Wednesday, September 28, 2016

நூல் அறிமுகம். 
பர்வேஸ் முஷரஃப் பாக் கில் சிக்கிய பல்.

பாகிஸ்தானில் வருடம் முழுதும் உள்நாட்டு யுத்தம்,  கலவரம்,  தீ-வைப்பு, இனி இல்லை என்ற அளவுக்கு அநியாயங்கள்.  இவை அனைத்துக்கும் காரணம் அந்நாட்டின் முன்னாள் ஜனாதிபதி   பர்வேஸ் முஷரஃப்தான் என்கிறார்கள் மக்கள்.  யார் இந்த முஷாரப்  என்ற கேள்விக்கு சரியான அறிமுகத்தை வழங்குகின்ற  இந்த நூல் இராணுவ புரட்சி மூலம் உலகில் ஆட்சியை பிடித்த தலைவர்களில் முஷாரப்பியையும் கூறி நிற்பது சிறப்பானது.

1999ல் நவாஸ் ஷெரீஃபை ஆட்சியை விட்டு நகர்த்தி எரிந்து விட்டு முஷரஃப் ஆட்சிக்கு வந்தபோது பாகிஸ்தான் மக்கள் சந்தோஷமாகவே அவரை வரவேற்றார்கள். ஆனால் மிக விரைவில் அந்த சந்தோஷம் வெறுப்பின் உச்ச கட்டமாக  மாறிப்போனது. இதற்கான காரணங்கள் அடுக்கடுக்காக இந்த நூலில் திறம்பட கூறப்பட்டுள்ளது. 

ஆப்கனிஸ்தான் மீதான அமெரிக்கப் படையெடுப்பின் போது ஜார்ஜ் புஷ்ஷின் ஆதரவாளராக அவர் நின்றதில் தொடங்குகிறது இந்த வன்மம். பாகிஸ்தான் அடிப்படைவாதிகளால் முஷரஃபின் எந்த ஒரு முற்போக்கு முயற்சியையும் சகிக்கமுடியவில்லை. அவரை அடியோடு அளித்து விட அல்லது வேரோடு சாய்த்து விட பாகிஸ்தானில் மட்டுமல்லாது உலக நாடுகள் பலவற்றில் மிக முக்கியமாக  ரஸ்யாவால்  கூட  ஏராளமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

ஆட்சியில் நிலைப்பதற்காக முஷரஃபும் ஏராளமான தகிடுதத்தங்கள் செய்யவேண்டியதானது. அதற்கு   அமெரிக்காவின் கொடுமையான ஜனாதிபதியாக இன்றும்  அந்த நாட்டு மக்களால்   நிலை நிறுத்தப்படும் ஜார்ஜ்  புஷ்சும் மிக முக்கியமானதொரு காரணம். அவர் செய்த பல திகிடு திட்டங்களுக்கு முஷாரப்பும் உடந்தையாக  அருகில் நின்றார்.   இதன் போது தான் முஷாரப்  உலக நாடுகளின்  பழி சொல்லுக்கு ஆளாக்கப்பட்டார் . அவர் அத்தனை காலமும் சம்பாதித்து வைத்த பெயர் புகழ் மங்க தொடங்கியது.அந்தக் கணத்திலிருந்துதான்.

 அதனாலேயே அவர் உருப்படியாகச் செய்த பல நல்ல காரியங்கள் அடையாளமில்லாமல் போயின. 2007ம் வருடத் தொடக்கத்திலிருந்து முஷரஃபை முன்வைத்து பாகிஸ்தானில் நிகழ்ந்த பல சம்பவங்கள் அத்தேசத்தின் சரித்திரத்தை ரத்தப் பக்கங்களால் நிரப்புபவை. வாஜிரிஸ்தான் போர்களும் லால் மசூதித் தாக்குதலும் பாகிஸ்தானின் அப்போதைய உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பதவி நீக்கத்தை அடுத்து நடைபெற்ற ஏராளமான கலவரங்களும் இன்னபிறவும் இன்றும் நெஞ்சை  பாதை பதைக்கச் செய்யும் கோர நிகழ்வுகள்.

மிக முக்கியமாக பாகிஸ்தானின் முன்னாள்  அதிபர் பர்வேஸ் முஷர·பின் இந்த சுயசரிதை நூல் நமக்கு எடுத்துக்காட்டும் அறிமுகம்  யாதெனில் இந்த உலகம், பயங்கரங்களால் ஆனது என்பது மட்டும் இந்த நூலில் மிக நேர்த்தியாக விளங்கும். இப்படி அவர்  ஜார்ஜ்  புஷ்சும்டன்  நிரந்தரமான பிரிவை ஏற்படுத்திக் கொண்டு    பாகிஸ்தான் ஒரு பயங்கரவாத தேசமல்ல என்று பல முறை அழுத்தமாக உலகுக்கு கூற முயன்றாலும் , மத அடிப்படைவாதிகள் தொடங்கி, மண்ணை ஆண்ட மனிதர்கள் வரை அதனை ஏற்றுக் கொள்ள வில்லை. மிக முக்கியமாக இந்த நூலில் நூலாசிரியர் ........  தீவிரவாதத்துக்கு எதிராக அமெரிக்கா மேற்கொண்ட உலகு தழுவிய யுத்தத்தில் பாகிஸ்தான் பங்கெடுக்க நேர்ந்ததன் பின்னணியை வெகு நேர்த்தியாக விபரித்திருக்கிறார்.

இந்த நூலில் மூலமாக முஷாராஃபீன் பல முகங்கள் வெளியில் வரும். உதாரணமாக  , ராணுவத் தளபதியாக இருந்த காலத்தில் அவர் பயணம் செய்த விமானத்தை பாகிஸ்தான் பிரதமரே கடத்தச் சொல்லி உத்தரவிட்டு நடத்திய நாடகம், விமான எரிபொருள் தீர்ந்துகொண்டிருந்தபோது வானவெளியில் அவர் அனுபவித்த  விவரிப்புக்கு அப்பாற்பட்ட பதற்றம், மண்ணுக்கு வந்தபோது நிகழ்ந்திருந்த மாபெரும் ராணுவப் புரட்சி. முஷரஃப் ஒரு மிகத் தேர்ந்த சித்திரிப்பாளராகவும் இந்நூலின் மூலம் அறிமுகமாகிறார்.
தனது நினைவுத்தொகுப்பு நூலான 'In the Line of Fire' ல் முஷரஃப் சொல்லாமல் விடுத்த விஷயங்களையும் 'மாற்றி'ச் சொன்ன விஷயங்களையும் இந்த நூலை வைத்து நீங்கள் ஒப்பிட்டுப் பார்க்கலாம்.  முஷரஃபின் முழுமையான அரசியல் வாழ்க்கை  மாத்திரமன்றி சர்வதேச அரசியலில் ஆர்வம்  கொண்டர்வர்களுக்கான ஒரு பெட்டகம் இந்த நூல் என்பேன்.
நூல் அறிமுகம்.இபின் பதூதா.
வாழும்  காலத்தில் பயணம் செய்பவர்களை நாம் அறிவோம். ஆனால் பயணம் செய்வதற்காகவே வாழ்ந்தவர் இபின்  பதூதா. இன்று நாம் மேற்கொள்ளும் பயணங்களைப் போன்றதல்ல இப்ன் பதூதாவின் பயணங்கள். கால் கடுக்க நடக்க வேண்டும். பாலைவனங்களைக் கடக்கவேண்டும். கடலில் மிதக்க வேண்டும். எங்கும் ஆபத்து, எதிலும் ஆபத்து.ஓர் ஆராய்ச்சியாளருக்கு இருக்கவேண்டிய அத்தனை அம்சங்களும் இப்ன் பதூதாவிடம் இருந்தது. 
30 ஆண்டுக் காலம் பயணியாய், இரு கண்டங்கள், 44 நாடுகளில்   பனி உறைந்த மலைகள், சுட்டெரிக்கும் சகாரா மணல், நைல் நதியின் வெள்ளம், கொந்தளிக்கும் கடல் என்று கடந்து வந்தவர். யுவான் சுவாங் போல மூன்று மடங்கு பயணித்தவர்.
“மாபெரும் பறவையின் சிறகின் மீது இருப்பதாகக் கனவு கண்டேன்; அது என்னுடன் மெக்காவின் திசைவழியில் பறந்து பின்னர் ஏமனை நோக்கிச் சென்றது... இறுதியில் கிழக்கினை நோக்கி நீண்டு பயணித்து, பசுமையும் இருளும் கொண்ட நாடொன்றில் இறங்கி என்னை அங்கே விட்டுச்சென்றது” என்று பதூதா தன் குறிப்புகளில் எழுதுகிறார். நைல் நதியின் டெல்டா பகுதிக் கிராமம் ஒன்றில் இருந்தபோது அவரது பதிவு இது.
அவரது பயணம் பிரம்மாண்டமான பறவையுடன் சென்ற பயணமாகவும், பிரம்மாண்டமான பறவையின் பயணமாகவும் இருக்கிறது. “ஒரு பறவை தன் கூட்டிலிருந்து சிறகடித்துச் செல்வதுபோல், புனிதத் தலங்களைத் தரிசிக்கும் வேட்கையுடனும் உறுதியுடனும், உற்றார் உறவினிடமிருந்து பிரிந்து புறப்பட்டேன்.” இப்புறப்பாடு அவரது 21 வது வயதில்.என்று அவரது மொழியில் அவர் பற்றி அவரது பயணங்கள்  பற்றி எழுதிய ஆதாரங்கள் தான் இந்த நூலில் முலிடம் பிடித்திருக்கின்றன.


மேலும் இபின் பதூதா தனது பயணத்தை ஆரம்பித்தமைபற்றி இந்தநூல் இவ்வாறு சான்றுகளை பகர்கின்றது. அதாவது ஷேக்அபு அப்துல்லா முகம்மது இபின் அப்துல்லா இபின் முகம்மது இபின் இப்ரஹிம் அல்-லாவதி என்னும் முழுப் பெயருடைய இபின் பதூதா மொராக்கோவின் டாஞ்சியர்ஸ் நகரிலிருந்து மெக்காவிற்குப் புனிதப் பயணம் மேற்கொள்ளத் தொடங்குகிறார். வழக்கறிஞர் குடும்ப மரபில் வந்தவராதலால், மெக்காவில் சட்டத் துறை அறிவை மேம்படுத்திக்கொள்ளும் ஆசையைக் கொண்டிருந்தார்.


டுனிஷ், அலெக்ஸாண்டியா, கெய்ரோ, பெத்லகேம், ஜெருசலேம், டமாஸ்கஸ், பாரசீகம், பாக்தாத், ஏமன், ஓமன், ரஷ்யா, ஆப்கானிஸ்தானம், இந்தியா என்று அவரது வழித்தடம் விரிந்துகொண்டே போகிறது. இதற்கிடையே மூன்று முறை ஹஜ் பயணம் மேற்கொள்கிறார். இரண்டாண்டுகள் மெக்காவில் தங்கிச் சட்டம் படிக்கிறார்.


30 ஆண்டுகள் பயணிக்க ஒருவருக்கு எவ்வளவு வசதி வாய்ப்புகள் இருக்க வேண்டும்! ஆனால் பதூதாவைப் பொறுத்தவரை அப்படி இல்லை. சாதாரண குடும்பத்தவரான பதூதாவுக்கு, ஓர் அறிஞர் என்ற வகையில் அவர் செல்லும் நாடுகளின் மன்னரெல்லாம் உதவுகின்றனர். ஒரு மன்னர் குதிரையும் இரு தங்க நாணயங்களும் அளித்தால் இன்னொருவர் பட்டாடை அணிவித்துப் பல்லக்கில் அழைத்துச் செல்கிறார். 

அரண்மனையில் தங்கி எவ்வளவு நாட்களையும் கழித்துவிடலாம்.இந்தியாவில் முகமது பின் துக்ளக் ஆட்சிக் காலத்தில் வந்த அவர், ஏழாண்டுகள் நீதிபதியாக இருந்திருக்கிறார். மாலத்தீவுகளில் 18 மாதங்கள் நீதிபதியாகப் பணியாற்றியிருக்கிறார். துக்ளக்கின் தூதுவராகப் பெரும் பரிவாரம், பரிசுப் பொருட்களுடன் சீனம் சென்று வந்திருக்கிறார்.


மேலும்  பனி மூடியிருக்க, 40 நாட்கள் கடின பயணத்தினால் இந்தியா வந்த போது மொகலாய சாம்ராஜ்யத்தின் மாமன்னர்  துக்ளக்கின்  கோபத்துக்கு ஆளான வரலாறுகள் பற்றிய தக்வல்களும் இந்த நூலில் மேலதிக தகல்களாக சேர்க்கப்பட்டுள்ளன. இஸ்லாத்தின் மிகப் பெரிய பயணி இவர் என்று யாரேனும் கூறினால் அது பொய்யில்லை” என்று அந்தக் குறிப்புகள் முடிகின்றன.
 மார்க்கோபோலோவின் பயணக் குறிப்புகளில்கூடச் சந்தேகங்களும் குழப்பங்களும் உண்டு. ஆனால் பதூதாவின் குறிப்புகள் துல்லியமானவை என்று இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

“வாழ்வென்பது தூய சுடர், நமக்குள்ளேயிருக்கும் புலப்படாத சூரியனால் நாம் வாழ்கிறோம்” என்பார் தாமஸ் பிரவுன். அத்தகைய சூரியன் பதூதாவுக்குள் கனன்றுகொண்டிருந்திருக்க வேண்டும்.
தேடல், புதிய பிரதேங்களை, புதிய மனிதர்களைச் சந்திக்கும் ஆர்வம். கூடுதலாக, உள்ளம் முழுக்க உறுதி.வரலாற்று துறைக்கு சார்ந்தவர்களுக்கு எஸ். சந்திரா மௌலியின் இந்த நூல் வரமே. 

Sunday, July 17, 2016

நூல் அறிமுகம்.

போராளிகள்

மனித சமுதாயத்தின் நலனுக்காக தன்னை முழுமையாக அர்பணித்துக் கொள்பவர்கள் போராளிகளாக அடையாளம் காட்டப்படுகிறார்கள். மனித உரிமைக்காக அடக்கு முறைகளை சர்வாதிகாரங்களை எதிர்த்து அதில் வெற்றி கண்டவர்களுக்கு உலக வரலாற்றில் என்றென்றும் நிரந்தர இடமுண்டு.


ஏற்றதாழ்வுகள் நிறைந்த மனித குலத்தில் உரிமைகள் மறுக்கப்பட்ட சமுதாயத்துக்காக  போரட்டத்தை முன்னெடுக்கும் போது ,அந்த சமுதாயத்தின் பிரதிநிதியாக முன்னின்று போராடியவர்கள் விடுதலையின் விடியலாக உருவெடுக்கிறார்கள். அத்தகைய போராளிகள் ஒடுக்கப்பட்டோரின் விடுதலைக்காகவும் பென்னுரிமைக்க்காகவும் கல்வி உரிமைக்காகவும் போராடி உரிமையை வென்றெடுக்கிறார்கள்.
இது போன்ற உரிமை போரில் களத்தில்  நின்றவர்களில் ஏராளமான பெண்களும் இருக்கிறார்கள். இத்தகைய புரட்சி பெண் போராளிகள் பலர் உலகப் பெண்களுக்கு முன் உதாரணமாக திகழ்கிறார்கள். அந்த பெண் போராளிகளின் விபரங்களையும் அவர்கள் எந்தெந்த துறையில் தமது உரிமைகளுக்காக போராடினார்கள் என்பது தான் போராளிகள் நூல்.
 
குறிப்பாக மகாத்மா காந்தியின் துறையில் அகிம்சை வழியில் போராடி கடும் காவல் சிறை தண்டனை பெற்று தமது மக்களுக்காக உரிமைகளை பெற்ற மியன்மாரின் ஆன் சாங் சூகி. மணிப்பூர் மண்ணில் உண்ணாநிலை அறப்போரில் பத்தாண்டுகளாக ஈடுபட்டு வரும் ஜெரோம் ஷர்மிளா போன்றவர்கள் போராட்டத்தின் உச்சகட்டத்தை தொட்டு தமது கொள்கைகளில் வென்று காட்டியவர்கள்.
மேலும் மருத்துவர் பினாயக் சென் , கல்வி போராளி பெண்களின் ஆதர்ஷ நாயகி மலாலா ,வெனிசுலாவின் பொது உடமை போராளி சாவேஸ் ,இந்தியாவின் விடுதலைக்காக  விளிம்பு நிலை மக்களுக்காக தன வாழ்நாளை அர்பணித்துள்ள சமூகப் போராளி மேதா பட்கர் ,சுற்று சூழல் போராளி வங்காரி மாதாய் ,எழுத்து இலக்கிய போராளி அருந்ததி ராய் ,ஆகியவர்கள் குரிப்பிடத்தக்க்கவர்கள்.

 இவர்கள் போராளி ஆனது எப்படி? அவர்களது போராட்டம் எவ்வளவு காத்திரமானது என்பதனை மு.செந்திலதிபனின் இந்த நூல் விபரிக்கிறது.  வெறுமனே விமரசனங்களை மட்டுமே விமர்சித்து பழகி இருக்கின்ற நமக்கு போராளிகள் நூல் நல்லதொரு புரிதலை ஏற்படுத்தும்.


Sunday, May 29, 2016


               இடி அமின்.

உகாண்டா மக்கள் மட்டுமல்ல உலகமே உச்சரிக்க பயந்த ஒரு பெயர் இடியமின். இந்த கொடூர மனிதர் தான் இறக்கின்ற வரைக்கும் கொன்றொழித்த மனித உயிர்களின் எண்ணிக்கை மட்டும் சுமார் ஒரு லட்சம் முதல் ஐந்த லட்சம் வரை இருக்கும் என வரலாற்றியர்கள் கணக்கெடுக்கிறார்கள். மனித ரத்தம் குடிப்பார் , மனித உடல் பாகங்களை தின்பார் ஒட்டு மொத்தத்தில் நர மாமிசம் தின்னும் ஒரு மனிதரை பற்றிய ஆவணம் இந்த புத்தகம்.

இடியமின் குறித்த வதந்திகளும் கட்டுக்கதைகளும் மிக அதிகம் என்றாலும் உகாண்டாவின் சர்வாதிகாரியாக அவர் ஆட்சியில் இருந்தக் காலத்தில் அரங்கேறிய இனப் படுகொலைகளும் , அரசியல் அராஜகங்களும் ,பல உகாண்டா இளம் பெண்கள் மீதான கற்பலிப்புக்கலுக்கும் மனித உரிமை மீறல்களுக்கும் வலுவான ஆதாரங்கள் இன்றும் இடியமின் மீது முன்வைக்கப்படுகின்றன. 

எதிர்ப்பவர்களை மட்டுமல்ல தன்னை எதிர்க்க நினைப்பவர்களையும் அமின் என்ற கொடுங்கோலன் அழித்திருக்கிறான்.
இவ்வாறு நூலில் மொத்தம் பதினோரு தலைப்புக்களில் இடியமின் பற்றி குறிப்பிடப் பட்டிருக்கின்ற தகவல்கள் அனைத்தும் உண்மையில் ஒரு நிமிடம் நம்மை சஞ்சலப் படத்தான் வைக்கின்றன.சாதாரண ஒரு சமையல் காரனாக தனது வாழ்க்கையை தொடங்கி படிப்படியாக உகண்டா ராணுவத்தில் ராணுவ வீரர்களுக்கு பணிவிடை செய்தது,ராணுவ சிப்பாய் அதன் பின்  ராணுவ வீரனாக மாறியது பின்பு ராணுவ சார்ஜன் , தலைமைப் படை அதிகாரி, படை தளபதி, பில்ட் மார்ஷல் உகாண்டா நாட்டின் ஜனாதிபதி என்று தொடர்கின்ற நூலில் இடியமின் பற்றிய தகவல்கள் வாசிப்பை தூண்டுகின்றன.

இடியமினின் மிக முக்கிய பலமே எந்த சந்தர்ப்பத்திலும் யார் முன்னேயும் அமைதியுடனும் , ஆரவாரமின்றியும் நடந்துக் கொள்வது தான். இவ்வாறாக அடிமை சங்கிலி என்று தலைப்பிடப் பட்ட கட்டுரையில் இடியமின் ராணுவ தளபதியான வரலாறும் , வளர்த்த கடா என்ற கட்டுரையில் அரசாங்கத்தை கவிழ்த்து தான் சர்வாதிகாரியாக ஆனமை பற்றியும், இந்தியனே  வெளியேறு என தலைப்பிடப் பட்ட கட்டுரையில்  இந்தியர்களை இடியமின் எவ்வாறு எல்லாம் சித்திரவதைகள் படுத்தினார் அதற்கான காரணங்கள் என்ன ? போன்ற தகவல்களும் காதல் காமம் கொலை என்ற தலைப்பிடப் பட்ட கட்டுரையில் இடியமினின் மனைவிகள் , அவரது ஆசைக்கு அடங்கிய இளம் பெண்கள், அவரால் கற்பழித்து கொலை செய்யப் பட்ட பெண்களின் எண்ணிக்கை என்று தகவல்கள் நீள்கிறது நூலில்.

இஸ்ரேல் கொடுத்த அடி, பேராயர் கொலை , மனிதக் கறி , ஓடிப் போனமை , ஒழிந்தமை ,இறந்தமை உகாண்டாவில் சுதந்திரக் காற்று என மேலதிகமாக இருக்கின்ற தலைப்புக்கள் அனைத்தும் இடியமினின் கொடுமைகளை கண் முன் நிறுத்துகின்றன.

இடியமின் செய்தது சீர் திருத்தமா , சீரழிவா என்பதை உலகம் என்றுமே புரிந்துக் கொள்ள வில்லை. உண்மை தெரிய வந்தப் போது ஒரு தேசம் அங்கெ அழிந்துக் கொண்டிருந்தது. ஹிட்லர் , முசோலினி வரிசையில் மனித குலத்துக்கு பெரும் நாசம் விளைவித்த சர்வாதிகாரியான இடியமினின் வாழ்க்கையை உகண்டா தேசத்தின் வரலாறோடு சேர்த்து தந்திருக்கிறார் நூலாசிரியர் ச.ந கண்ணன். நிச்சயம் இந்த நூலை சந்தர்ப்பம் கிடைத்தால் வாசித்து பாருங்கள். 

Tuesday, May 24, 2016

வின்சென்ட் சேர்ச்சில் .

வின்சென்ட் செர்ர்ச்சில் பற்றி அவ்வப்போது நாம் கேள்விப் பட்டிருபோபோம். அனால் அவரை அவரது வாழ்க்கை யை அப்படியே அச்சொட்டாக விளக்கியிருக்கிறது இந்தப் புத்தகம்.  போருக்கு என்று  சென்று விட்டால் உறுதி, தோல்வியில் எதிர்ப்பு; வெற்றியில் கண்ணியம்; அமைதியில் நல்லெண்ணம்’ - இதுவே ஒரு உலக வரலாற்றில் அன்றும் இன்றும் மாபெரும் தாரக மந்திரம்; சர்ச்சில் என்ற மாமனிதர் உதிர்த்த வார்த்தைகள்தான் இவை. உழைப்பு, வீரம், எழுச்சி, திறமை, எதற்கும் அஞ்சாத போர்க் குணம்... இதுதான் வின்ஸ்டன் சர்ச்சில். இது தான் அவருக்கான அடையாளம்.


காட்டில் கால்நடையாக அலைவதைவிட யானையின் மீது அமர்ந்து போவது எளிது. யானை, துதிக்கையால் ஊசியை எடுக்கும். மரத்தை வீழ்த்தும். அதன் முதுகின் மேலிருந்து எல்லாவற்றையும் காணலாம். ஒரு காலத்தில் சேர்ச்சில் செய்தார். அது தான் 2ம் உலக யுத்தம்.பத்திரிகையாளனாகத் தன் வாழ்வைத் தொடக்கிய சர்ச்சில், ராணுவ வீரனாக உயர்ந்து தளபதியாக உருவெடுத்து நிதி அமைச்சராகி, இரண்டு முறை இங்கிலாந்துப் பேரரசின் பிரதம மந்திரியாக ஜொலித்தவர். ‘செய்தியை எழுதிக்கொண்டிருப்பதைவிட, ஒரு செய்தியைப் படைப்பது சிறந்தது’ என்று அவர் தனது முதல் நூலில் ஒரு கருத்தை வெளியிட்டதற்கு ஏற்ப அவருடைய அமைதியற்ற உள்ளம் போரில் ஈடுபட விரும்பியது என்றெல்லாம் அவருடைய வாழ்கை இந்த நூலில் அற்புதமாய் கூறப்பட்டுள்ளது.

இருபத்துமூன்று வயதில் போர். அவர்  கடை பிடித்த போர் முறைகள். அவருக்கு கிடைத்த அனுபவங்கள். அரசியல் அறிவும், உலக மக்களைப்பற்றிய அறிவும் பெற்றிருந்த வின்ஸ்டன், சாவ்ரோலா என்ற புதினத்தை எழுதியிருக்கிறார். அதன் கதாநாயகன் சாவ்ரோலா அடைந்த வெற்றிகளைப் பிற்காலத்தில் சர்ச்சிலும் அடைந்தார் என்பதுதான் வியப்பு. வின்ஸ்டன் சர்ச்சிலின் அகராதியில் ‘செயல்’ என்றால் ‘போர்’ என்று பொருள். அவர் போர் அனுபவங்களைப்பற்றிப் பதினான்கு நூல்களை எழுதியிருக்கிறார் போன்ற தரவுகள் எல்லாம் மேலதிகமாக இந்த நூலுக்கு பெருமை சேர்த்திருக்கின்றன. 


இங்கிலாந்துக்கு  முதலாம் மற்றும்  இரண்டாம் உலக மகா  யுத்தங்களின் போது இங்கிலாந்தை வழிநடத்தியது முதல் அந்த நாட்டு மக்களுக்கு நட்டு போர் வீரர்களுக்கு  அவர் ஆற்றிய போர் உரைகள் மட்டும் 20 நூல்களாகத் தொகுக்கப்பட்டிருக்கின்றன. உலக யுத்தங்களின் போது மட்டும் இங்கிலாந்துக்காக எட்டுப் படைகளில் அவர் பணிபுரிந்திருக்கிறார். உலகப்போர்களுக்கு முன்னர் அவர் நான்கு படையெடுப்புகளில் பங்கு பன்குபற்றியிருக்கீரார். போர் நிருபராகப் பெருந்தொண்டு புரிந்துள்ளார். இரு உலகப்போர்களையும் இயக்கி இன்றலச்வும் இங்கிலாந்தை ஒரு வெற்றி சரித்திரமாக மற்றிய அமைத்திருகின்ற அவருக்கு மட்டுமே உரியது. 


வேறு பல ஆட்சியாளர்கள் இருந்திருந்தாலும் சேர்ச்சில் அளவுக்கு இங்கிலாந்து நாட்டு வெற்றிக்காக அவர்கள் உழைக்க வில்லை போன்ற தகவல்களோடு இந்த நூல அமையபெற்றிருக்கிறது.  நூலாசிரியர் எம்.எக்ஸ்.மிராண்டா வின் எழுத்துக்கள் வின்சென்ட் சேர்ச்சில் எவ்வளவு பெரிய இன்றியமையாத தலைவர் என்பதையும் அவர்  கொண்டிருந்த போர் குணத்தையும் தெளிவாக தந்திருக்கிறார். வின்ஸ்டன் சர்ச்சிலின் வாழ்க்கைச் சரித்திரம் போராட்டம் நிறைந்தது. படிக்கப் படிக்கப் வாசிப்பு என்ற அமிர்தத்தை  தரக் கூடியது எத்தனை போர்கள்.. எத்தனை அரசியல்கள்.. எத்தனை துரோகங்கள். சர்ச்சிலின் சரித்திரத்திலிருந்து பாடம் கற்போம்  இந்த நூல் துணைக் கொண்டு.


Thursday, March 31, 2016

 தோனி vs  சமி. அனல் பறக்கும் ஆட்டம் இன்று.


ஒரு பக்கம் இரண்டு அணிகளும் தலா ஒவ்வொரு முறை கிண்ணம் வென்றிருக்கின்றன. (இந்தியா 2007, மேற்கிந்திய தீவுகள் 2012).  சொந்த ஆடுகளங்கள், அணியின் மொத்த பலமும் துடுப்பாட்ட வீரர்களை நம்பி, இந்தியா வெல்லுமா மாறாக அணைத்து போட்டிகளும் அடித்தாடி வெற்றிகளை குவிக்கின்ற மேற்கிந்திய தீவுகள் வெல்லுமா என்று பலரும் தமக்குள்ள சிலாகித்துக் கொண்டிருக்க இந்த போட்டி பற்றி எனத் தனிப்பட்ட கருத்தை முன்வைக்க எத்தனிக்கின்றேன்.

சொந்த மண்ணில் இந்திய அணி.


2007 ம் ஆண்டு கிண்ணம் வென்ற குதூகலத்துடன் முதல் சுற்றில் இறுதிப் போட்டியில் பல பொருந்திய ஆஸ்திரேலிய அணியை வீழ்த்திய பெருமிதத்துடனும் டோனி தலைமையிலான இந்திய அணி இறுதிப்போட்டிக்கு நுழையலாம் என்று முழு பலத்துடனும் முழு நம்பிக்கையுடனும் இருக்கிறது. அணியின் மிக பெரிய பலமே துடுப்பாட்ட வீரர்கள் உள்ளடங்கலான அஷ்வின், நெஹ்ரா ஆகியோரின் பணமது வீச்சு அனுபம்  தான். ரோஹித் ஷர்மா, தவான், விராட், யுவராஜ் ( சிலவேளைகளில்), டோனி, ரெய்னா, ஜடேஜா, பெரிய விதத்தில் பல வெற்றிகளுக்கு பங்களித்திருக்கின்ற பாண்டியா, மற்றும் அஷ்வின் வரைக்கும் துடுப்பாட்ட வீரர்கள் இருப்பதும் அணிக்கு கூடுதல் பலம்.



யுவராஜ் சிங்குக்கு கடந்தப் போட்டியில் காலில் ஏற்பட்டிருந்த தசைபிடிப்பு  காரணமாக இன்ற போட்டியில் அவர் பங்கு பற்ற மாட்டார் என்று இன்று அதிகாலை வேளையில் அறிய கிடைத்தது. அவருக்கு பதிலாக டோனி ஒரு சகலதுறை வீரரை பயன்படுத்தலாம் என்று நான் யோசித்திருந்த தருணம் யுவிக்கு பதில் (மனிஷ் பாண்டி, ரஹானே, நேகி) ஆகியோரில் ஒருவர் விளையாடலாம்.என்னுடைய யூகத்தின்  படி மனிஷ் பாண்டி விளையாடக் கூடிய சந்தர்ப்பங்கள் அதிகமாக இருக்கின்றன அவர் சகல துறை வீரராக இருக்கின்ற படியினால்.




தவிரவும் இன்றைய போட்டியில் தொடர்ந்து துடுப்பாட்டத்தில் சறுக்கி வருகின்ற ஆரம்ப துடுபாட்ட ஜோடி (தவான், ரோஹித்) ஜோடியும், சுரேஷ் ரெய்னாவும் தன்னை தனது துடுப்பாட்டத்தை இன்றைய போட்டியில்
  சற்று அதிகமாகவே நிரூபிக்க வேண்டி இருக்கும். கடந்த போட்டிகளை  விட தவறுகளை சரியோ செய்து ஆக்ரோசத்துடன்  இந்த போட்டியில்  இந்திய அணி விளையாடுவது மட்டுமன்றி டோனி அஷ்வினை வைத்து கெய்லை  ஆட்டமிலப்பு செய்ய அதிகம் முயற்சி செய்வார் என்று நினைக்கின்றேன்.



வெற்றி வேட்கையுடன் மேற்கிந்திய தீவுகள் அணி.


இந்தப் போட்டிகள் ஆரம்பிக்க முன்பதாக மேற்கிந்திய தீவுகள் அணியின் தலைவர் டெரன் சமி கருத்தொன்றை முன்வைத்திருந்தார்.நாங்கள் இந்த ஆண்டு கிண்ணத்தை கைப்பற்றத்தான் வந்தோம் அந்த இலக்கை நோக்கி நிச்சயம் பயணிப்போம் என்று.



இந்த கருத்து சில வேளைகளில் மெய்யாகக் கூடிய சந்தர்ப்பங்கள் அதிகமாகவே இருக்கின்றன. காரணம் மேற்கிந்திய தீவுகள் அணி இந்த டி20 தொடரில் விளையாடி வருகின்ற விதம் அற்புதம் அதி அற்புதம். தான் பங்கு பற்றிய முதல் சுற்றுப் போட்டிகளில்( ஆப்கான் தவிர்த்த) மிக முக்கிய 03 அணிகளை (இலங்கை, இங்கிலாந்து, தென்னாபிரிக்கா) ஆகிய அணிகளை வெற்றிக் கொண்டு அசுர பலத்துடன் அரையிறுதிக்குள் நுழைந்திருகின்றது.


அணியின் முழு பலம் பல சகல துறை வீரர்கள் இருப்பது தான் கிரீஸ் கெயில் மட்டுமே போதும் எதிரணிகளை சிதறடிக்க,தவிரவும் டெரன் சமி,  சாமுவேல்ஸ், ப்ராவோ,ரசல், மாத்திரம் அன்றி இலங்கை அணியை சிதறடித்த ப்ளட்ச்சர் என்று ஒரு பலம் வாய்ந்த துடுப்பாட்ட வீரர்கள் மேற்கிந்திய தீவுகள் பக்கம். மேலும் ஐ.பி.எல் போட்டிகளின் மூலம் இந்திய ஆடுகளங்கள் பற்றிய சரியான புரிதல் அதிகமாகவே பிராவோ, கெயில், சமி ஆகியோருக்கு இருப்பதால் இந்த காரணியும் மேற்கிந்திய தீவுகள் அணியின் வெற்றிக்கு பங்களிப்பு செய்வதாக அமையும்.




மேலும் இன்றைய தினம் மேற்கிந்திய தீவுகள் அணியில் ப்லட்சருக்கு பதிலாக ப்லண்டன் சீமன்ஸ் அணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளார்.  ப்லட்சருக்கு காயம் காரணமாக இந்த போட்டியில் ஓய்வு வழங்கப் பட்டிருக்கிறது. இந்தியாவுக்கு எதிராக நான் என்ன செய்யப் போகிறேன் என்று பாருங்கள் என்று கெய்லும் சவால் விடுத்துள்ளதும், நேற்றய தினம் கெயில் எனக்கு அவசரமாக ஒரு சதம் தேவைப்படுகிறது என்று ஒரு பட்டாசை கொளுத்தி போட்டு டுவிட் செய்திருந்ததும் இன்றைய போட்டியை அதிகம் ரசிகர்களின் பால் ஈடுபாடு ஏற்படுத்த உதவலாம்.




மேலும் மிக சிறந்த 02 விடயங்களும் இந்த போட்டியில் அதிகம் அவதானிக்கப்படும் என நினைக்கின்றேன். முதலாவது இந்திய அணியின் தடுப்பு சுவர் விராட் கொஹ்லி டி20 தரப்படுத்தலில் முதல் இடத்துக்கு வந்திருந்தார் கடந்த போட்டியில்  வெளுத்து வாங்கியிருந்ததன் மூலமும் இந்த தொடரில் அதிக ஓட்டங்களை பெற்ற வீரர்களின் பட்டியலில் விராட் கோஹ்லி இரண்டாமிடத்தில் (முதலிடத்தில் நேற்றைய போட்டியின் நாயகன் ரோய்*72 ) இருகின்றமையும் விராட் கோஹ்ளியின் தனிப்பட்ட துரத்தியடிக்கும் தன்மை காட்டி நிற்கின்றது.





மேலும் நேற்று முன்தினம் வெளியிடப்பட்ட ஐ. சி.சி யின் பந்து வீச்சாளர்களுக்கான   டி20 பந்து வீச்சாளர்கள் பட்டியலில் மேற்கிந்திய தீவுகள் அணியின் சுழற்பந்து வீச்சாளர் பத்ரி இருக்கின்றமையும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு கூடுதல் பலம்.எல்லாவற்றையும் விட இன்றைய போட்டி நடைபெறுகின்ற மும்பை வன்கடெ மைதானம் முற்று முழுதாக துடுப்பாட்ட வீரர்களுக்கு சாதகமான மைதானம் என்கிற படியினாலும் இந்த மைதானத்தில் குறைந்த ஓட்டங்களாகவே 172 ஓட்டங்கள் ஆப்கானிஸ்தான் அணியினால் பெற்றுக் கொள்ளப்படிருக்கின்றன்மையும் இந்த மைதானம் பற்றிய புரிதலை ரசிகர்களுக்கு ஏற்படுத்தியிருக்கும். இந்த மைதானத்தில் இந்த தொடரில் மட்டும் பெறப்பட்ட ஓட்டங்கள் இதோ ( 230-8) , (229-4) , (209-5) , (183-4) , (182-6) , (172).




எது எப்படி இருந்தாலும் இன்றைய போட்டி இரண்டாவது அரையிறுதிப் போட்டி மும்பையில் ரசிகர்களின் கிரிக்கெட் ரசனைக்கு   தனியாக அமைகின்றதோ என்னவோ விறுவிறுப்புக்கு சற்றும் குறைவு இல்லாமல் இருக்கும். கெயிலின் அந்த புதிய நடனமும், கோஹ்ளியின் ஆக்ரோஷமும் சேசிங் செய்கின்ற முறையும் பெரிதும் வெளிப்படும் என எதிர்பார்க்கலாம்.




கிவிக்களுக்கு உலகக் கிண்ணம் சாபமா?


இப்பொழுது எல்லாம் அதிகம் எழுதுவதற்கு நேரம் கிடைக்கின்ற படியினால் நிறையவே எழுதலாம் என்று நினைக்கின்றேன். கிரிக்கெட் போட்டிகள் பற்றி பேசுவது, எழுதுவது என்றாலே எனக்கு அலாதி பிரியம். தொடர்கின்றேன் எனது சொற்களை நேற்றைய போட்டிகளை பற்றி.

முதலில் நம் எல்லோருக்கும் தெரியும் இந்த போட்டியில் இங்கிலாந்தை நிச்சயம் வெற்றிக் கொண்டு இந்த போட்டியில் நியூசிலாந்து ( கிவிக்கள்) வெல்வார்கள் என்று. ஆனால் நடந்ததோ வேறு மாதிரி. அதிகமாகவே  இந்த தொடரில் நியூசிலாந்தின் அணி தலைவர் கேன் வில்லியம்சனை நான் உட்பட பல கிரிக்கெட் ரசிகர்கள் அதிகமாகவே புகழ்ந்து தள்ளி விட்டோம் என்றே நினைக்கின்றேன்.காரணம் அவர் அவரது அணி இந்த தொடரில் தாங்கள் விளையாடிய போட்டிகளிலும் அனைத்திலுமே வெற்றி பெற்றிருந்தது.
(இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் ). நேற்றைய தினம் கேன் வில்லியம்சனின் வியூகம் பலிக்க வில்லையோ தெரியவில்லை. நேற்றய தினம் இங்கிலாந்து அணியின் தலைவர் ஒய்ன் மோர்கனுக்கான நாளாகவும், ஜேசன் ரோய் க்கான நாளாகவும் மாறி போனது.




முதலில் ஸ்கோர் விபரங்களை சொல்லி விட்டு மற்ற விடயங்களை பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கின்றேன்.நாளைய சுழற்சியில் வென்று நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடி  நிர்ணயிக்கப்பட்ட  20 பந்து வீசு ஓவர்களில் 08 விக்கட்டுக்களை இழந்து 158 ஓட்டங்களை பெற்றுக்க் கொண்டது. தொடர் முழுவதும் பிரகாசித்த மார்ட்டின் குப்டில்  ஓட்டங்கலோடும், அணி தலைவர் கேன் வில்லியம்சன்  ஓட்டங்கலோடும் ஆட்டமிழந்து ஏமாற்றம் தந்தது, ஆரம்பத்திலேஇங்கிலாந்து வெற்றியை நோக்கி தான் கம்பீரமாக நடை போடுகின்றது என்பதை சரியாக சொல்லியிருந்தது.



தொடர்ந்த முன்ரோ  ஓட்டங்களை பெற்று இங்கிலாந்து பந்து வீச்சாளர்களை கலங்கடித்திருந்தாலும், தொடர்ந்து வந்த கோரி அண்டர்சன், மற்றும் ரோஸ் டெயிலர் போன்ற அனுபம்  வாய்ந்த துடுப்பாட்ட வீரர்கள் தங்களது பணியை சரியாக செய்ய தேவை இருந்தார்கள் .ஒட்டு மொத்தத்தில்  கிவிக்கள் நொண்டி நொண்டி 158 ஓட்டங்களை பெற்றக் கொண்டார்கள்.பந்து வீச்சில் இங்கிலாந்து பந்து வீச்சாளர்கள் கலக்கியிருந்தார்கள் டேவிட் வில்லி, கிரீஸ் ஜோர்டான்,  ப்ளுன்கேத்ட், மொயின் அலியின் பந்து வீச்சு என்று இவர்களது மிக கட்டுப்பாடான பந்து வீச்சுடன் பென் ஸ்டோக்ஸ் சின் பந்து வீச்சு அதி அற்புதமாக அமைந்திருந்தது.




தொடர்ந்து துடுப்படுத்தாடிய ரோயும் அலக்சும் கிவிகளின் பந்து வீச்சை போட்டு துவைத்து எடுத்த்திருந்தார்கள். ஆரம்பம் முதலே ரோயின் அதிரடி தொடர்ந்தது. எனக்கு ஞாபகம் இருக்கின்ற வகையில் 04 ஓவரில் முதல் 03 பந்துகளையும் ஓட்டமற்ற பந்துகளாக மாற்றி விட்டு அடுத்த 03 பந்துகளையும் 04 ஓட்டங்களுக்கு மாற்றிய விதமும் அடுத்த ஓவரின் முதல் மூன்று பந்துகளையும் 04 ஓட்டங்களுக்கு விரட்டிய விதம் ரோயின் அதிரடி மீண்டும் ஒரு முறை காட்டியிருந்தது. இதில் மொத்தமாக (11) 04 ஓட்டங்களும், 02 ஆறு ஓட்டங்களும் அடங்கும்.

 ரோய் அவரது அதிரடியும்  இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு உறுதுணையாக அமைய அலெக்ஸ் ஹோல்ஸ்(20), ரூட் ( 27) ஆகியோர் பெற்ற ஓட்டங்களும் ஒரு பக்கம் உறுதுணையாக இருந்த போதிலும் அணியின் தலைவர் ஒய்ன் மோர்கன் வந்த முதல் பந்திலேயே எல்பிடபல்யு மூலம்  ஆட்டமிழந்த நிலையிலும் இறுதி நேரத்தில் 03 ஆறு ஓட்டங்கள், 02 நான்கு ஓட்டங்கள் உள்ளடங்கலாக 32 ஓட்டங்களை  அதிரடியாக ஆடி பெற்றுக் கொண்டது அற்புதம்.




மொத்தத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றுக் கொண்டது. இந்த நேரத்தில் மிக முக்கியமாக சொல்ல வேண்டிய ஒன்று இருக்கின்றது அதாவது முனைய போட்டிகளில் பந்து வீச்சில் கலக்கிய கிவிக்களின் பந்து வீச்சும் இந்த போட்டியில் இங்கிலாந்து துடுப்பாட்ட வீரர்களின் சமயோசிதமான துடுப்பாட்டத்துக்கு முன் எடுபடவில்லை.

இந்த வருடமும் ஒரு உலகக் கிண்ண வாய்ப்பு நியூசிலாந்து (கிவிக்களுக்கு) நழுவி போய் இருக்கிறது. இது சாபமா அதிஸ்டமா என்பதும் உங்கள் போலவே எனக்கும் இருக்கின்ற சந்தேகம். எனக்குள் இருக்கின்ற ஒரே ஒரு கவலை அண்மையில் இறந்த நியூசிலாந்தின் கிரிக்கெட் சொத்து மார்டின் க்ரோவுக்ககாவாவது கிவிக்கள் சற்றுப் பொறுமையாக விளையாடி இருக்கலாம்.


மேலுமொரு விடயம் இலங்கை அணியின் முன்னால் தலைவர் மஹேல ஜெயவர்த்தனவின் மிக சிறந்த துடுப்பாட்ட ஆலோசனையின் கீழ் இங்கிலாந்து அணி செம்மையான சரியான ஒரு பாதையில் தான் பயணிக்கிறது என்பதை இந்த வெற்றி மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறது. மேலும் இங்கிலாந்தின் சாரே பிராந்தியதுக்காக இலங்கை அணியின் முன்னால் தலைவர் குமார் சங்ககார விளையாடும் போது ரோய் வருகின்ற இங்கிலாந்து அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரர் என்று ஒரு முறை சொல்லியிருந்ததையும் இங்கே சுட்டிக் காட்ட விரும்புகின்றேன். இவர்கள் இருவரும் சாரே பிராந்தியதுக்க்காகவே தொடர்ந்து விளையாடி வருகின்றார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வாழ்த்துக்கள் இங்கிலாந்து வீரர்களுக்கு. இறுதி போட்டியில் (இந்தியா, மேற்கிந்திய தீவுகள்) ஆகிய அணிகளில் ஒரு அணியை இறுதிப் போட்டியில் சந்திக்கும். மீண்டும்  ஒரு முறை கிண்ணம் வெல்வதற்கான சூழ்நிலை இங்கிலாந்து அணிக்கு அமைந்திருக்கிறது மீண்டும் ஒரு கிண்ணம் 2010 போல அமைந்தால்..............

அடுத்த பதிவு இந்திய மேற்கிந்திய தீவுகள் பற்றி ..............



Wednesday, March 30, 2016

நம்பிக்கை தான் கையும் காலும்.

நமக்குள் ஏதாவது ஒரு சிறிய பிரச்சனை, வாழ்கையே முடிந்துவிட்டது, எனக்கு மட்டும் தான் இப்படியெல்லாம் நடக்கவேண்டுமா, என்றெல்லாம் நம்மை நாமே நொந்திக் கொண்ட சந்தர்ப்பங்கள் நமக்குள் அதிகமாகவே இருக்கும்.ஆனால், வாழ்க்கையில் எப்போதும் வீசும் சோதனைகளை கடந்து சாதனை படைக்கின்றவர்களை இந்த உலகம் எப்போதுமேர் நினைவில் வைத்துக் கொள்ளும்.

அப்படி ஒரு விபத்தில் தன் இரண்டு கைகளையும்  இழந்த ஒரு இளைஞர் தன் கனவான கிரிக்கெட் விளையாட்டை இன்னும் விளையாடி வருகிறார், அதுவும் சிறந்த முறையில் என்றால் நம்ப முடிகிறதா?

ஜம்மு காஷ்மீரின் ஆனந்த்னாக் மாவட்டத்தை சேர்ந்த அமீர் ஹுசைன். எட்டு வயது சிறுவனாக இருந்தப் நடந்த கோர விபத்தில் இரு கைகளையும் இழந்துவிட்டார். மூன்று வருடங்கள் சொல்லமுடியாத வேதனைகளை அனுபவித்த அமீரை காப்பாற்ற அவரின் தந்தை அவரின் தொழிலை விட்டு நிலத்தை கூட விற்கவேண்டி இருந்தது. 

இதனால் பலரும் இவரை சாடவே, ‘மகனை இழந்து நிலபுலம் வைத்திருந்து நான் எதற்காக வாழ வேண்டும்’ என்று பதிலளித்த அமீரின் தந்தை தான் அமீரின் முழு பலமும். இயல்பான பள்ளியில் சேர்க்கப்பட்ட போது ஆசிரியர்களால் அவமானப்படுத்தப்பட்டு புறக்கணிக்கப்பட்டார் அமீர். 

எனினும் இவை எதுவுமே அமீரை பின்னுக்கு தள்ளவில்லை. வாழ்க்கை வழி நெடுக்க பிரச்சனைகளை அனுப்ப அவை அனைத்தையும் பின்னுக்கு தள்ளி உந்திக்கொண்டே முன்னேறியுள்ளார் அமீர். 

அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்தபோது சிறு வயதிலிருந்தே தன்  கனவாக இருந்த கிரிக்கெட்டை ஏன் தொடரக் கூடாது என்று யோசித்திருகிருக்கிறார். யோசனையுடன் நின்றுவிடவில்லை. அதற்காக கடுமையாக பயிற்சி செய்துள்ளார். விளைவு, இன்று அவர் வாழும் பகுதியில் அமீர் தான் மிக சிறந்த துடுப்பாட்ட வீரர்மற்றும் பந்து வீச்சாளர். 

இவர் துடுப்பை  தன் கழுத்துக்கும், தோள்பட்டைக்கும் இடையே வைத்து பிடித்து விளையாடுவதை பார்க்கும் எவருக்கும் இவர் மேல் பரிதாபத்திற்கு பதில் மரியாதை தான் வருகிறது. பந்துகளை வீசுவதற்கு தன் கால்களை உயர்த்தி கைகளை போல பயன்படுத்திகொள்கிறார். 

இவரின் திறமையை அங்கீகரிக்கும் விதமாக அவர் மாநிலத்தின் ஊனமுற்றோர் கிரிக்கெட் அணியும் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

கிரிக்கெட் மட்டுமல்லாமல் நீச்சல், என அசத்தும் அமீர் விளையட்டு மட்டுமே தனது வாழ்க்கை என்று சுற்றி இருப்பவர்களை எப்போதும் மகிழ்சியாய் சிரிக்கவைத்துக் கொண்டு   இருக்கிறார். வாழ்த்துக்கள் சகோதரா!




Thursday, March 24, 2016

குறைகளை கலைத்து செம்மையான படைப்பாய்  "குற்றம் கடிதல்".



சில திரைப்படங்கள் மனதில் என்றுமே நீங்காத பாதிப்பை ஏற்படுத்தி விடும். அப்படி மிக நீண்ட நாட்களுக்கு பிறகு என்னில் என்றுமே நீங்காத தாக்கத்தை ஏற்படுத்திய திரைப்படம் இயக்குனர் பிரம்மனின் "குற்றம் கடிதல்". 



தமிழுக்கு கிடைத்திருக்கின்ற மற்றுமொரு இன்றியமையாத இயக்குனர் பிரம்மன். நான் தற்போதும் ரசிக்கின்ற முருகதாஸ், சமுத்திரகனி,பாலா, ஷங்கர், சசி, என்று தமிழ் சினிமாவில் நீள்கின்ற பட்டியலில் இவரையும் இணைத்துக் கொள்கிறேன்.ஒட்டு மொத்தமாக தமிழ், தெலுங்கு, கன்னடம் உட்பட பல  மொழிகளிலும் ஜிம்பாப்வே, மும்பை, கோவா, புனே, பெங்களூரு போன்ற இந்தியாவின் பல மிக முக்கிய நகரங்களிலும் படம் திரையிடப்படிருக்கின்றது. 


தமிழுக்கு இந்த வருடம் நிச்சயம் ஒரு தேசிய விருது வரும் என்கிற பெருமாப்பை தந்திருக்கிறது இந்த திரைப்படம்.
5-ம் வகுப்பு படிக்கும் ஒருமாணவன் சகமாணவிக்கு பிறந்த நாள் பரிசு கொடுப்பதற்கு பதிலாக தெரியாத்தனமாக  முத்தம் கொடுத்துவிடுகிறான். அதை தவறாய் நினைக்கும், தவறாய் புரிந்துக் கொள்ளும் ஆசிரியை கன்னத்தில் அந்த மாணவனை ஓங்கி அரைந்து விடுகிறார்.அந்த அரயினால் மாணவன் திடீரென மயக்கமடைந்து பின்னர் 'கோமாவுக்கு' சென்று விடுகிறான்.


 (அந்த மாணவனுக்கு மூளைக்கு செல்லும் நரம்பில் பாதிப்பு ஏற்படுகிறது) இந்த விடயம் அறிந்த பள்ளி நிர்வாகம், தாக்கிய  ஆசிரியை, அவர் கணவர், ஆசிரியையைப் பிரிந்துவாழும் 'ஏசு அடியாரான' தாய்,மாணவனின் விதவைத்தாய், அவனின் முற்போக்கு மாமன், செய்தியறியும் காவல்துறை என அனைவரும் பதட்டமடைகிறார்கள்.




தொடர்ந்து இந்த நிலைமை ஊடகங்களுக்கு தெரிய வந்த தருணம்,  இந்த  விடயத்தை எப்படியாவது பெரிது படுத்தி தமிழ் நாட்டில் பெரிய இடத்தை பிடிக்க வேண்டும் என ஒரு ஊடகம் ( ஒரு பெண் ஊடகவியலாளர்) போராடுகிறார். நிலைமை அறிந்த குறித்த பள்ளி ஆசிரியரின் மேலாளர் அந்த ஆசிரியரின் கணவனை ரகசியமாக அழைத்து வந்து அந்தாசிரியரையும் கூடிக் கொண்டு வெளியூருக்கு சென்று விடுமாறும் என்ன பிரச்சினை வந்தாலும் தான் சமாளித்து கொள்வதாகவும் சொல்லி விடுகிறார்.


இறுதியில் அந்த ஞாபகமே அந்த ஆசிரியரை வந்து தாக்க, எப்படியாவது அந்தமானவனின் உயிரை காக்கவும், அந்த மாணவனின் தாய், அந்த மாணவனது மாமன் என்று குறிப்பிட்ட எல்லோரிடமும் மன்னிப்பு கேட்டு விட வேண்டும் என்ற நோக்கத்தில் ஆசிரியரும் மாணவனை அனுமதித்திருக்கும் வைத்தியசாலைக்கு வந்து விடுகிறார்.




அந்த தருணம் அந்த தாயிடம் அந்த ஆசிரியை மன்னிப்பு கேட்க அந்த தருணம் அந்த தாய் தனது மகனை தவிர தனக்கு எந்த உறவும் அன்பும் இல்லை அவன தான் தனக்கு எல்லாம் என்று கூறி கதறியலும் காட்சியும், எப்படியாவது தனது மகன் பிழைத்து விட வேண்டும் என அந்த ஆசிரியரிடம் கேட்டுக் கொண்டு கண்ணீர் சிந்தி அழும் காட்சி ஒரு பெண்ணுக்கு தாய்மை உணர்வு என்பது எவ்வளவு தூரம் புனிதமானது என்பதை அழுத்தமாக கூறி விட்டது. 

அதே நேரத்தில் அந்த காட்சியும் என்னை அதிகமாகவே பாதித்து விட்டது.
இது முற்று முழுதாக இயக்குநரின் படம் என்றே நான் கூற ஆசைபடுகிறேன். கதாநாயகனை தேர்ந்தெடுத்துவிட்டு கதையை பலவாறு ஓட்டி செல்லும் போல கதைகளுக்கு மத்தியில் , தெளிவான கதைக்கு தரமான நடிகர்களைத் தெரிவு செய்து நடிக்க வைத்திருக்கிறார்.

 

பதட்டமடைவதால் யாருடைய அன்றாட வாழ்க்கையும் ஒரேயடியாய் ஸ்தம்பித்து விடுவதில்லையென்பதை காட்சிப்படுத்தியிருப்பது தான் இந்த படத்தின் இன்றியமையாத கருத்தாக இருக்கும் என  நான் புரிந்துக் கொண்டேன். பரபரப்போடே பள்ளி முதல்வரின் துணைவியார் மாவரைக்கிறார், கணவரின் உடல்நலம் கருதி கஞ்சி வைத்திருக்கிறார், பள்ளி ஆசிரியர்கள் ஊடகங்களைக் கண்டு நடுங்குகிறார்கள். 


மிகைப்படுத்தாத காட்சியமைப்புகள் நம்மை வியக்க வைக்கின்றன.
படத்தில் சிறுவனாக மாஸ்டர் அஜித், அஜித்தின் அம்மாவாக நடித்திருக்கும் சத்யா, முற்போக்கு மாமன் பாவெல் நவகீதன், ஆசிரியையாக ராதிகா பிரஷித்தா, கணவராக சாய் ராஜ்குமார், அதிபராக  வரும் குலோத்துங்கன் உதயகுமார், அவர் மனைவியாக நடித்திருக்கும் துர்கா வேணுகோபால் என அனைவரது நடிப்பும் சொல்லால்களும் அற்புதம்.தவிரவும் தமிழுக்கு புதிய இசையமைப்பாளராக உருவாகியிருக்கும் இசையமைப்பாளர் ஷங்கர் ரங்கராஜனின் இசையும் ரசிக்கக்க் கூடியது தான்.



மொத்தத்தில் குறைகளை கலைத்து செம்மையான படைப்பாய்  "குற்றம் கடிதல்".
வாழ்த்துக்கள் இயக்குனர் பிரம்மா. இன்னும் சிறந்த படைப்புக்களை தரவும் சில தேசிய விருதுகள் உங்களுக்காக உருவாக்கப்படவும்.



Wednesday, March 23, 2016

யதார்த்தத்தின் முழு உருவமாய் " பிச்சைக்காரன்."


திருப்பூரின் மிக பெரிய ஒரு வர்த்தகரின் ஒரே மகன் விஜய் ஆண்டனி. ஏதோ ஒரு விபத்தில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும், தனது தாயைக் காப்பாற்ற என்னென்னவோ செய்தும் பலனில்லாமல் போய் விடுகிறது.


அந்த நேரத்தில் ஒரு சாமியாரின் அறிவுரைகளை கேட்டு, 48 நாள் கோடீஸ்வர வேஷம் கலைத்து, ஒரு சாதாரண பிச்சைக்காரனாக வாழத் தீர்மானிக்கிறார் படத்தின் நாயகன் விஜய் ஆண்டனி அந்த 48 நாட்களிலும் தன்னை யார் என்று எந்தக் காரணம் கொண்டும், யாரிடமும் வெளிப்படுத்தக் கூடாது என்ற சுவாரஸ்யமான முடிச்சை கோர்த்து தந்திருக்கிறார், இயல்பாகவே தனது படைப்புக்களில் யதார்த்தத்தை மட்டுமே புகுத்த முற்படும் இயக்குனர் சசி.



இதற்கு  முன்னைய இவரது படைப்புக்களே கோரியிருக்கும்  இயக்குனர் சசி தமிழ் சினிமாவுக்குள் எவ்வளவு முக்கியமான இயக்குனர் என்பதை. அதற்கு இவரது திரைப்படங்களே ஒரே சான்று. ( 555, டிஷும், ரோஜாக்கூட்டம் போன்ற படைப்புக்கள்). அம்மாவுக்காக பிச்சைக்காரனா மாறுற மகன்தான் ஹீரோ’ 


என்று  ஒற்றை வார்த்தையில் சொல்லி விட்டாலே பழைய படம் மாதிரி படம் எடுக்க முட்போட்டு இருக்கிறார் என்ற வார்த்தை என் நண்பர்களின் வாயில் இருந்தும் வந்தது.  இது பழைய கதை தான் ஆனால் அதில் இருக்கின்ற யதார்த்தத்தை நான் சொல்லி அவர்கள் புரிந்துக் கொள்ள வேண்டிய அவசியம் இருக்காது என்று நினைக்கிறேன். இந்த திரைப்படம் மிக அருமையான திரைக்கதைக்கும் , அட்டகாசமான வசனங்களுக்கும் பெயர் போய் இருக்கிறது. 




என்னபா கதையின்  நாயகன் பிச்சையெடுக்கறானா?’ என்று கேட்காமல், கதாபாத்திரத்தை ஏற்றுக் கொண்டு நடித்ததோடு, சென்டிமெண்ட் என்றெல்லாம் ஏனைய நடிகர்களை போல் அலட்டிக் கொள்ளாமல்,  நடிப்பிலும் சரி தயாரிப்பிலும் சரி  படத்துக்கு ஏற்றாத் போல தனது பங்கை மிக சரியாக செய்திருக்கின்ற விஜய் அன்டனி தமிழ் சினிமாவில் வளர்ந்து வருகின்ற ஒரு தவிர்க்க மடியாத நடிகன் தான் என்பதை மற்றுமொரு முறை நான் படத்துக்கு பிறகு நிருபித்து இருக்கிறார். 



விஜய் அன்டனிக்கு நாயகனாக சரியான திரைத் தோற்றம் வந்துவிட்டது. படத்தின் ஆரம்ப காட்சியில் வெளிநாடு சென்று வெளிவரும் காட்சியில் அச்சு அசல் பணக்காரத் தோரணை காட்டும் அவர், பின்னொரு காட்சியில் காதலியிடம் கையேந்தும் போது அந்த இயல்பான நடிப்பு ஆகட்டும் ,  ஃப்ளாட்பார்மில் வில்லன்  தூக்கிப் போட்ட சாப்பாட்டை எடுத்துச் சாப்பிடும் போதாகட்டும் பிச்சைக்காரனாகவே உணர வைக்கிறார்.
அதன்பிறகு விலை உயர்ந்த காரில் இருந்து  உடைமாற்றி வெளிவரும்போது.. கெத்து காட்டியிருக்கிறார். ஒரு தயாரிப்பாளராக, நடிகராக விஜய் ஆண்டனிக்கு இதுதான் இதுவரையிலான திரைப்படங்களில் மிக சிறந்த படம் இது.





நாயகி சாதனா டைட்டஸ். அருமையாக தனது  கதாபாத்திரத்துக்கு பொருந்தி தனது நடிப்பை சரியாக வெளிப்படுத்தியுள்ளார். முதலில் சாதாரணமாக தோன்றும் இவர், போகப் போக தன் நடிப்பிலும், அழகிலும் ரசிகர்களைக் கிறங்கடித்து விடுகிறார். அந்தக் கண்கள்...  கொள்ளை அழகு!. 



அதிலும் தனது காதலன் பிச்சைக்காரன் என்பதை அறிந்தும் அவன் மீது அவள் கொள்கின்ற காதல் அருமையான உணர்வுகளை, காதலின் அருமையை, காதலின் புரிதலை  இன்றைய காதலர்களுக்கு தந்திருக்கும் என நினைக்கிறேன். அதிலும் என்னை விட்டு நீங்காத காட்சியாக நாயகன் பிச்சை எடுக்கும் சந்தர்பத்தில் நாயகி வந்து அவனுக்கு பிச்சை கொடுக்கும் காட்சி சொல்ல வார்த்தைகளே இல்லை. உண்மையான காதல் அங்கு புரிந்தது எனக்கு. 




அம்மாவாக நடித்திருக்கும் தீபா ராமானுஜம், பெரியப்பாவாக நடித்திருக்கும் முத்துராமன் எல்லோருமே அவரவர் பாத்திரத்தைக் கச்சிதமாய் செய்து இருக்கிறார்கள். ஆனால் இவர்கள் எல்லோரை விடவும் ஒட்டுமொத்த ரசிகர்களின் கரகோசங்களையும் வாங்கி கொள்பவர்கள் அந்தப் பிச்சைக்கார நண்பர்களும், வில்லன் குழுவில் இருக்கும் ‘சந்திரபாபு’ சாயல் ஆசாமியும்தான். 


அதும் யார் சார் அந்த ‘சந்திரபாபு’ சாயல் நடிகர்? கேட்காதிர்கள் வில்லனின் ‘ரைட்’ அடிவாங்கிய பிறகு சிரிப்பை அடக்கும் காட்சியில் தியேட்டரையே சிரிப்பை அடக்க முடியாமல் செய்துவிடுகிறார்.
இந்த  இடத்தில் ஒரு விடயத்தை கூறியே ஆக வேண்டும் சசியின் வசனங்கள் என்னை ஒரு நிமிடம் கிறங்கடிக்க வைத்து விட்டன. 



அதிலும் நாயகன் பிச்சை எடுப்பவனா என்ற செய்தி அறிந்து வில்லன் கூறுகின்ற வசனம் " ஏந்தற கைக்கு, ஓங்கற பழக்கம் வராது’ " , அதுபோல தனது தாய்க்கு எல்லா பிரச்சனைகளும் நீங்கிய பிறகு இறுதியில் அந்த தாய் நாயகனை பார்த்து, உன்னால் முடிஞ்சா உதவி செய்யுப்பா முடியாட்டி பரவா இல்ல அவங்கள (பிச்சைக்காரங்களை) காக்க வைக்க கூடாதுப்பா நம்பளால அவங்க நெலமைல எல்லாம் ஒரு நாள் கூட இருக்க முடியாதுப்பா என்கிற வசனங்கள்  எல்லாம் சசியை தனிப்பட்ட இயக்குனராக மாற்றி விட்டிருக்கிறது சபாஷ் சசி.



படத்தின் மற்றுமொரு பலம் பாடல்கள் பின்னணி இசையிலும் சரி, பாடல்களுக்கான இசையிலும் சரி விஜய் அன்டனிக்கு ஒரு பூங்கொத்துக் கொடுக்கலாம். அதலும் நூறு சாமிகள் இருந்தாலும் என்ற பாடலும், உனக்காக வருவேன் என்ற பாடலும், நெஞ்சூரத்தில் என்ற பாடலும் அற்புதம். அதி அற்புதம்.
மொத்தத்தில் "பிச்சைக்காரன்  யதார்த்தத்தின் முழு உருவமாய்".