நம்பிக்கை கிடையாது. நான் பர்ஃபாமென்ஸின் மீது நம்பிக்கை கொண்டவன். நீங்கள் ஸ்ட்ராங்காக இருந்தால்போதும், டெக்னிக் இருந்தாலும் இல்லாவிட்டாலும் உங்களால் சமாளிக்க முடியும். என் வாழ்க்கையில் நடந்தது அதுதான். பத்தாம் வகுப்பு படித்து முடித்தபின்னர்தான் நான் சீரியஸாக கிரிக்கெட் விளையாட பயிற்சியாளரிடம் சேர்ந்தேன். டெக்னிக்ஸை கற்றுக்கொள்ள எனக்குப் பொறுமையில்லை. பந்தை எப்படி போட்டாலும் பௌண்டரி லைனை  தாண்டி அடிக்கவேண்டும் என்பதில்தான் என் கவனம் இருக்கும். சர்வதேச கிரிக்கெட் விளையாட வந்தபோதும் என் ஸ்டைலை, என் அணுகுமுறையை  நான் மாற்றிக்கொள்ளவில்லை. சில தொடர்களில் நான் சரியாக ஆடாதபோது டெக்னிக்ஸ் வேண்டும் என்று சொல்வார்கள். அடுத்தப்போட்டியிலேயே சதம் அடித்துவிட்டால் ஷேவாக்கின் ஸ்டைல் இதுதான் என்பார்கள். இங்கே எதற்குமே இதுதான் ஃபார்முலா என்று இல்லை. ஃபார்முலாக்களை நம்பினால் சில நேரங்களில் மட்டுமே வெற்றி கிடைக்கும். உங்கள் திறமையை நம்பினால் எப்போதுமே வெற்றிதான்" என்பது ஷேவாக்கின் சக்ஸஸ் சீக்ரெட்.

மிகச்சிறந்த என்டர்டெய்னர், அசைக்கமுடியாத மேட்ச் வின்னர் ஷேவாக். அப்பர் கட் ஷாட்டை மிகச்சரியாக விளையாடியவர், விளையாடுபவர் . மைதானத்தில்  ஒரு இடத்தில் ஷேவாக் நிலையாக நின்று ஆடவே மாட்டார். கால்கள் நகர்ந்துகொண்டே இருக்கும். இதனால் அவரது பின்காலில் ஒரு பெரிய கோதுமை மூட்டையைக் கட்டி விட்டுவிட்டு முன் காலைப் பயன்படுத்தி ஆடவைத்தோம். அதன்பிறகு ஃப்ரன்ட் ஃபூட்  மட்டும் அல்ல, பேக் ஃபூட், அப்பர் கட், அக்ராஸ் தி லைன் என பந்துகளை நொறுக்கித்தள்ள ஆரம்பித்துவிட்டார் ஷேவாக்" என்கிறார் ஷேவாக்கின் பயிற்சியாளர் அமர்நாத் ஷர்மா.


கிரிக்கெட் மைதானத்தில் ஷேவாக் அடித்த முச்சதங்கள், இரட்டை சதங்களைத்தாண்டி அவரது முக்கியமான இன்னிங்ஸ்கள் பல இருக்கின்றன. தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக அறிமுகமான முதல் டெஸ்ட் போட்டியிலேயே, அதுவும் தென் ஆப்ரிக்காவின் ப்ளூம்ஃபான்டின் மைதானத்தில் 105 ரன்கள் விறுவிறுவென அடித்து டெஸ்ட் போட்டியில் தனக்கான இடத்தைப் பதிவு செய்தார் ஷேவாக். டெஸ்ட் போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் விளாசிய இந்திய வீரர்  ஷேவாக்தான்.
உண்மையில் இந்திய கிரிக்கெட் சபை சச்சினுக்கு  எவ்வாறு ராஜா மரியாதையை செய்து வைத்தோ அது போன்றே சேவாகுக்கும் செய்திருக்க வேண்டும்.
ஷேவாக் என்பவர் யார்? அதிரடி என்றல் சேவாக் தான்.ஷேவாக் ஒரு கிரிக்கெட் வரலாற்றில் ஒரு  ஜீனியஸ். அவரது ஆட்டத்தை அவரது ஸ்டைலில் இன்னொருவர் எந்த காலத்திலும் இனி ஆடவே முடியாது. ஷேவாக் என்பது பெரும் கனவு.அந்த கனவு ஓய்வை அறிவித்து விட்டது. வாழ்த்துக்கள் கூறி வழியனுப்பி  வைப்போம் ஒரு சிறந்த கிரிக்கெட் வீரனை.





Wednesday, October 21, 2015







சிவபெருமானுக்குரிய அஷ்ட மஹா விரதங்களுள் கேதார கௌரி விரதமும் ஒன்று. நாம் எல்லோரும்  கொண்டாடும் தீபாவளிதான் அதாவது ஐப்பசி அமாவாசை நாள்தான் கேதார கௌரி விரத நாள்.எனவே அந்த சிறப்பான விரதம் இன்று ஆரம்பித்து விட்டது. எனவே அது தொடர்பான பதிவு.

கேதார கௌரி விரதம் அம்மை கௌரியே அனுஷ்டித்த விரதம்.அம்மை ஐயனின் இடப்பாகம் பெற்று அர்த்தநாரீசுவராக ஆன வரலாறு இதோ பின்வருமாறு.

பிருங்கி முனிவர் அதி தீவிரமான சிவ பக்தர். அவரை  தவிர சிவன் மீது அன்பு வைத்த,பக்தி கொண்ட  ஒரு சிவ பக்தர் கிடையாது என்ற அளவுக்கு சிவ பக்தர் அவர்.சிவனைத் தவிர வேறு யாரையும் வணங்கமாட்டார். ‘ஆதியும் அந்தமும் இல்லாத நாயகன் என் கயிலைநாதன்தான் என்று பல தடவைகள் அவரது சகாக்களிடம் ( முனிவர்கள்) சீடர்களிடம் கூறுவார். அவனன்றி ஓர் அணுவும் அசையாது’ என்றெல்லாம் உள்ளார்ந்த பக்தியுடன்,ஆலவாய் அழகனை மட்டுமே துதித்து வந்தார். பிற கடவுளர்களை சற்றும் சிந்திக்காத அவருடைய போக்கு, சிலசமயம் அக்கடவுளர்களையே அவமதிக்கும் வகையிலும் அமைந்ததுண்டு.
ஒரு சமயம் -பார்வதிதேவியார்  கயிலாயத்தில் தன் கணவருடன் அமர்ந்திருக்கும்போது, பிருங்கி முனிவர் நேராக வந்து சிவனை மட்டும் வணங்கி வலம் வருவதும், தன்னைத் திரும்பியே பார்க்காமல் போவதும்  பார்வதி தேவிக்கு  மன வருத்தத்தைத் தந்தது.


எப்படியாவது பிருங்கி முனிவரை, தன்னையும் வணங்கச் செய்யவேண்டும் என்று விரும்பிய உமையவள், பெரு மானிடம் நெருங்கி அமர்ந்துகொண்டாள். இப்படி அமர்ந்திருக்கும்போது, தன்னைத் தவிர்த்து இவரை மட்டும் பிருங்கி  முனிவரால் எப்படி வலம் வர முடியும்? என்று நினைத்தாள்.
வழக்கம்போல பிருங்கி முனிவர் வந்தார். சிவனோடு உமையவள் நெருங்கி வீற்றிருப்பதைப் பார்த்தார்.  என்ன  செய்வது என்று குழம்பினார். பிறகு தெளிவாகி, ஒரு வண்டாக உருவெடுத்தார். இருவருக்கும் இடையே புகுந்து  சிவனை மட்டும் வலம் வந்தார்.

இதைக் கண்டு கடுமையான கோபம் கொண்ட தேவி . சக்தியும் சிவனும் ஒன்று என்ற தத்துவம் புரியாமல், தன் தலைவனை மட்டும்  வணங்கும் இந்த முனிவரின் ஆணவத்தை அடக்க எண்ணினாள்.  தன்னை அவமானப்படுத்திய முனிவரின் கால்கள்  முடமாகிப் போக சபித்தாள்.

அது உடனே பலித்தது. ஆனாலும், தன் பக்தனை அந்த நிலையிலேயே விட்டுவிட  இறைவனுக்கு சம்மதமில்லை. அவரது கால்களை சரிசெய்ததோடு, மூன்றாவதாக ஒரு காலையும் உருவாக்கித் தந்தார்.  அதோடு ஒரு கோலையும் அளித்து, பிருங்கி முனிவர் ஊன்றிச் செல்லவும் வழி செய்து கொடுத்தார்.

தன் கணவர் முனிவருக்கே ஆதரவாக நடப்பதைப் பார்த்து அன்னை வெகுண்டாள். உடனே, தன்னை அவருடைய  முழுமையான அன்புக்கு உரியவளாக ஆக்கிக் கொள்ள தீர்மானித்தாள். அதற்கு தவமே சிறந்த வழி என்று நம்பி,  பூலோகத்திற்கு வந்தாள். ஒரு வயல்வெளியைத் தேர்ந்தெடுத்தாள். சிவனை எண்ணி தவமிருந்தாள்.

கடுமையான தவம். அன்னையின் தவக் கடுமையினால் சுற்றி இருந்த மரங்களும், செடிகளும், கொடிகளும் கருகித்  தீய்ந்தன. மனம் இளகினார் மகாதேவன். மேலிருந்து இறங்கி வந்தார். உமையவளுக்கு தரிசனம் தந்து அவளை ஆட் கொண்டார். ‘ஒரு நாளும் உமைப் பிரியாத வரம் வேண்டும்’ என்று வேண்டினாள் அன்னை. ‘தந்தேன்’என்றார்  மகாதேவன்.


“உங்களைப் ‘பிரியாத’ என்றால் அருகிலேயே இருப்பதல்ல, உடலோடு ஒன்றியதாக... உடலைவிட்டுப் பிரிக்க  முடியாதவளாக...” என்று மகாதேவி வரம் கேட்டாள். புரிந்துகொண்டார் பரமன். உடனே அவள் வேண்டிய வரத் தை அளித்தார். அர்த்தநாரீஸ்வரர் ஆனார்.
தேவிக்கு சந்தோஷம். இனி பிருங்கி முனிவரல்ல, யாருமே என்னை என் தலைவனிடமிருந்து பிரிக்க முடியாது. சிவன்  வேறு, சக்தி வேறு என்று பிரித்துப் பார்ப்பவர்கள்,  இனி இரண்டும் ஒன்றே என்பதை பரிபூரணமாக உணர வேண் டும் என்று சிவனுடன் சேர்ந்து விதி செய்தாள்.
இவ்வாறு அம்பிகை, இறைவனின் உடலில் ஒரு பாதியாகி, கணவனிடமிருந்து எந்நாளும் பிரிக்க முடியாத பந்தத்தை  உருவாக்கிக் கொண்ட நாள்தான் கேதார கௌரி விரத நாள்.
கேதரம் என்றால் வயல். கௌரி என்ற பார்வதி வயல்வெளியில் தவமிருந்து சிவபெருமானின் அருளைப் பெற்றதால்  இந்த விரதம் ‘கேதார கௌரி விரதம்’ என்று மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தம் மாங்கல்ய பலம் நீடிக்கவும், தன் மீதான கணவரின் அன்பு என்றும் குறையாது நிலைத்திருக்க வேண்டும் என்ற  வரத்தைப் பெற கேதார கௌரி விரதத்தை சுமங்கலிகள் கடைபிடிக்கிறார்கள். அன்றைய தினத்தில், பண்டிகைக்கான பூஜைகளுக்குப் பிறகோ அல்லது முடிந்தால் அதற்கு முன்னதாகவோ,  பூஜையறையில் விளக்கேற்றி, சிவபெருமான் படம் அல்லது லிங்கம் அல்லது சிவ - பார்வதி படத்தின் முன்  பக்தியுடன் அமர்ந்து தியானம் செய்ய வேண்டும்.


சிவ துதிகளைப் பாட வேண்டும். அம்மன் - சக்தி பாடல் களைப்  பாடவேண்டும். ‘ஓம் நமசிவாய, சிவாய நம ஓம், ஓம் நமசிவாய சிவாய நம ஓம்’ என்று பஞ்சாட்சர மந்திரத்தை அன்று முழுவதும் ஓதிக் கொண்டே இருக்க வேண்டும்.  முடிந்தால், சிவலிங்கத்திற்கு பால் அபிஷேகம் செய்யலாம். அந்த அபிஷேகப் பாலையே பிரசாதமாக அருந்தலாம், கு டும்பத்தில் பிறருக்கும் கொடுக்கலாம். பாயசம் அல்லது அப்பம் நைவேத்யம் செய்யலாம். தம் கணவர் மற்றும் தம் குடும்ப உறுப்பினர் அனைவரது நலனுக்காகவும் உமையொரு பாகனை வேண்டிக் கொள்ளலாம்.

இந்த விரத்ததின் ஏனைய சிறப்புக்கள்.

மஹா விஷ்ணு இவ்விரதத்தை அனுஷ்டித்தே வைகுண்டபதியாகி இருக்கிறார்.பிரம்ம அன்னத்தை வாகனமாக பெற்றிருக்கிறார். அஷ்ட திக் பாலகர்கள் பிரம்மனிடமிருந்து பெற்ற சாபத்திலிருந்து விமோசனம் அடைந்ததும் இவ்விரத மகிமையினால்தான். தவிர  இந்திரன் அனுஷ்டித்து பொன்னுலகை ஆண்டு வெள்ளை யானையினையும் வாகனமாகக் கொண்டார். இவ்விரதத்தின் மகிமையை இதுதான் என யாராலும் வரையறுத்துக் கூற இயலாது. இவ்விரதத்தினை அனுஷ்திப்பதால் ஐஸ்வரியம் பெருகும் என்பது திண்ணம்.வறுமையொழியும், நினைத்த காரியம் கை கூடும் என்பது அனுபவ உண்மை. அந்நாளில் அம்பிகை மலையரசன் பொற்பாவை சிவபெருமானை நோக்கி “எம்பெருமானே இவ்விரதத்தை உலகில் யார் அனுஷ்டித்தாலும் அவர்கள் விரும்பியவற்றை அருள வேண்டும்” என்று வேண்டிக் கொண்டாள். சிவபெருமானும் அம்பிகையின் வேண்டுகோளை ஏற்று அவ்வண்ணமே அருள் புரிந்தார்.இப்போது புரிகிறதா இந்த விரதத்துக்கு இவ்வளவு மகிமை இருக்கிறது என்று.

சிவபெருமானின் அருகேயுள்ள நந்திகேசர் இவ்விரத மகிமையை சிவபக்தனான கந்தர்வராஜனுக்கு கூறியருளினார். விரதத்தை அனுஷ்டித்துப் பெருமானை அடைந்த கந்தர்வராஜனும் மானிட உலகில் இவ்விரத்தைப் பரப்ப எண்ணி பூலோகத்தில் உஜ்ஜயனி பட்டணத்தின் மன்னனுக்கு கூறினான். மன்னனும் இவ்விரத்தினால் சிறந்த சுகபோகங்களைப் பெற்றான். மேலும் உஜ்ஜயனி தேசத்து புண்ணியவதியும், பாக்கியவதியும் இவ்விரதத்தை அனுஷ்டித்தார்கள்.

இந்த விரதத்தின் மகிமை

சிரத்தையுடன் தம்பதிகள் சேமமாக இருத்தலும் பிணிநீங்கலும் வறுமை நீங்கி செல்வம் பெறுவதற்கும் கன்னியர்களுக்கு விரைவில் திருமணம் பெறுவதற்கும் சிவனருளைப் பரிபூரணாகப் பெறுவதற்கும் உகந்தது. கணவனும் மனைவியும் கருத்தொருமித்து ஒற்றுமையாக வாழவேண்டும் என்பதே இவ்விரத்தின் அடிப்படைத் தத்துவமாகும். இவ்விரதத்தினை அனுஷ்டிப்பதால் ஐஸ்வரியம் பெருகும். வறுமையொழியும், நினைத்த காரியம் கை கூடும் என்பது அனுபவ உண்மை.
 நல்ல ஆடவர்களை  கணவனாக வேண்டி கன்னி பெண்களால் இந்த விரதம் அனுஷ்டிக்க படுகிறது. ஆண்களும் தமது நலனுக்காக இந்த விரதத்தை அனுஷ்டிப்பது நல்லது.

Friday, October 16, 2015

இந்தியாவின் தலை சிறந்த பந்துவீச்சாளர் ஓய்வு பெற்றார்..

ஒரு சர்வதேச தரம் மிகுந்த ஒரு இந்திய பந்துவீச்சாளர் ஓய்வு பெற்று விட்டார். இந்திய இந்த நிலைமையில் தலை நிமிர்ந்து விளையாட  எண்ணற்ற பல வெற்றிகளை குவிக்க காரணமாகவும் இருந்த ஒரு வீரர் ஓய்வு பெற்று விட்டார். வாழ்த்துக்கள் சாகிர் கான்.2003, 2011 உலகக்கோப்பைகளில் மிக சிறப்பாக பந்து  வீசி முதன் முறை இறுதிப்போட்டிக்கு இந்திய அணி முன்னேறியதையும், 2வது  முறையாகவும்  இந்தியா உலகக்கிண்ணத்தை  வென்றதும் ஜாகீர் கானின் நினைவுகளை நம்மிடையே ஆழமாக்கும்.


சச்சின் டெண்டுல்கர் எப்படி பிரியாவிடையை மகிழ்ச்சியுடன், மனதிருப்தியுடன் ஈற்று கொண்டு ஓய்வு பெற்றாரோ அத்தகைய பிரியாவிடைக்கு உரியவர் சாகிர் கான்.இந்திய வரலாற்றில் ஒட்டு மொத்த இந்திய வரலாற்றில் கபில் தேவுக்கு பிறகு உலக அளவில் அதிக விக்கட்டுகளை கைப்பற்றிய வீரர் சாகிர் கான் தான்.வேக பந்துவீச்சு எப்போதுமே கிரிக்கெட்டுக்கு ஒரு பலம் என்பதை பல முறை நிரூபித்தவர் சாகிர் கான்.

எண்ணற்ற பலம் தலை சிறந்த விக்கட்டுக்களை கைப்பற்றி பல தலை சிறந்த துடுப்பாட்ட வீரர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தவர், தவிர தலை சிறந்த ஆஸ்திரேலிய துடுப்பாட்ட வீரர்களை குட ஒரு நிமிடம் ஸ்தம்பிக்க  வைத்த பந்துவீசி அசகாய சூரர் சாகிர் கான்.இப்படி இவரை பற்றி குறிப்பிட்டு கொண்டே போக முடியும் அவர் ஓய்வை அறிவித்து விட்டார் வாழ்த்துக்கள் மறுபடி மறுபடி சாகிர் கான்.

தனது ஓய்வு தொடர்பாக சாகிர் கான் அளித்த அறிக்கை வருமாறு,

ஒரு வீரருக்கு கடினமான தருணமே அவர் அந்த விளையாட்டை விட்டு ஓய்வு பெறுவது தான் எனக்கும் அந்த நிலைமை இப்போது வந்து விட்டது கடினமாக இருக்கிறது.எனது ஆரம்ப கால கிரிக்கெட் எனக்கு இனிமையாக நினைவிருக்கிறது. 1996-ம் ஆண்டு நேஷனல் கிரிக்கெட் கிளப் முதல் மும்பை அண்டர்-19 அணிக்கு அழைக்கப்பட்டது நினைவிருக்கிறது. அதன் பிறகு எம்.ஆர்.எஃப். வேகப்பந்து அகாடமியில் சில மாதங்கள் பயிற்சி பெற்றது, பரோடா அணிக்கு எதிரான எனது அறிமுக போட்டி, அதிலிருந்து மும்பை அணியை தலைமையேற்று நடத்தியது என்று ஒவ்வொரு ஆட்டத்தையும் நான் உற்சாகத்துடன் அணுகினேன். ஒவ்வொரு ஆட்டமும் என்னை வெளிப்படுத்திக் கொள்ள சிறந்த வாய்ப்பாகவே இருந்தது. கிரிக்கெட் களத்தில் ஒரு வீரனாக எப்போதும் மேம்பாடடையவே முயன்றேன்.




எனது மிக முக்கியமான தருணம் 2011 உலகக்கோப்பையை வென்று வரலாறு படைத்தது. நாங்கள் ஒரு சிறந்த அணியாக விளையாடினோம், இந்திய அணி ஒருநாள் கிரிக்கெட்டில் டாப் இடத்தைப் பிடித்த காலக்கட்டத்தில் விளையாடியது நிறைவைத் தருகிறது. இந்தியாவுக்காக டெஸ்ட் போட்டியை வென்று கொடுத்த கணங்கள் எனக்கு திருப்திகரமான காலங்களாகும். வெற்றி பெறுவது என்பது ஒரு போதை. எனவே இந்திய அணிக்காக வெள்ளைச் சீருடையில் பங்கேற்று இந்திய அணி நம்பர் 1 டெஸ்ட் அணியாக எழுச்சிபெற்றது எனக்கு மகிழ்ச்சிதரும் கணமாகும். எனது கனவைத் துரத்த என்னைப் புரிந்து கொண்ட எனது பெற்றோருக்கு எவ்வளவு நன்றி தெரிவித்தாலும் அது போதாது.



கடந்த 20 ஆண்டுகளாக கிரிக்கெட் மட்டுமே எனது வாழ்க்கை. உண்மையில் கூறவேண்டுமெனில் அது ஒன்றுதான் எனக்குத் தெரிந்தது. கிரிக்கெட்தான் நான் இப்போது உருவாகியிருக்கும் தனிமனிதனாக என்னை ஆக்கியது. எனக்கு வாழ்க்கையில் சகலத்தையும் அளித்தது, அளிக்கப்போவதும் கிரிக்கெட்தான். மிகச்சிறந்த நினைவுகளுடன் நான் விடைபெறுகிறேன்.

நீங்கள் இன்னும் மிக சிறந்த வீரராக விளங்குவீர்கள்.சலம் கூறி வலி அனுப்பி வைக்கிறோம்சாகிர் கான். மற்றுமொரு இந்திய அணிக்கு உங்கள் போல் பொறுப்புணர்ந்து விளையாடும் வீரர் வேண்டும்.