Thursday, March 31, 2016

 தோனி vs  சமி. அனல் பறக்கும் ஆட்டம் இன்று.


ஒரு பக்கம் இரண்டு அணிகளும் தலா ஒவ்வொரு முறை கிண்ணம் வென்றிருக்கின்றன. (இந்தியா 2007, மேற்கிந்திய தீவுகள் 2012).  சொந்த ஆடுகளங்கள், அணியின் மொத்த பலமும் துடுப்பாட்ட வீரர்களை நம்பி, இந்தியா வெல்லுமா மாறாக அணைத்து போட்டிகளும் அடித்தாடி வெற்றிகளை குவிக்கின்ற மேற்கிந்திய தீவுகள் வெல்லுமா என்று பலரும் தமக்குள்ள சிலாகித்துக் கொண்டிருக்க இந்த போட்டி பற்றி எனத் தனிப்பட்ட கருத்தை முன்வைக்க எத்தனிக்கின்றேன்.

சொந்த மண்ணில் இந்திய அணி.


2007 ம் ஆண்டு கிண்ணம் வென்ற குதூகலத்துடன் முதல் சுற்றில் இறுதிப் போட்டியில் பல பொருந்திய ஆஸ்திரேலிய அணியை வீழ்த்திய பெருமிதத்துடனும் டோனி தலைமையிலான இந்திய அணி இறுதிப்போட்டிக்கு நுழையலாம் என்று முழு பலத்துடனும் முழு நம்பிக்கையுடனும் இருக்கிறது. அணியின் மிக பெரிய பலமே துடுப்பாட்ட வீரர்கள் உள்ளடங்கலான அஷ்வின், நெஹ்ரா ஆகியோரின் பணமது வீச்சு அனுபம்  தான். ரோஹித் ஷர்மா, தவான், விராட், யுவராஜ் ( சிலவேளைகளில்), டோனி, ரெய்னா, ஜடேஜா, பெரிய விதத்தில் பல வெற்றிகளுக்கு பங்களித்திருக்கின்ற பாண்டியா, மற்றும் அஷ்வின் வரைக்கும் துடுப்பாட்ட வீரர்கள் இருப்பதும் அணிக்கு கூடுதல் பலம்.



யுவராஜ் சிங்குக்கு கடந்தப் போட்டியில் காலில் ஏற்பட்டிருந்த தசைபிடிப்பு  காரணமாக இன்ற போட்டியில் அவர் பங்கு பற்ற மாட்டார் என்று இன்று அதிகாலை வேளையில் அறிய கிடைத்தது. அவருக்கு பதிலாக டோனி ஒரு சகலதுறை வீரரை பயன்படுத்தலாம் என்று நான் யோசித்திருந்த தருணம் யுவிக்கு பதில் (மனிஷ் பாண்டி, ரஹானே, நேகி) ஆகியோரில் ஒருவர் விளையாடலாம்.என்னுடைய யூகத்தின்  படி மனிஷ் பாண்டி விளையாடக் கூடிய சந்தர்ப்பங்கள் அதிகமாக இருக்கின்றன அவர் சகல துறை வீரராக இருக்கின்ற படியினால்.




தவிரவும் இன்றைய போட்டியில் தொடர்ந்து துடுப்பாட்டத்தில் சறுக்கி வருகின்ற ஆரம்ப துடுபாட்ட ஜோடி (தவான், ரோஹித்) ஜோடியும், சுரேஷ் ரெய்னாவும் தன்னை தனது துடுப்பாட்டத்தை இன்றைய போட்டியில்
  சற்று அதிகமாகவே நிரூபிக்க வேண்டி இருக்கும். கடந்த போட்டிகளை  விட தவறுகளை சரியோ செய்து ஆக்ரோசத்துடன்  இந்த போட்டியில்  இந்திய அணி விளையாடுவது மட்டுமன்றி டோனி அஷ்வினை வைத்து கெய்லை  ஆட்டமிலப்பு செய்ய அதிகம் முயற்சி செய்வார் என்று நினைக்கின்றேன்.



வெற்றி வேட்கையுடன் மேற்கிந்திய தீவுகள் அணி.


இந்தப் போட்டிகள் ஆரம்பிக்க முன்பதாக மேற்கிந்திய தீவுகள் அணியின் தலைவர் டெரன் சமி கருத்தொன்றை முன்வைத்திருந்தார்.நாங்கள் இந்த ஆண்டு கிண்ணத்தை கைப்பற்றத்தான் வந்தோம் அந்த இலக்கை நோக்கி நிச்சயம் பயணிப்போம் என்று.



இந்த கருத்து சில வேளைகளில் மெய்யாகக் கூடிய சந்தர்ப்பங்கள் அதிகமாகவே இருக்கின்றன. காரணம் மேற்கிந்திய தீவுகள் அணி இந்த டி20 தொடரில் விளையாடி வருகின்ற விதம் அற்புதம் அதி அற்புதம். தான் பங்கு பற்றிய முதல் சுற்றுப் போட்டிகளில்( ஆப்கான் தவிர்த்த) மிக முக்கிய 03 அணிகளை (இலங்கை, இங்கிலாந்து, தென்னாபிரிக்கா) ஆகிய அணிகளை வெற்றிக் கொண்டு அசுர பலத்துடன் அரையிறுதிக்குள் நுழைந்திருகின்றது.


அணியின் முழு பலம் பல சகல துறை வீரர்கள் இருப்பது தான் கிரீஸ் கெயில் மட்டுமே போதும் எதிரணிகளை சிதறடிக்க,தவிரவும் டெரன் சமி,  சாமுவேல்ஸ், ப்ராவோ,ரசல், மாத்திரம் அன்றி இலங்கை அணியை சிதறடித்த ப்ளட்ச்சர் என்று ஒரு பலம் வாய்ந்த துடுப்பாட்ட வீரர்கள் மேற்கிந்திய தீவுகள் பக்கம். மேலும் ஐ.பி.எல் போட்டிகளின் மூலம் இந்திய ஆடுகளங்கள் பற்றிய சரியான புரிதல் அதிகமாகவே பிராவோ, கெயில், சமி ஆகியோருக்கு இருப்பதால் இந்த காரணியும் மேற்கிந்திய தீவுகள் அணியின் வெற்றிக்கு பங்களிப்பு செய்வதாக அமையும்.




மேலும் இன்றைய தினம் மேற்கிந்திய தீவுகள் அணியில் ப்லட்சருக்கு பதிலாக ப்லண்டன் சீமன்ஸ் அணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளார்.  ப்லட்சருக்கு காயம் காரணமாக இந்த போட்டியில் ஓய்வு வழங்கப் பட்டிருக்கிறது. இந்தியாவுக்கு எதிராக நான் என்ன செய்யப் போகிறேன் என்று பாருங்கள் என்று கெய்லும் சவால் விடுத்துள்ளதும், நேற்றய தினம் கெயில் எனக்கு அவசரமாக ஒரு சதம் தேவைப்படுகிறது என்று ஒரு பட்டாசை கொளுத்தி போட்டு டுவிட் செய்திருந்ததும் இன்றைய போட்டியை அதிகம் ரசிகர்களின் பால் ஈடுபாடு ஏற்படுத்த உதவலாம்.




மேலும் மிக சிறந்த 02 விடயங்களும் இந்த போட்டியில் அதிகம் அவதானிக்கப்படும் என நினைக்கின்றேன். முதலாவது இந்திய அணியின் தடுப்பு சுவர் விராட் கொஹ்லி டி20 தரப்படுத்தலில் முதல் இடத்துக்கு வந்திருந்தார் கடந்த போட்டியில்  வெளுத்து வாங்கியிருந்ததன் மூலமும் இந்த தொடரில் அதிக ஓட்டங்களை பெற்ற வீரர்களின் பட்டியலில் விராட் கோஹ்லி இரண்டாமிடத்தில் (முதலிடத்தில் நேற்றைய போட்டியின் நாயகன் ரோய்*72 ) இருகின்றமையும் விராட் கோஹ்ளியின் தனிப்பட்ட துரத்தியடிக்கும் தன்மை காட்டி நிற்கின்றது.





மேலும் நேற்று முன்தினம் வெளியிடப்பட்ட ஐ. சி.சி யின் பந்து வீச்சாளர்களுக்கான   டி20 பந்து வீச்சாளர்கள் பட்டியலில் மேற்கிந்திய தீவுகள் அணியின் சுழற்பந்து வீச்சாளர் பத்ரி இருக்கின்றமையும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு கூடுதல் பலம்.எல்லாவற்றையும் விட இன்றைய போட்டி நடைபெறுகின்ற மும்பை வன்கடெ மைதானம் முற்று முழுதாக துடுப்பாட்ட வீரர்களுக்கு சாதகமான மைதானம் என்கிற படியினாலும் இந்த மைதானத்தில் குறைந்த ஓட்டங்களாகவே 172 ஓட்டங்கள் ஆப்கானிஸ்தான் அணியினால் பெற்றுக் கொள்ளப்படிருக்கின்றன்மையும் இந்த மைதானம் பற்றிய புரிதலை ரசிகர்களுக்கு ஏற்படுத்தியிருக்கும். இந்த மைதானத்தில் இந்த தொடரில் மட்டும் பெறப்பட்ட ஓட்டங்கள் இதோ ( 230-8) , (229-4) , (209-5) , (183-4) , (182-6) , (172).




எது எப்படி இருந்தாலும் இன்றைய போட்டி இரண்டாவது அரையிறுதிப் போட்டி மும்பையில் ரசிகர்களின் கிரிக்கெட் ரசனைக்கு   தனியாக அமைகின்றதோ என்னவோ விறுவிறுப்புக்கு சற்றும் குறைவு இல்லாமல் இருக்கும். கெயிலின் அந்த புதிய நடனமும், கோஹ்ளியின் ஆக்ரோஷமும் சேசிங் செய்கின்ற முறையும் பெரிதும் வெளிப்படும் என எதிர்பார்க்கலாம்.




கிவிக்களுக்கு உலகக் கிண்ணம் சாபமா?


இப்பொழுது எல்லாம் அதிகம் எழுதுவதற்கு நேரம் கிடைக்கின்ற படியினால் நிறையவே எழுதலாம் என்று நினைக்கின்றேன். கிரிக்கெட் போட்டிகள் பற்றி பேசுவது, எழுதுவது என்றாலே எனக்கு அலாதி பிரியம். தொடர்கின்றேன் எனது சொற்களை நேற்றைய போட்டிகளை பற்றி.

முதலில் நம் எல்லோருக்கும் தெரியும் இந்த போட்டியில் இங்கிலாந்தை நிச்சயம் வெற்றிக் கொண்டு இந்த போட்டியில் நியூசிலாந்து ( கிவிக்கள்) வெல்வார்கள் என்று. ஆனால் நடந்ததோ வேறு மாதிரி. அதிகமாகவே  இந்த தொடரில் நியூசிலாந்தின் அணி தலைவர் கேன் வில்லியம்சனை நான் உட்பட பல கிரிக்கெட் ரசிகர்கள் அதிகமாகவே புகழ்ந்து தள்ளி விட்டோம் என்றே நினைக்கின்றேன்.காரணம் அவர் அவரது அணி இந்த தொடரில் தாங்கள் விளையாடிய போட்டிகளிலும் அனைத்திலுமே வெற்றி பெற்றிருந்தது.
(இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் ). நேற்றைய தினம் கேன் வில்லியம்சனின் வியூகம் பலிக்க வில்லையோ தெரியவில்லை. நேற்றய தினம் இங்கிலாந்து அணியின் தலைவர் ஒய்ன் மோர்கனுக்கான நாளாகவும், ஜேசன் ரோய் க்கான நாளாகவும் மாறி போனது.




முதலில் ஸ்கோர் விபரங்களை சொல்லி விட்டு மற்ற விடயங்களை பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கின்றேன்.நாளைய சுழற்சியில் வென்று நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடி  நிர்ணயிக்கப்பட்ட  20 பந்து வீசு ஓவர்களில் 08 விக்கட்டுக்களை இழந்து 158 ஓட்டங்களை பெற்றுக்க் கொண்டது. தொடர் முழுவதும் பிரகாசித்த மார்ட்டின் குப்டில்  ஓட்டங்கலோடும், அணி தலைவர் கேன் வில்லியம்சன்  ஓட்டங்கலோடும் ஆட்டமிழந்து ஏமாற்றம் தந்தது, ஆரம்பத்திலேஇங்கிலாந்து வெற்றியை நோக்கி தான் கம்பீரமாக நடை போடுகின்றது என்பதை சரியாக சொல்லியிருந்தது.



தொடர்ந்த முன்ரோ  ஓட்டங்களை பெற்று இங்கிலாந்து பந்து வீச்சாளர்களை கலங்கடித்திருந்தாலும், தொடர்ந்து வந்த கோரி அண்டர்சன், மற்றும் ரோஸ் டெயிலர் போன்ற அனுபம்  வாய்ந்த துடுப்பாட்ட வீரர்கள் தங்களது பணியை சரியாக செய்ய தேவை இருந்தார்கள் .ஒட்டு மொத்தத்தில்  கிவிக்கள் நொண்டி நொண்டி 158 ஓட்டங்களை பெற்றக் கொண்டார்கள்.பந்து வீச்சில் இங்கிலாந்து பந்து வீச்சாளர்கள் கலக்கியிருந்தார்கள் டேவிட் வில்லி, கிரீஸ் ஜோர்டான்,  ப்ளுன்கேத்ட், மொயின் அலியின் பந்து வீச்சு என்று இவர்களது மிக கட்டுப்பாடான பந்து வீச்சுடன் பென் ஸ்டோக்ஸ் சின் பந்து வீச்சு அதி அற்புதமாக அமைந்திருந்தது.




தொடர்ந்து துடுப்படுத்தாடிய ரோயும் அலக்சும் கிவிகளின் பந்து வீச்சை போட்டு துவைத்து எடுத்த்திருந்தார்கள். ஆரம்பம் முதலே ரோயின் அதிரடி தொடர்ந்தது. எனக்கு ஞாபகம் இருக்கின்ற வகையில் 04 ஓவரில் முதல் 03 பந்துகளையும் ஓட்டமற்ற பந்துகளாக மாற்றி விட்டு அடுத்த 03 பந்துகளையும் 04 ஓட்டங்களுக்கு மாற்றிய விதமும் அடுத்த ஓவரின் முதல் மூன்று பந்துகளையும் 04 ஓட்டங்களுக்கு விரட்டிய விதம் ரோயின் அதிரடி மீண்டும் ஒரு முறை காட்டியிருந்தது. இதில் மொத்தமாக (11) 04 ஓட்டங்களும், 02 ஆறு ஓட்டங்களும் அடங்கும்.

 ரோய் அவரது அதிரடியும்  இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு உறுதுணையாக அமைய அலெக்ஸ் ஹோல்ஸ்(20), ரூட் ( 27) ஆகியோர் பெற்ற ஓட்டங்களும் ஒரு பக்கம் உறுதுணையாக இருந்த போதிலும் அணியின் தலைவர் ஒய்ன் மோர்கன் வந்த முதல் பந்திலேயே எல்பிடபல்யு மூலம்  ஆட்டமிழந்த நிலையிலும் இறுதி நேரத்தில் 03 ஆறு ஓட்டங்கள், 02 நான்கு ஓட்டங்கள் உள்ளடங்கலாக 32 ஓட்டங்களை  அதிரடியாக ஆடி பெற்றுக் கொண்டது அற்புதம்.




மொத்தத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றுக் கொண்டது. இந்த நேரத்தில் மிக முக்கியமாக சொல்ல வேண்டிய ஒன்று இருக்கின்றது அதாவது முனைய போட்டிகளில் பந்து வீச்சில் கலக்கிய கிவிக்களின் பந்து வீச்சும் இந்த போட்டியில் இங்கிலாந்து துடுப்பாட்ட வீரர்களின் சமயோசிதமான துடுப்பாட்டத்துக்கு முன் எடுபடவில்லை.

இந்த வருடமும் ஒரு உலகக் கிண்ண வாய்ப்பு நியூசிலாந்து (கிவிக்களுக்கு) நழுவி போய் இருக்கிறது. இது சாபமா அதிஸ்டமா என்பதும் உங்கள் போலவே எனக்கும் இருக்கின்ற சந்தேகம். எனக்குள் இருக்கின்ற ஒரே ஒரு கவலை அண்மையில் இறந்த நியூசிலாந்தின் கிரிக்கெட் சொத்து மார்டின் க்ரோவுக்ககாவாவது கிவிக்கள் சற்றுப் பொறுமையாக விளையாடி இருக்கலாம்.


மேலுமொரு விடயம் இலங்கை அணியின் முன்னால் தலைவர் மஹேல ஜெயவர்த்தனவின் மிக சிறந்த துடுப்பாட்ட ஆலோசனையின் கீழ் இங்கிலாந்து அணி செம்மையான சரியான ஒரு பாதையில் தான் பயணிக்கிறது என்பதை இந்த வெற்றி மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறது. மேலும் இங்கிலாந்தின் சாரே பிராந்தியதுக்காக இலங்கை அணியின் முன்னால் தலைவர் குமார் சங்ககார விளையாடும் போது ரோய் வருகின்ற இங்கிலாந்து அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரர் என்று ஒரு முறை சொல்லியிருந்ததையும் இங்கே சுட்டிக் காட்ட விரும்புகின்றேன். இவர்கள் இருவரும் சாரே பிராந்தியதுக்க்காகவே தொடர்ந்து விளையாடி வருகின்றார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வாழ்த்துக்கள் இங்கிலாந்து வீரர்களுக்கு. இறுதி போட்டியில் (இந்தியா, மேற்கிந்திய தீவுகள்) ஆகிய அணிகளில் ஒரு அணியை இறுதிப் போட்டியில் சந்திக்கும். மீண்டும்  ஒரு முறை கிண்ணம் வெல்வதற்கான சூழ்நிலை இங்கிலாந்து அணிக்கு அமைந்திருக்கிறது மீண்டும் ஒரு கிண்ணம் 2010 போல அமைந்தால்..............

அடுத்த பதிவு இந்திய மேற்கிந்திய தீவுகள் பற்றி ..............



Wednesday, March 30, 2016

நம்பிக்கை தான் கையும் காலும்.

நமக்குள் ஏதாவது ஒரு சிறிய பிரச்சனை, வாழ்கையே முடிந்துவிட்டது, எனக்கு மட்டும் தான் இப்படியெல்லாம் நடக்கவேண்டுமா, என்றெல்லாம் நம்மை நாமே நொந்திக் கொண்ட சந்தர்ப்பங்கள் நமக்குள் அதிகமாகவே இருக்கும்.ஆனால், வாழ்க்கையில் எப்போதும் வீசும் சோதனைகளை கடந்து சாதனை படைக்கின்றவர்களை இந்த உலகம் எப்போதுமேர் நினைவில் வைத்துக் கொள்ளும்.

அப்படி ஒரு விபத்தில் தன் இரண்டு கைகளையும்  இழந்த ஒரு இளைஞர் தன் கனவான கிரிக்கெட் விளையாட்டை இன்னும் விளையாடி வருகிறார், அதுவும் சிறந்த முறையில் என்றால் நம்ப முடிகிறதா?

ஜம்மு காஷ்மீரின் ஆனந்த்னாக் மாவட்டத்தை சேர்ந்த அமீர் ஹுசைன். எட்டு வயது சிறுவனாக இருந்தப் நடந்த கோர விபத்தில் இரு கைகளையும் இழந்துவிட்டார். மூன்று வருடங்கள் சொல்லமுடியாத வேதனைகளை அனுபவித்த அமீரை காப்பாற்ற அவரின் தந்தை அவரின் தொழிலை விட்டு நிலத்தை கூட விற்கவேண்டி இருந்தது. 

இதனால் பலரும் இவரை சாடவே, ‘மகனை இழந்து நிலபுலம் வைத்திருந்து நான் எதற்காக வாழ வேண்டும்’ என்று பதிலளித்த அமீரின் தந்தை தான் அமீரின் முழு பலமும். இயல்பான பள்ளியில் சேர்க்கப்பட்ட போது ஆசிரியர்களால் அவமானப்படுத்தப்பட்டு புறக்கணிக்கப்பட்டார் அமீர். 

எனினும் இவை எதுவுமே அமீரை பின்னுக்கு தள்ளவில்லை. வாழ்க்கை வழி நெடுக்க பிரச்சனைகளை அனுப்ப அவை அனைத்தையும் பின்னுக்கு தள்ளி உந்திக்கொண்டே முன்னேறியுள்ளார் அமீர். 

அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்தபோது சிறு வயதிலிருந்தே தன்  கனவாக இருந்த கிரிக்கெட்டை ஏன் தொடரக் கூடாது என்று யோசித்திருகிருக்கிறார். யோசனையுடன் நின்றுவிடவில்லை. அதற்காக கடுமையாக பயிற்சி செய்துள்ளார். விளைவு, இன்று அவர் வாழும் பகுதியில் அமீர் தான் மிக சிறந்த துடுப்பாட்ட வீரர்மற்றும் பந்து வீச்சாளர். 

இவர் துடுப்பை  தன் கழுத்துக்கும், தோள்பட்டைக்கும் இடையே வைத்து பிடித்து விளையாடுவதை பார்க்கும் எவருக்கும் இவர் மேல் பரிதாபத்திற்கு பதில் மரியாதை தான் வருகிறது. பந்துகளை வீசுவதற்கு தன் கால்களை உயர்த்தி கைகளை போல பயன்படுத்திகொள்கிறார். 

இவரின் திறமையை அங்கீகரிக்கும் விதமாக அவர் மாநிலத்தின் ஊனமுற்றோர் கிரிக்கெட் அணியும் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

கிரிக்கெட் மட்டுமல்லாமல் நீச்சல், என அசத்தும் அமீர் விளையட்டு மட்டுமே தனது வாழ்க்கை என்று சுற்றி இருப்பவர்களை எப்போதும் மகிழ்சியாய் சிரிக்கவைத்துக் கொண்டு   இருக்கிறார். வாழ்த்துக்கள் சகோதரா!




Thursday, March 24, 2016

குறைகளை கலைத்து செம்மையான படைப்பாய்  "குற்றம் கடிதல்".



சில திரைப்படங்கள் மனதில் என்றுமே நீங்காத பாதிப்பை ஏற்படுத்தி விடும். அப்படி மிக நீண்ட நாட்களுக்கு பிறகு என்னில் என்றுமே நீங்காத தாக்கத்தை ஏற்படுத்திய திரைப்படம் இயக்குனர் பிரம்மனின் "குற்றம் கடிதல்". 



தமிழுக்கு கிடைத்திருக்கின்ற மற்றுமொரு இன்றியமையாத இயக்குனர் பிரம்மன். நான் தற்போதும் ரசிக்கின்ற முருகதாஸ், சமுத்திரகனி,பாலா, ஷங்கர், சசி, என்று தமிழ் சினிமாவில் நீள்கின்ற பட்டியலில் இவரையும் இணைத்துக் கொள்கிறேன்.ஒட்டு மொத்தமாக தமிழ், தெலுங்கு, கன்னடம் உட்பட பல  மொழிகளிலும் ஜிம்பாப்வே, மும்பை, கோவா, புனே, பெங்களூரு போன்ற இந்தியாவின் பல மிக முக்கிய நகரங்களிலும் படம் திரையிடப்படிருக்கின்றது. 


தமிழுக்கு இந்த வருடம் நிச்சயம் ஒரு தேசிய விருது வரும் என்கிற பெருமாப்பை தந்திருக்கிறது இந்த திரைப்படம்.
5-ம் வகுப்பு படிக்கும் ஒருமாணவன் சகமாணவிக்கு பிறந்த நாள் பரிசு கொடுப்பதற்கு பதிலாக தெரியாத்தனமாக  முத்தம் கொடுத்துவிடுகிறான். அதை தவறாய் நினைக்கும், தவறாய் புரிந்துக் கொள்ளும் ஆசிரியை கன்னத்தில் அந்த மாணவனை ஓங்கி அரைந்து விடுகிறார்.அந்த அரயினால் மாணவன் திடீரென மயக்கமடைந்து பின்னர் 'கோமாவுக்கு' சென்று விடுகிறான்.


 (அந்த மாணவனுக்கு மூளைக்கு செல்லும் நரம்பில் பாதிப்பு ஏற்படுகிறது) இந்த விடயம் அறிந்த பள்ளி நிர்வாகம், தாக்கிய  ஆசிரியை, அவர் கணவர், ஆசிரியையைப் பிரிந்துவாழும் 'ஏசு அடியாரான' தாய்,மாணவனின் விதவைத்தாய், அவனின் முற்போக்கு மாமன், செய்தியறியும் காவல்துறை என அனைவரும் பதட்டமடைகிறார்கள்.




தொடர்ந்து இந்த நிலைமை ஊடகங்களுக்கு தெரிய வந்த தருணம்,  இந்த  விடயத்தை எப்படியாவது பெரிது படுத்தி தமிழ் நாட்டில் பெரிய இடத்தை பிடிக்க வேண்டும் என ஒரு ஊடகம் ( ஒரு பெண் ஊடகவியலாளர்) போராடுகிறார். நிலைமை அறிந்த குறித்த பள்ளி ஆசிரியரின் மேலாளர் அந்த ஆசிரியரின் கணவனை ரகசியமாக அழைத்து வந்து அந்தாசிரியரையும் கூடிக் கொண்டு வெளியூருக்கு சென்று விடுமாறும் என்ன பிரச்சினை வந்தாலும் தான் சமாளித்து கொள்வதாகவும் சொல்லி விடுகிறார்.


இறுதியில் அந்த ஞாபகமே அந்த ஆசிரியரை வந்து தாக்க, எப்படியாவது அந்தமானவனின் உயிரை காக்கவும், அந்த மாணவனின் தாய், அந்த மாணவனது மாமன் என்று குறிப்பிட்ட எல்லோரிடமும் மன்னிப்பு கேட்டு விட வேண்டும் என்ற நோக்கத்தில் ஆசிரியரும் மாணவனை அனுமதித்திருக்கும் வைத்தியசாலைக்கு வந்து விடுகிறார்.




அந்த தருணம் அந்த தாயிடம் அந்த ஆசிரியை மன்னிப்பு கேட்க அந்த தருணம் அந்த தாய் தனது மகனை தவிர தனக்கு எந்த உறவும் அன்பும் இல்லை அவன தான் தனக்கு எல்லாம் என்று கூறி கதறியலும் காட்சியும், எப்படியாவது தனது மகன் பிழைத்து விட வேண்டும் என அந்த ஆசிரியரிடம் கேட்டுக் கொண்டு கண்ணீர் சிந்தி அழும் காட்சி ஒரு பெண்ணுக்கு தாய்மை உணர்வு என்பது எவ்வளவு தூரம் புனிதமானது என்பதை அழுத்தமாக கூறி விட்டது. 

அதே நேரத்தில் அந்த காட்சியும் என்னை அதிகமாகவே பாதித்து விட்டது.
இது முற்று முழுதாக இயக்குநரின் படம் என்றே நான் கூற ஆசைபடுகிறேன். கதாநாயகனை தேர்ந்தெடுத்துவிட்டு கதையை பலவாறு ஓட்டி செல்லும் போல கதைகளுக்கு மத்தியில் , தெளிவான கதைக்கு தரமான நடிகர்களைத் தெரிவு செய்து நடிக்க வைத்திருக்கிறார்.

 

பதட்டமடைவதால் யாருடைய அன்றாட வாழ்க்கையும் ஒரேயடியாய் ஸ்தம்பித்து விடுவதில்லையென்பதை காட்சிப்படுத்தியிருப்பது தான் இந்த படத்தின் இன்றியமையாத கருத்தாக இருக்கும் என  நான் புரிந்துக் கொண்டேன். பரபரப்போடே பள்ளி முதல்வரின் துணைவியார் மாவரைக்கிறார், கணவரின் உடல்நலம் கருதி கஞ்சி வைத்திருக்கிறார், பள்ளி ஆசிரியர்கள் ஊடகங்களைக் கண்டு நடுங்குகிறார்கள். 


மிகைப்படுத்தாத காட்சியமைப்புகள் நம்மை வியக்க வைக்கின்றன.
படத்தில் சிறுவனாக மாஸ்டர் அஜித், அஜித்தின் அம்மாவாக நடித்திருக்கும் சத்யா, முற்போக்கு மாமன் பாவெல் நவகீதன், ஆசிரியையாக ராதிகா பிரஷித்தா, கணவராக சாய் ராஜ்குமார், அதிபராக  வரும் குலோத்துங்கன் உதயகுமார், அவர் மனைவியாக நடித்திருக்கும் துர்கா வேணுகோபால் என அனைவரது நடிப்பும் சொல்லால்களும் அற்புதம்.தவிரவும் தமிழுக்கு புதிய இசையமைப்பாளராக உருவாகியிருக்கும் இசையமைப்பாளர் ஷங்கர் ரங்கராஜனின் இசையும் ரசிக்கக்க் கூடியது தான்.



மொத்தத்தில் குறைகளை கலைத்து செம்மையான படைப்பாய்  "குற்றம் கடிதல்".
வாழ்த்துக்கள் இயக்குனர் பிரம்மா. இன்னும் சிறந்த படைப்புக்களை தரவும் சில தேசிய விருதுகள் உங்களுக்காக உருவாக்கப்படவும்.



Wednesday, March 23, 2016

யதார்த்தத்தின் முழு உருவமாய் " பிச்சைக்காரன்."


திருப்பூரின் மிக பெரிய ஒரு வர்த்தகரின் ஒரே மகன் விஜய் ஆண்டனி. ஏதோ ஒரு விபத்தில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும், தனது தாயைக் காப்பாற்ற என்னென்னவோ செய்தும் பலனில்லாமல் போய் விடுகிறது.


அந்த நேரத்தில் ஒரு சாமியாரின் அறிவுரைகளை கேட்டு, 48 நாள் கோடீஸ்வர வேஷம் கலைத்து, ஒரு சாதாரண பிச்சைக்காரனாக வாழத் தீர்மானிக்கிறார் படத்தின் நாயகன் விஜய் ஆண்டனி அந்த 48 நாட்களிலும் தன்னை யார் என்று எந்தக் காரணம் கொண்டும், யாரிடமும் வெளிப்படுத்தக் கூடாது என்ற சுவாரஸ்யமான முடிச்சை கோர்த்து தந்திருக்கிறார், இயல்பாகவே தனது படைப்புக்களில் யதார்த்தத்தை மட்டுமே புகுத்த முற்படும் இயக்குனர் சசி.



இதற்கு  முன்னைய இவரது படைப்புக்களே கோரியிருக்கும்  இயக்குனர் சசி தமிழ் சினிமாவுக்குள் எவ்வளவு முக்கியமான இயக்குனர் என்பதை. அதற்கு இவரது திரைப்படங்களே ஒரே சான்று. ( 555, டிஷும், ரோஜாக்கூட்டம் போன்ற படைப்புக்கள்). அம்மாவுக்காக பிச்சைக்காரனா மாறுற மகன்தான் ஹீரோ’ 


என்று  ஒற்றை வார்த்தையில் சொல்லி விட்டாலே பழைய படம் மாதிரி படம் எடுக்க முட்போட்டு இருக்கிறார் என்ற வார்த்தை என் நண்பர்களின் வாயில் இருந்தும் வந்தது.  இது பழைய கதை தான் ஆனால் அதில் இருக்கின்ற யதார்த்தத்தை நான் சொல்லி அவர்கள் புரிந்துக் கொள்ள வேண்டிய அவசியம் இருக்காது என்று நினைக்கிறேன். இந்த திரைப்படம் மிக அருமையான திரைக்கதைக்கும் , அட்டகாசமான வசனங்களுக்கும் பெயர் போய் இருக்கிறது. 




என்னபா கதையின்  நாயகன் பிச்சையெடுக்கறானா?’ என்று கேட்காமல், கதாபாத்திரத்தை ஏற்றுக் கொண்டு நடித்ததோடு, சென்டிமெண்ட் என்றெல்லாம் ஏனைய நடிகர்களை போல் அலட்டிக் கொள்ளாமல்,  நடிப்பிலும் சரி தயாரிப்பிலும் சரி  படத்துக்கு ஏற்றாத் போல தனது பங்கை மிக சரியாக செய்திருக்கின்ற விஜய் அன்டனி தமிழ் சினிமாவில் வளர்ந்து வருகின்ற ஒரு தவிர்க்க மடியாத நடிகன் தான் என்பதை மற்றுமொரு முறை நான் படத்துக்கு பிறகு நிருபித்து இருக்கிறார். 



விஜய் அன்டனிக்கு நாயகனாக சரியான திரைத் தோற்றம் வந்துவிட்டது. படத்தின் ஆரம்ப காட்சியில் வெளிநாடு சென்று வெளிவரும் காட்சியில் அச்சு அசல் பணக்காரத் தோரணை காட்டும் அவர், பின்னொரு காட்சியில் காதலியிடம் கையேந்தும் போது அந்த இயல்பான நடிப்பு ஆகட்டும் ,  ஃப்ளாட்பார்மில் வில்லன்  தூக்கிப் போட்ட சாப்பாட்டை எடுத்துச் சாப்பிடும் போதாகட்டும் பிச்சைக்காரனாகவே உணர வைக்கிறார்.
அதன்பிறகு விலை உயர்ந்த காரில் இருந்து  உடைமாற்றி வெளிவரும்போது.. கெத்து காட்டியிருக்கிறார். ஒரு தயாரிப்பாளராக, நடிகராக விஜய் ஆண்டனிக்கு இதுதான் இதுவரையிலான திரைப்படங்களில் மிக சிறந்த படம் இது.





நாயகி சாதனா டைட்டஸ். அருமையாக தனது  கதாபாத்திரத்துக்கு பொருந்தி தனது நடிப்பை சரியாக வெளிப்படுத்தியுள்ளார். முதலில் சாதாரணமாக தோன்றும் இவர், போகப் போக தன் நடிப்பிலும், அழகிலும் ரசிகர்களைக் கிறங்கடித்து விடுகிறார். அந்தக் கண்கள்...  கொள்ளை அழகு!. 



அதிலும் தனது காதலன் பிச்சைக்காரன் என்பதை அறிந்தும் அவன் மீது அவள் கொள்கின்ற காதல் அருமையான உணர்வுகளை, காதலின் அருமையை, காதலின் புரிதலை  இன்றைய காதலர்களுக்கு தந்திருக்கும் என நினைக்கிறேன். அதிலும் என்னை விட்டு நீங்காத காட்சியாக நாயகன் பிச்சை எடுக்கும் சந்தர்பத்தில் நாயகி வந்து அவனுக்கு பிச்சை கொடுக்கும் காட்சி சொல்ல வார்த்தைகளே இல்லை. உண்மையான காதல் அங்கு புரிந்தது எனக்கு. 




அம்மாவாக நடித்திருக்கும் தீபா ராமானுஜம், பெரியப்பாவாக நடித்திருக்கும் முத்துராமன் எல்லோருமே அவரவர் பாத்திரத்தைக் கச்சிதமாய் செய்து இருக்கிறார்கள். ஆனால் இவர்கள் எல்லோரை விடவும் ஒட்டுமொத்த ரசிகர்களின் கரகோசங்களையும் வாங்கி கொள்பவர்கள் அந்தப் பிச்சைக்கார நண்பர்களும், வில்லன் குழுவில் இருக்கும் ‘சந்திரபாபு’ சாயல் ஆசாமியும்தான். 


அதும் யார் சார் அந்த ‘சந்திரபாபு’ சாயல் நடிகர்? கேட்காதிர்கள் வில்லனின் ‘ரைட்’ அடிவாங்கிய பிறகு சிரிப்பை அடக்கும் காட்சியில் தியேட்டரையே சிரிப்பை அடக்க முடியாமல் செய்துவிடுகிறார்.
இந்த  இடத்தில் ஒரு விடயத்தை கூறியே ஆக வேண்டும் சசியின் வசனங்கள் என்னை ஒரு நிமிடம் கிறங்கடிக்க வைத்து விட்டன. 



அதிலும் நாயகன் பிச்சை எடுப்பவனா என்ற செய்தி அறிந்து வில்லன் கூறுகின்ற வசனம் " ஏந்தற கைக்கு, ஓங்கற பழக்கம் வராது’ " , அதுபோல தனது தாய்க்கு எல்லா பிரச்சனைகளும் நீங்கிய பிறகு இறுதியில் அந்த தாய் நாயகனை பார்த்து, உன்னால் முடிஞ்சா உதவி செய்யுப்பா முடியாட்டி பரவா இல்ல அவங்கள (பிச்சைக்காரங்களை) காக்க வைக்க கூடாதுப்பா நம்பளால அவங்க நெலமைல எல்லாம் ஒரு நாள் கூட இருக்க முடியாதுப்பா என்கிற வசனங்கள்  எல்லாம் சசியை தனிப்பட்ட இயக்குனராக மாற்றி விட்டிருக்கிறது சபாஷ் சசி.



படத்தின் மற்றுமொரு பலம் பாடல்கள் பின்னணி இசையிலும் சரி, பாடல்களுக்கான இசையிலும் சரி விஜய் அன்டனிக்கு ஒரு பூங்கொத்துக் கொடுக்கலாம். அதலும் நூறு சாமிகள் இருந்தாலும் என்ற பாடலும், உனக்காக வருவேன் என்ற பாடலும், நெஞ்சூரத்தில் என்ற பாடலும் அற்புதம். அதி அற்புதம்.
மொத்தத்தில் "பிச்சைக்காரன்  யதார்த்தத்தின் முழு உருவமாய்".




நிழல்களை தேடி.


 பெண்விடுதலை பற்றிய விழிப்புணர்வு பெண்கள் மத்தியில் இன்று மிக பெரிய அளவில் மேலோங்கியுள்ளது. இது பெண்களின் வரலாற்று மூலங்களை நோக்கிய ஒரு தேடல், துக்கம், சந்தோசம்; கோபம், காதல் என பல உணர்வுகளை பல எழுத்தாளர்கள் பல வகைகளில்  எழுத்துக்களாய் வடித்தாலும் கவிதை நடையில் பெண் உணர்வுகளை சொல்வது அரிது. அப்படி பெண் உணர்வுகளை கூறியிருக்கின்ற நூல் இது.


போர், பட்டினி, அரசு ஒடுக்குமுறை ஆண் அதிகாரம், பெண் ஒடுக்குமுறை ஆகியவற்றின் கீழ் அவதியுறும் பெண்களின்  மனோநிலையை, காயப்படுத்தபட்ட நம்பிக்கையின் சோகத்தை வெளிப்படுத்தும் கவிதைகள் இந்த நூலி ஏராளம் ஏராளம். அப்படி சில கவிதைகளையும் சில யதார்த்த உணர்வுகளையும் நூலில்  இருக்கின்ற படியாகவே இங்கு வெளியிடுகின்றோம்.முதலில் பாலியல் பலத்காரம் பற்றி நூலாசிரியர் புதிய மாதவி கூறி இருக்கின்றதாவது,
பெண்கள் மீது சுமத்தப்படும் அதிதீவிர வன்முறைதான் ஆண்களால் நிகழ்த்தப்படும் பாலியல் பலாத்காரம். 

பெண்களை ஏமாற்றும் பாவச் செயலை, துரோகங்களை என்றுமே ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று.பாலியல் வன்முறையானது பெண்கள் மீதான ஆண்களின் அதிகாரத்தின் அராஜகத்தின் வெளிபாடே.பெண்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்படுவதும் பின் தூக்கியெறியக்கூடிய போகப் பொருள்களாக பெண் பார்க்கப்படுவதையும் எறும்புக்கடி என்ற கவிதையில் பின்வருமாறு கூறுகிறார்.


"ஒற்றை நட்சத்திரம்
போதுமா இருட்டுக்கு?
நகைக்கிறது வானம்
எப்படி புரியவைப்பேன்?
முகம் தேடி அலையும் இருட்டில்
எரியும் மெழுகுவர்த்தியிடம்
காணாமல் போகிறது
கண் கூசும் சூரியன் என்பதை "
மேலும் ஆண் மொழி அதிகாரத்தினால் சூழப்பட்டுள்ள இந்த உலகில் பெண்கள் முகம் தேடும் முயற்சியில் அவளது மொழியும் குரலும் வலிமையானதுதான் என புடம் போட்டு பேசுகிறது    புதிய நந்தன் என்ற கவிதை.


"பாலைவனச் சூடும்
பாதரச நெருப்பும்
எரிக்காத நந்தனை
எரித்துக்கொண்டிருக்கிறது
பிறந்த மண்ணில்
பிறப்பையே குற்றமாக்கி
வாயில் திணிக்கப்பட்ட
மலமும் மூத்திரமும்".
இவ்வாறாக மொத்தமாக 30க்கும் மேற்பட்ட கவிஹைகள் இந்த நூலில் நிறைந்திருக்கின்ற அந்த கவிதைகள் அனைத்துமே பெண்ணியம் என்ற ஒற்றை சொல்லின் ஊடாக யதார்த்தத்தை பேசுகின்றன. அதாவது இச்சமூகம் பெண்களை தமது ஆண் அதிகாரத்திற்குள் அடக்கி வைத்திருந்தாலும் அதையும் மீறி பல்வேறு பரிமாணங்களில் பெண் எழுத்துக்கள் மிளிரும் என்ற புதிய மொழியின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தை, எரியும் சாம்பலிலும் அதன் உயிர்ப்பைக் அடையாளம் இடுவோம் என உரத்துக் கூறுகிறார்.

படிமங்களின் ஆளுமையும் ,குறியீடுகளின் அர்த்தங்களும் கவிதையாக புரிந்து கொள்ளப்படுகிற சூழலில் அன்றாடம் பெண்களின் வாழ்க்கையில் நடைபெறும் நிகழ்வுகளை அனுபவங்களை வார்த்தைகளால் எளிமையாக ஊடறுத்து தந்துள்ளார்.


இந்தப் புத்தகத்தின் கவிதைகளின் முழு பலமே  சக மனிதர்கள் மீதான அன்பும், சமூக பிரக்ஞையுமே எனலாம். நவீன சமூகத்தில் வெளிப்படும் இன்றைய தளங்களான பெண்ணியம், குடும்பம், கல்வி, சாதி சுற்றுச்சூழல் என எண்ணற்ற தளங்களில் ஏற்படும் பிரச்சினைகளையெல்லாம் ஊடுருவும் கவிதைகள் தான் புதியமாதவியின் கவிதைகளாகும்.சந்தர்ப்பம் கிடைத்தால் வாசித்துப் பாருங்கள்.

Friday, March 18, 2016

விளையாட்டு உலகின்
பொன்னான தருணங்கள்

2015ஆம் ஆண்டு வருடத்துக்கு இன்று விடை கொடுக்க நாம் எத்தனித்திருக்கின்ற சந்தர்ப்பத்தில்  இந்த வருடம் உலக விளையாட்டு வரலாற்றில் நடந்த இனிமையான தருணங்கள் பற்றிய ஓர் அலங்ல் இது.

      இவ்வாண்டு சர்வதேச  ரீதியில் அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, ஐக்கிய அமெரிக்கா, நைஜீரியா ஆகிய நாடுகள் தம் வரலாற்றில்   தமது துறை சார்ந்த விளையாட்டுக்களின் மீண்டுமொரு முறை தமது பெயரை ரசிகர்கள் மனதில் அழுந்தப் பதித்திருக்கின்றன. மேற்குறிப்பிட்ட அனைத்து நாடுகளும் உலகக்கிண்ணங்களை கைப்பற்றிய அதே வேளை டென்னிஸ் போட்டிகளில் உலகக்கிண்ணம் எனக் கொண்டாடப்படும் டேவிஸ் கிண்ணம் சம்மேளனக் கிண்ணங்களை பிரித்தானியாவும் செக்குடியரசும்  கைப்பற்றிக்கொண்டன.
அவுஸ்திரேலிய வீரர்களின் கைகளில் தொடர்ந்து 6ஆவது தடவையாக உலகக்கிண்ண கிரிக்கட் கிண்ணம் அலங்கரித்துக் கொண்டிருக்கின்றன அதே தருணத்தில்  உலக கிண்ண வலைப்பந்தாட்டத்திலும் அவுஸ்திரேலியா கிண்ணத்தைக் கைப்பற்றியிருந்தது.
தவிர ரக்பி உலகக் கிண்ணத்தை பொருத்த மட்டில் அவுஸ்திரேலியா இறுதிப்போட்டி வரை போராடி முன்னேறியிருந்தாலும் ரக்பி உலக்கிண்ணத்தை ஒல் பிளாக்ஸ் என்று வர்ணிக்கப்படும் நியூசிலாந்து கைப்பற்றியிருந்தது.

கங்காரு வீரர்களின் வெற்றி வேட்கை
இவ்வருடம் பெப்ரவரி,மார்ச் மாதங்களில் அவுஸ்திரேலியா,நியூசிலாந்து மண்ணில் நடைபெற்ற உலக்கிண்ண கிரிக்கட் போட்டிகளில் தொடர்ந்து 6ஆவது தடவையாகவும் மைக்கல் கிளார்க் தலைமையில் கிண்ணத்தை அவுஸ்திரேலியா கைப்பற்றியிருந்தது.
கிட்டத்தட்ட 41 வருட கிரிக்கட் வரலாற்றில் அவுஸ்திரேலியா தொடர்ச்சியாக 6ஆவது தடவையாக  கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது.

வலைப்பந்தாட்ட உலக கிண்ணமும்
அவுஸ்திரேலிய
வீராங்கணைகள் கைகளில்....
அவுஸ்திரேலியா ஆண்கள் கிரிக்கெட் அணி உலக்கிண்ணத்தை வென்று தாம் ங்ாதனையாளர்கள் என்று மார்தட்டிக் கொண்டிருந்த ங்ந்தர்ப்பத்தில்  தாமும் ங்ளைத்தவர்கள் இல்லை என்பதை அவுஸ்திரேலியா பெண்கள் அணி நிருபித்து 2015ஆம் ஆண்டு வலைப்பந்தாட்ட கிண்ணத்தைக் கைப்பற்றிக் கொண்டது.
சிட்னி உள்ளக விளையாட்டு அரங்கில் நடைபெற்ற குறித்த போட்டிகளில் இலங்கை அணி உள்ளிட்ட 16 அணிகள் பங்குபற்றியிருந்ததோடு துர்திஷ்டவங்மாக இலங்கை அணி ங்கல போட்டிகளிலும் தோல்வித்தழுவி நாடு திரும்பியிருந்தது.
அவுஸ்திரேலியா,நியுசிலாந்து அணிகள் இறுதிப் போட்டியில் மோதின.நியூசிலாந்தை வெற்றி கொண்டு அவுஸ்திரேலியா ஜெயித்தது.

மீண்டுமொருமுறை ஓல் பிளாக்ஸ்
லண்டன் மாநகரில்  90 ஆயிரம் ரசிகர்களின் ஏகோபித்த கரகோங்ங்களோடு மீண்டுமொரு முறை நியூசிலாந்து ரக்பி அணி தம் திறமையை நிரூபித்து கிண்ணத்தை சீவீகரித்தது.
தன்னை எதிர்த்தாடிய அவுஸ்திரேலிய அணியை 34க்கு 17 என்ற புள்ளிகள் அடிப்படையில் பதம் பார்த்த நியுசிலாந்து தோல்வி அடையா அணி என்ற பெருமையைபெற்றுக் கொண்டது.
இந்த வெற்றியோடு நியுசிலாந்து ரக்பி உலகக் கிண்ணத்தை 4ஆவது முறையாகவும்  கைப்பற்றிய அதே வேளை இந்த வெற்றிக்கு மிக பிரதான காரணம் டான் கார்ட்டர்,70 ஆவது நிமிடத்தில் பெற்ற இந்த அற்புதமான கோல் தான். இத்தோடு ஙே்ர்த்து கார்டர் சிறந்த ரக்பி வீரர் என்ற விருதையும் தட்டிச்ஙெ்ன்றார்.

மீண்டும் கால்பந்தாட்ட உலககிண்ணம்
ஐக்கிய அமெரிக்க வீராங்கனைகள் வங்ம்
மொத்தமாக 24 நாடுகளுக்கு பங்கு பற்றிய மகளிர் உலகக்கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகளில் 5 க்கு 2 என்ற                  கோல்கள் அடிப்படையில் ஐப்பான் அணியை வீழ்த்தி ஐக்கிய அமெரிக்க பெண்கள் அணி உலக ங்ம்பியனானது.
கனடாவில் வன்கூவர் மைதானத்தில் நடாத்த இப்போட்டிகளில் இறுதிப்போட்டி கிட்டத்தட்ட 60,432 ரசிகர்களின் மனதுக்கு இனிமை தந்த மற்றுமொரு உலக்கிண்ணப் போட்டியாக அமைந்தது.

உலகக்கிண்ணம் இங்கிலாந்தின் கைகளில்

டென்னிஸ் உலகில் உலக்கிண்ணம் என வர்ணிக்கப்படும் ஆடவர்களுக்கான டேவிஸ் கிண்ணத்தை இம்முறை இங்கிலாந்து கைப்பற்றியதோடு 79 வருடங்களின் பின்னர் இங்கிலாந்து கைப்பற்றிக் கொண்டது.
மேற்குறிப்பிட்ட இத்தனை உலகக் கிண்ணங்கள் கைப்பற்றப்பட்டன.ஆனால் மொத்த விளையாட்டு உலகையும் உலுக்கிய ஒரு விடயம் அவுஸ்திரேலியாவின் துடுப்பாட்ட வீரர் பிலிப் ஹியூக்ஸ் துர்திஸ்டவங்மாக பந்து தலையில் பட்டு மரணத்தை தழுவியது.ஒரு உன்னதமான விளையாட்டு ரசிகர்களாக இத்தனை பொன்னான தருணங்களையும் கொண்டாடிய நாம் அந்த ங்ாதனை வீரரின் இறப்புக்காக ஒரு நிமிடம் பிரார்தனை ஙெ்ய்வோம்.
விளையாட்டு என்பது உணர்வு பூர்வமானது அதனை வெறுமனே மகிழ்ச்சிக்காக மட்டும் பயன்படுத்தாமல் இது போன்ற துக்கக்களுக்காகவும் பயன்படுத்தும் போது உள்ளார்ந்த விளையாட்டு ரசிகர்களாக நாம் உருவெடுக்கலாம்.



போலிவுட்டின் தனி ஒருவன்.

போலிவுட்டின்  தனி ஒருவனுக்கு பிறந்த நாள்.



சிறுவயதாக இருந்த போது ஒருநாள் எனக்குள் இருந்த அதீத கிரிக்கெட் ஈடுபாட்டினால் ஒரு நாள் இறுவட்டு (CD ) கடையில் வெறும் கிரிக்கெட் படங்களாக தேடிக்கொண்டிருந்தேன். அந்த தருணத்தில் "க்ரிதிக் ரோஷன்"  நடித்த "விக்டரி" ஒரு படத்தை  வாரு தேடி எடுத்துக் கொண்டேன். அந்த திரைப்படத்தை  தேடி எடுத்த நேரம் அமீர்கானின் "லகான்" திரைப்படம் கிடைத்தது. திரைப்படத்தை எடுத்ததும் என்னடா!பெரிய படமாக இருந்து விட போகிறது இந்த படம், என நினைத்துக் கொண்டு சரி பரவா இல்ல கிரிக்கெட் படம் தானே பாப்போம் என நினைத்துக் கொண்டு மாலை வேளையில் படம் பார்க்க தொடங்கினேன்.

முன்னர் என்னடா இந்த படம் என நினைத்ததற்கு பதிலாக, படத்தை பார்த்து முடித்த தருணம் என்னை நானே நான் நொந்துக் கொண்டேன். "அந்த  லகான் படம் அப்படி. லகான் தி பெஸ்ட்".  பார்த்தவர்களுக்கு இந்த படம் பற்றி சொல்ல தேவை இருக்காது. அன்றிலிருந்து ஆரம்பித்தேன் தனி ஒருவன் அமீர்கான் பற்றி தேட, அன்றிலிருந்தே அவரது ரசிகனாகவும் ஆகி விட்டேன்.


ஒரு நாள் தமிழ் திரைப்பட துறையின் தனிகரில்லா இயக்குனராக இன்று வளர்ந்திருக்கின்ற ஷங்கர் ஒரு  நாள் அமீர் கானின் ஒரு திரைப்படத்தை பார்க்கிறார் எவ்வளவு நேரம் சென்றும் அவரால் அந்த படத்தின் நினைவுகளில் இருந்து மீளவே முடியவில்லை அந்த திரைப்படத்தை உடனே தமிழில் உருவாக்க வேண்டும் என முடிவு செய்தார்.


அந்த இன்றியமையாத படைப்பாளியின் முதல் ரீமேக் படம் ஹிந்தியில் அமீர் கானின் கூட்டணியில் உருவாகி, பட்டையை  கிளப்பிய 03 இடியட்ஸ் தமிழில்  நண்பனாக பரிணாமம் அடைந்தது.நண்பன் படத்தை ரசித்தவர்கள் உண்மையில் ஷங்கரை  மனதார பாராட்டியதை பல தடவைகள் நேரடியாகவே பார்த்திருக்கிறேன். அனால் உண்மையில் அந்த பாராட்டுதல்களும் கை தட்டல்களும் சேர்ந்திருக்க வேண்டியது அமீர் கான் என்ற தனி ஒருவனுக்கு தான். (அதற்காக நட்பூக்கள் ஷங்கர் திறமையானவர் இல்லை என்றும் நான் கூற வில்லை அவ்வாறு தவறாகவும் புரிந்துக் கொள்ள வேண்டாம். )



இதுவரைக்கும் தனி ஒருவன் மாத்திரம் இந்தியாவிலேயே ஒட்டு மொத்த இந்தியாவிலேயே 04 தேசிய விருதுகள், ஏழு ஃப்லிம் ஃபேர் விருதுகள். பத்மஸ்ரீ, பத்மபூஷன் என்று எல்லா வகையான விருதுகளையும்  கையில் வாங்கிக் கொண்டு தான் நான் இன்னும் ஒன்றுமே பெரிதாக செய்ய வில்லையே என்று பௌவியமாக இருந்துக் கொண்டு வேகமாக இன்னும் வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் ஒரு ஓட்ட பந்தய வீரன். 

தான் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு கதைகள் மூலமும்  சமூகத்திற்கு ஏதேனும் ஒரு செய்தியை சொல்லும் ஆர்வமுள்ள படைப்பாளி.
இந்த தனி ஒருவன் நடித்த 3 இடியட்ஸ் திரைப்படம், இந்திய மாணவர் சமூகத்தில் மிக  பெரிய தாக்கத்தை உண்டாக்கியது என்பதை விட  பல இளைஞர்கள்  அதற்கு பின் தான் தமக்கான ஒரு பாதையை தேடி செல்ல முட்பட்டிருந்தார்கள். அதன் பின் அவரது குறிப்பிட தக்க படைப்புக்களில் முக்கியமானது "பிகே" அந்த படத்தில் அவரது கதாபாத்திரமும், நடிப்பும் சொல்ல வார்த்தைகளே இல்லை. 



மதம் என்ற பிடியில் பாரத நாடு  எப்படி குழம்பிப் போயுள்ளது என்பதை  யாரையும் எதிர்பார்க்காமல் மிக தைரியமாகவே சொன்னவர். இப்படி சமூக சிந்தனைகளோடு கூடிய கமர்ஷியல் படங்களைக் கொடுப்பதில் அமீர்கான் ஒரு ரியல் ஹீரோ நமது இளைஞர்களை பொறுத்த வரையில்.
திரைப்படங்கள் மட்டுமல்லாது சின்னத்திரையில் அவர் நடத்திய 'சத்தியமேவ ஜெயதே' எனும் தொடர் அவருக்கு வெள்ளித்திரையில் கிடைத்திராத, பெயரையும், புகழையும், எல்லாவற்றிற்கும் மேல் அவர் மீது ஒரு பெரிய மரியாதையையும் மக்களிடையே ஏற்படுத்தியது. 


சமூகத்தில் நமக்கு ஏற்படும் இன்னல்களைப் பற்றியும், அதை மாற்றும் வழிமுறைகளையும் காட்டிய அந்தத் தொடரால் உண்மையிலேயே பல மாறுதல்கள் ஏற்பட்டன, இன்றும் ஏற்பட்டுக் கொண்டு தான் இருக்கின்றன.
இவரது படத்துக்கு 1000, 2000,3000,4000,5000 என்று டிக்கெட் விலை உயர்ந்துக் கொண்டே இருந்தாலும் அது ரசிகர்களுக்கு கவலையை தராது மாறாக அமீர்கானின் படத்தை பார்த்து விட்டோமே என்ற மாறுதலை மட்டும் தான் தரும் அப்படி ஒரு ரசனை மிகுந்த யதார்த்தமான ஒரு ஒரு நடிகர் அமீர் கான்.


அப்படி பட்ட நடிகருக்கு இன்று 51 வயதாகிறது. அந்த நடிப்பு சகாப்தம் நடிக்க தொடங்கியது 1973ம் ஆண்டு காலப்பகுதியில்.
மும்பையில் தயாரிப்பாளர் தாகிர் ஹுசெயின், சீனத் ஹுசெயின் தம்பதியினருக்கு பிறந்த இவர், இன்றைய நாளில்  பாலிவுட்டின்  மோஸ்ட் வாண்டட் நடிகர். இந்திய மொழிகள் எல்லாவற்றிலுமே தனக்கென ஒரு இடம் பிடித்திருப்பவர். 

தனக்கான ஒரு தனியான இடத்தை வைத்திருப்பவர். நான்கு குழந்தைகளுள் மூத்தவரான அமீர் தனது முதல் திரையுலக பிரவேசத்தை 1973ஆம் ஆண்டு தனது உறவினரும், இயக்குனருமான நாசிர் ஹுசைனின் "யாதோன் கி பாரத்" படத்தில் குழந்தை நட்சத்திரமாக துவங்கினார். அதன் பிறகு 1988ல் இவர் நடித்த ‘கயாமத் சே கயாமத் தக்’ இந்திய அளவில் மாஸ் ஹிட்டடித்த படம். அதில் பல விருதுகளை அள்ளி, தனக்கென ஒரு சிம்மாசனத்தைப் பிடித்தார்.


 பின், பல திரைப்படங்களிலும் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து, இளையவர்கள் முதல் பல்லு  போன கிழவர்கள் வரை அணைத்து தரப்பினர்களையும் தனக்கு ரசிகர்களாக மாற்றினார்.
ஒரு முழுமையான நடிகர் என கூறும் அளவிற்கு இவரது நடிப்பும், திரையில் இவரது செயல்பாடுகளும் நிச்சயம் அமைந்திருக்கும். அப்படி அமையாமல் ஒரு திரைப்படம் கூட இந்த தனி ஒருவனின் படத்தில் நான் பார்த்தது கிடையாது. 

ஒரே மாதிரியான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை சலிப்பில் ஆழ்த்தாமல் ஒவ்வொரு படத்திலும் ஒரு புதிய கதைக்களம், புதிய கதாபாத்திரத்தை ஏற்று நடிப்பது மட்டும் அல்லாமல் ஒரு புதிய தேடலை வெளிப்படுத்தும் நடிகர்களில் இன்றியமையாத ஒரு இடம் இந்த தனி ஒருவனுக்கு தான் இருக்கிறது என்று நினைக்கிறேன்.


எழுபதுகளில் சினிமா பார்க்க தொடங்கிய  முதல் இளம் பெண்கள்  தொடக்கி  இந்தக் கால இளம்பெண்கள் வரை அனைவரின் கனவு நாயகனாகவும், ஆண் ரசிகர்களுக்கு நல்ல நடிகனாகவும்,  ஒரு ஆசிரியராகவும்,குழந்தைகளுக்கு ஒரு முன்மாதிரியாகவும் இருக்கின்ற இவர் இதுவரைக்கும்  திரையுலகிற்கு அளித்த திரைப்படங்கள்  57. நடிகராக மட்டுமல்லாமல் ஒரு தயாரிப்பாளர், உதவி இயக்குனர் என  பண் முகங்களைக் கொண்டவர் இந்த தனி ஒருவன்.



'அமீர் கான்' எனும் பெயரைக் கேட்ட உடன் பலரது மனதிற்கும் வரும் சில திரைப்படங்கள் "லகான், மங்கள் பாண்டே, தாரே ஜமீன் பர், 3 இடியட்ஸ், பிகே"  ஒவ்வொன்றிலும் தனது நடிப்பால் பல கோடி ரசிகர்களையும், பல கோடிகளில் கலெக்ஷனையும் ஈர்த்தவர் என்பதையும் தாண்டி பலரது இதயங்களில் வாழும் ஒரு சினிமா ஆதர்ச நாயகன் அமீர் கான் என்ற தனி ஒருவன். வாழ்த்துக்கள் இனிமையான பிறந்த நாள் வாழ்த்துக்கள்.


தொடரட்டும் தனி ஒருவனது சாதனைகள், உனது படைப்புகளை பார்த்து இளம் இளைஞர்கள் தமக்கான பாதையை தேடி கொள்ளட்டும், உனது படைப்புக்கள் எப்போதுமே கை தட்டல்களை வாங்கி குவிக்கட்டும். "தலைவா யு ஆர் கிரேட் என்ன ஆசீர்வாதம் பண்ணுங்க".