Saturday, November 21, 2015

ச்லட்ஜிங் சிறுத்தை ஓய்வு பெற்று விட்டது.

எனக்கு தெரிந்த ஆஸ்திரேலிய வேக பந்து வீச்சாளர்களில் பிரெட்லீக்கு அடுத்து நான் அதிகம் ரசித்தது மிச்சல் ஜோன்சன் என்ற ச்லட்ஜிங் புயலைதான்.எந்த துடுப்பாட்ட வீரராக இருந்தாலும் சரி அவரது பவுன்சர் பந்துகள்.வேகம் எதிர்த்து துடுப்பெடுத்தாடும் வீரரை ஒரு நிமிடமா கதி கலங்க வைத்துவிடும்.ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி பல முறை உலக கிண்ணம் வெல்வதற்கும்,பல தொடர்களை வெல்வதற்கும் மிக முக்கியமான ஒரு வேக பந்து வீச்சாளர் என்றால் என்னை பொறுத்தவரை அது மிச்சல்  ஜோன்சன் தான் என்று கூறுவேன்.அவர் நவம்பர் 17-ம் திகதி  தனது ஓய்வை அறிவித்து விட்டார்.
சில நிமிடம் அவர் செய்தது சரியாய் என்று யோசித்தேன் கரணம் கிரிக்கட்டை உண்மையாக நேசிக்கிற ஒவ்வொரு ரசிகனுக்கும் ஒரு மிக சிறந்த வீரர் தனது ஓய்வை அறிவிக்கிறார் என்றால் மனதில் பல கேள்விகள் எழும் அந்த கேள்வி தான் எனது அந்த யோசனைக்கும் காரணம்.


மிச்சல் ஜோன்சன் பற்றிய சிறு பகிர்வு.
ஒருநாள் போட்டிகள் என்றாலும் சரி மிச்சல் ஜான்சனின் 10 ஓவர் எப்போது முடியும் என்பதுதான் எதிரணியின் எதிர்பார்ப்பாக இருக்கும். அதுவே, டெஸ்ட் போட்டி என்றால் இன்று யாரை வம்பிழுக்கப் போகிறார், இவரது பவுன்சரில் யார் யார் நிலைகுலையப் போகிறார்கள் என்பதுதான் எதிர்பார்ப்பாக இருக்கும். கிட்டத்தட்ட 10 வருட காலம் ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடி உள்ள  மிட்சல் ஜான்சன் பல பல சாதனைகளுக்கு  சொந்தக்காரர்.


ஆஸ்திரேலிய அணியில் பிரட்லீ, மெக்ராத், ஃப்ளெம்மிங் போன்றவர்கள் ஓய்வு பெற்றதற்கு பின்பு,  ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளருக்கான தேடலில் முக்கிய இடம்பிடித்தவர்களில் முதன்மையானவர் மிட்சல் ஜான்சன். ஓடிவரும் ஸ்டைல் துவங்கி, பந்தை ஆடுகளங்களில் அடித்து தலைக்கு மேலே பவுன்ஸர்களாக மாற்றுவது வரை பேட்ஸ்மேனை ஒரு நிமிடம் நிலைகுலைய வைப்பவர். உலகின் தலை சிறந்த ஆட்டக்காரர்களான சச்சின், தோனி, காலிஸ் போன்றவர்களை கலங்கடித்தவர் ஜான்சன்.

ஆஸ்திரேலிய அணியின் ஆஸ்தான ஆயுதமான ஸ்லெட்ஜிங்கை சிறப்பாக செய்தவர் ஜான்சன். அந்த  ஸ்லெட்ஜிங் மூலம் பல வெற்றிகளை ஆஸி அணி பெற்றுக்கொண்டது. சைமண்ட்ஸ், பிரெட்லீக்கு இணையாக ஸ்லெட்ஜிங்கில் ஈடுபட்டவர் ஜான்சன்தான். 2013 /2014 ஆம் ஆண்டுகளில்  இடம்பெற்ற ஆஷஸ் தொடரின்போது ஜோ ரூட்டை வம்பிழுத்ததுதான் இவரது ஸ்லெட்ஜிங்கின் உச்சக்கட்டம். ஜான்சனின் அனல் பறக்கும் பந்துவீச்சு, சரியான நேரத்தில் கைகொடுக்கும் பேட்டிங் இதனையெல்லாம் தாண்டி இவரது ஸ்லெட்ஜிங்கிற்கு தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது.

களத்தில் எப்போதும் அக்ரஸிவாக இருந்தால்தான் ஒரு வேகப்பந்து வீச்சாளரால் வேகமாக பந்துகளை வீச முடியும் என்பது அக்தர் காலத்து ட்ரிக்ஸ் அதனை இன்னும் ஒருபடி சிறப்பாக செய்தவர் ஜான்சன்.   பிலிப் ஹூயூக்ஸ், பவுன்ஸர் தாக்கி உயிரிழந்தார் அந்த சோகம் ஆஸி  வீரர்களை அதிகமாக தாகி விட்டது.அதன் பின்பு சுற்றுலா இந்திய அணிக்கு  எதிரான போட்டியில்     முதல் டெஸ்ட் போட்டியில்  ஜான்சன் இந்திய அணியின் தலைவர்  விராட் கோலிக்கு வீசிய பந்து ஹெல்மெட்டை தாக்கிய சந்தர்ப்பத்தில், சற்று நேரம் நிலைகுலைந்தார் கோலி. அந்த பவுன்ஸர் தான் ஆஸ்திரேலியா தொடரை வெல்ல ஆஸி வீரர்களை மனதளவில் தயார்படுத்தியது என்றே சொல்லலாம்.


ஆஸ்திரேலிய அணியின் அனைத்து போட்டிகளிலும் ஜான்சனின் பங்களிப்பு கட்டாயம் இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பும், அதே போல் அவரது ஆட்டமும் இருக்க வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பும் கண்டிப்பாக ஆஸ்திரேலிய ரசிகர்களிடம் கண்டிப்பாக இருக்கும். ஒற்றை ஆளாக அணியை வெற்றிப்பாதைக்கு  அழைத்து செல்வார் ஜோன்சன்.மேலே குறிப்பிட்ட கூற்றுக்கு  2013-2014 ம் ஆண்டில் இடம்பெற்ற ஆஷஸ் தொடரில் ஜோன்சன் கைப்பற்றிய விக்கட்டுகளே சான்று.

ஜான்சனின் பலமே பவுன்சர் பந்துகள் தான் . டெஸ்ட் போட்டிகளில் புதிதாக களமிறங்கும் வீரர் ஜான்சன் பந்துவீசும் போது துடுப்பெடுத்தாட  பயப்படுவார் காரணம் அவர் சந்திக்கும் முதல் பந்தை கணிக்க முடியாத பவுன்ஸராக்கி ஆட்டத்தை தன் கட்டுப்பாட்டுக்குள் எளிதில் திருப்பும் திறன் கொண்டவர் ஜான்சன். டென்னிஸ் லில்லி புகழ்ந்த வேகப்பந்துவீச்சாளர்களில் ஜான்சனும் ஒருவர். ஓய்வை அறிவித்த பின்பு இங்கிலாந்து முன்னாள் கேப்டன் வாகன் 'இங்கிலாந்து வீரர்கள் மகிழ்ச்சியடைவார்கள் காரணம் இனி அவர்கள் ஜான்சனை எதிர்கொள்ளமாட்டார்கள்' என புகழ்ந்துள்ளார் அந்த அளவுக்கு ஜோன்சனின் வேகபந்து வீச்சும்,பவுன்சர் பந்துகளும் எதிரணி வீரர்களை தாக்கியிருக்கிறது ,அதிலும் இங்கிலாந்து அணி துடுப்பாட்ட வீரர்களை சொல்லே வேண்டாம்.


ஆஸ்திரேலிய அணியின் பந்து வீச்சாளர்களில் விக்கெட் மெஷின் ஜான்சன் தான். டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்திய ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்களில் 4வது இடத்திலும், வேகப்பந்துவீச்சாளர்களில் 3வது இடத்திலும் உள்ளார். கடைசி போட்டியில் ( அதாவது நியூசிலாந்து அணிக்கு எதிராக  அவர் எடுத்த விக்கெட்) ஆஸியின் வேகப்பந்து  ஜாம்பவான் பிரெட்லீயின் சாதனையை முறியடித்தது. கிரிக்கெட் வாழ்க்கையின் கடைசிநாளில் கூட சாதனை படைத்தார் ஜான்சன். மூன்று (ஒரு நாள்,டி20,டெஸ்ட்) போட்டிகளிலும் சேர்த்து ஜான்சன் 590 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 2008ம் ஆண்டு தென்னாப்பிர்க்காவுக்கு எதிரான போட்டியில் 8 வீரர்களை ஒரே இன்னிங்ஸில் வீழ்த்தியதே அவரது சிறப்பான பந்துவீச்சு.

ஓய்வை அறிவித்த பின்பு இதுதான் பிரபலங்கள் அவருக்கு கூறும் வாழ்த்து.
1. சச்சின் டெண்டுல்கர்.
#. ஜான்சன் ஒரு ஸ்பெஷல் பந்துவீச்சாளர், அவரது ஆக்ரோஷமான பந்துவீச்சை ரசித்துள்ளேன்.

2. மைக்கேல் கிளார்க்
#.நான் விளையாடிய வீரர்களிலேயே மிகச் சிறந்த வீரர்.வாழ்த்துக்கள் கூறி ஒரு சிறந்த வீரனை வழியனுப்பி வைப்போம்.
3. ஏபி.டி. வில்லியர்ஸ்.
#.அவரது ஓய்வு சிறப்பாக அமைய எனது வாழ்த்துக்கள்
4.ஷேன் வாட்சன்.
#.ஜான்சனுடன் மறுபடியும் விளையாட முடியாததை நினைத்த போது எனது கண்கள் கலங்கிவிட்டன, சிறந்த நண்பர்.
ஒரு சிறந்த வீரனுக்கு வாழ்த்துக்கள் கூறி வழியனுப்பி வைபோம்.சர்வதேச போட்டிகளில் ஓய்வை அறிவித்தலும் அவரது கிரிக்கெட் வாழ்க்கை உள்ளூர்,ஐ.பி எல் போன்ற போட்டிகளில் தொடரட்டும்.
வாழ்த்துக்கள் தலைவா.

Thursday, November 19, 2015

அல்லாவின் பெயரால்....
கடந்த வெள்ளிக்கிழமை உலகம் என்றுமே நினைவில் வைத்துகொள்ள வேண்டிய முக்கியமான கருப்பு நாள்.வலி வேதனை எல்லா  மனிதர்களுக்கும் பொதுவான ஒன்று தான் ஆனால் மதத்தின் பெயரால்  மனிதம் உலகில் சாகடிக்கப்படுகிறது.சில வேளைகளில் இந்த கோர சம்பவம் காரணமாக உங்களை அறியாமலேயே உங்களது கண்கள் நீர் மழை பொழிந்திருக்கலாம் பாரிஸ் மக்களிஞ் கண்களில் இவரு தான் கண்ணீர் இன்னும் நின்ற நின்றபாடில்லை.


ஐ.எஸ்.ஐ.எஸ் உலகிலேயே மிகவும் இறுக்கமானதும் என்றுமே ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு தீவிரவாத இயக்கமாக பரிணமித்து விட்டது.கடந்த வெள்ளிகிழமை பிரான்ஸ் பாரிஸ் நகரில் இடம்பெற்ற கோர சம்பவம் இதற்கு ஒரு நல்ல உதாரணம்.சென்ற வாரம் வெள்ளிக்கிழமை பிரான்ஸ் நாடு  விழா கோலம் பூண்டிருந்தது.கரணம் நடப்பு உதப்பந்தட்ட சம்பியனான ஜெர்மனி அணியும் பிரான்ஸ் கால்பந்து அணியும் செயின் டி  பிரான்ஸ் மைதானத்தில் சினேகபூர்வமான கால்பந்தாட்டப் போட்டிகளில் ஒன்றை ஒன்று எதிர்த்தாடி கொண்டிருந்தன.இவை தவிர பிரான்ஸ் நகர்   சொல்லவே வேண்டாம் மகிழ்ச்சியில் நிரம்பி வழிந்துக்கொண்டிருந்தது.திடீரென யாரும் நினைத்து பார்க்காத தருணத்தில் பிரான்சின் முக்கிய 07 இடங்கள்  ரத்தமும் சதையுமாக  காட்சியளித்தது.ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் அந்த 07 இடங்களையும் குண்டு வைத்து தகர்த்து விட்டார்கள்.
இதுவரையில் 160 பேர் உயிரிழந்து இருக்கிறார்கள்.பலர் உயிருக்கு போராடிக்கொண்டு இருக்கிறார்கள் இன்னும் 200 பேர் கடுமையான காயங்களால் உந்தப்பட்டு வைத்தியசாலையில்  தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படிருக்கிரர்கள்.



பிரான்ஸ் நாடே ஒரு நீங்கா இருளுக்குள்  மூழ்கி போய்  இருக்கிறது.03 நாட்களுக்கு பிரான்ஸ் நாட்டில் துக்க தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள அதே வேலை அந்த நாட்டில் அவசர கால நிலையம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.குறித்த மனித வெடி குண்டு தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.இந்த தற்கொலை குண்டு தாக்குதலுக்கு ஐ.எஸ்..ஐ.எஸ் அமைப்பில் இருந்து வரும் நியாயம் இதுதான்.
#.பாலியல் தொழிலுக்கும் ஆபாசத்துக்கும் தலைநகராக விளங்கும் பாரிசில் தாக்குதல் நடத்தியிருப்பது புனித அல்லாவின் கிருபையே.
#.நடந்துக்கொண்டிருப்பது சிலுவை போர்  .ஆகவே எமது முஸ்லிம்கள் தான் எமக்கு முக்கியம்.
#.உலகில் எந்த நாடாக இருந்தாலும் சரி முஸ்லிம்கள் நாடுகள் மீது குண்டு வீசி போர் தொடுப்பவர்களுக்கு இதுதான்  கதி.
#.தற்கொலை தாக்குதல் நடத்திய எங்களது 08 சகோதரர்களுக்கும் அல்லா துணை இருப்பான்,.நாங்கள் தான் உலகை ஆளப்போகிறோம் என்பதற்கான ஆரம்பம் தான் இது.
மேலே ஒரு விடயத்தை நாம் கவனிக்க வேண்டும் ஐ.எஸ்.ஐ.எஸ்  சார்பில் பாதிக்கப்பட்ட இஸ்லாமிய மக்களுக்கு ஆதரவாக நடத்தப்பட்ட புனிதப்போர் என்று இந்த தாக்குதலுக்கு  ஒரு  தார்மிக நியாயம் சொல்லப்பட்டாலும் இறந்தது என்னவோ அப்பாவி உயிர்கள் மட்டுமே என்பது நிதர்சனம்.


இவை தவிர மேலை நாடு கிறிஸ்தவர்களும் ஒடுக்கப்படும் இஸ்லாமியர்களுக்கும் இடையில் பகையுணர்வை ஏற்படுத்தும் நோக்க்கமும் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பால் வெற்றிகரமானதாக நிறைவு  செய்யப்படிருக்கிறது.எல்லாவற்றுக்கும்  மேலாக ஐ.எஸ்.ஐ.எஸ் பிரமுகரான ஜிகாதி ஜான் அமெரிக்கப்படைகளால் கொள்ளப்பட்டதும் இந்த தாக்குதலுக்கு மிக முக்கியமானதொரு காரணமாக இருக்கலாம்.
ஒட்டுமொத்தத்தில் அமெரிக்க,ரஷ்யா என்ற இரு பெரும் வல்லரசுகள் தவிர உலகின் பல நாடுகளில் இருந்தும் பிரான்ஸ் தாக்குதலுக்கு  அனுதாபம் இன்னமும் போய் சேர்ந்துக்கொண்டு தான் இருக்கிறது.கடந்த சனிக்கிழமையில் இருந்து இன்றய நாள் வரைக்கும் உலகம்  முழுக்க சமூக வலைதளங்களில் பிரான்ஸ் தேசியக்கொடி அனைஒவரது சுயவிபர படமாக மாறிப் போய்  இருக்கிறது.
இந்த கோர சம்பவம் என்றுமே மன்னிக்க முடியாத ஒன்று.பிரான்ஸ் ஜனாதிபதி  ஐ.எஸ்.ஐ.எஸ்  அமைப்பை  பெயரிட்டு கண்டித்திருக்கிறார்.இது எங்கள் மீது தொடுக்கப்பட்ட போர் இதற்கு  விரைவில்  பலிக்கு பலி நிச்சயம் கருணையற்ற முறையில் பதிலடி கொடுக்கப்படும் என்று சூளுரைத்திருக்கிறார்.


ஐ.எஸ்.ஐ.எஸ்  அமைப்பு தீவிரத்தன்மை  கொண்ட வாஹபி இஸ்லாத்தை உலகம் முழுக்க எடுத்து செல்ல துடிக்கிறது.இந்த முயற்சிக்கு எதிரான கருத்தியல் போரை அறிவு ஜீவிகள் முன்னெடுக்க வேண்டியது  மிக மிக அவசியம்.வெறுப்பான அரசியல்  சித்தாந்தத்தையும் வளர்த்தெடுக்கும் இத்தகைய இகக்கங்களிடம் இருந்து அப்பாவி பொது மக்கள் காப்பாற்ற பட வேண்டும்.ஐ.எஸ்.ஐ.எஸ்  அமைப்பு தனிமைப்படுத்தப்பட வேண்டும்.

சுதந்திரம்,சகோதரத்துவம்.,சமத்துவம் ஆகிய மிக சிறந்த முழக்கங்களை உலகுக்கு பறை சாற்றிய நாடு பிரான்ஸ்.அந்த முழக்கங்களுக்கு பிரான்ஸ் மக்களுக்கும் உயிரிழந்த மக்களுக்காகவும் உயிர்த்துடிப்போடு பிரார்த்திப்போம்.ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பை தனிமைப்படுத்த எத்தனிப்போம்.
வைரமுத்து சிறுகதைகள்
உலக சிறுகதைகளோடு கண்டிப்பாக ஒப்பிடத்தக்கவை.
கவிதை ,திரை பாடல், கட்டுரை, தொடர்கதை,நாவல், தன் வரலாறு என இலக்கியத்தின் பல துறைகளில் கால்பதித்து சாதனைகளை தொட்ட நமக்கு  தெரிந்த பாடலாசிரியர் வைரமுத்து வின் வேறுபட்ட இலக்கிய முயற்சி இது.சிறுகதைகளுக்கான கதை கருக்கள் ஒன்று என்றாலும் இந்த புத்தகத்தில் பேசப்படுகின்ற கதைகலங்கள் வேறுவேறு.காலங்களும் வேறு,கதா பாத்திரங்களும் வேறு.அதிலும் வைரமுத்து சிறுகதைகளில் சிறப்பானது பொய் தானேடி கொள்ளும் மெய் கொல்லாது போன்ற வாசகங்கள் சிறுகதைகளுக்கு மிக சிறந்த வெற்றிகளை தேடிக்க் கொடுத்திருக்கின்றன எனலாம்.


இவற்றுக்கு இடையிலான பொது பண்பு இவை எல்லாமே மனிதத்தை பற்றி பேசுகின்றன.
இந்த அக உலகின் குறுக்கு வெட்டு தோற்றத்தை அச்சு அசலாக பதிவு செய்வதில்  வெற்றி  கண்டிருக்கின்றார்  பாடலாசிரியர்.அதிலும் (மாறும் யுகங்கள் மாறுகின்றன ) போன்ற சிறுகதைகள் மேற்குறிப்பிட்ட எடுத்துக்காட்டுக்கு பொருந்தும் சிறுகதைகள்.தவிர வறுமையில் செம்மையை வலியுறுத்தும் மார்க்கம்,மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம் என்று சொல்லும் ராஜராஜன் ,ஏற்பது இகழ்ச்சி என்பதை நினைவூட்டும் விதத்திலும்,காந்தியின் கடைசி கதைகள் போன்ற கதைகள் இன்றைய சிறுகதை தலைமுறையினர் படமாக பயில வேண்டியை


இந்த தொகுப்பிலுள்ள இறந்தக் காலங்கள் இறந்தே போகட்டும் இப்படியும் ஒருவன் இருந்தான் போன்ற சிறுகதைகள் தமிழுக்கு புதிது.அதிலும் பாடலாசிரியர் கூறியிருக்கும் கருத்துக்கள் வார்த்தைகள் கரிர் என்று தைகின்றன.எல்லாவற்றுக்கும் மேலாக புத்தர்,ஷாஜஹான்,ராஜராஜன்  போன்ற மனிதர்களில் தொடக்கி வாழ்வின் பல இடுக்குகளில் வாழ்பவர்கள் பல மதங்களை சேர்ந்தவர்கள், பல்வேறு குணங்கள் உடையவர்கள் என விதவிதமான மனிதர்கள் இந்தக் கதைகளில் இடம்பெற்றாலும் எல்லோருமே நம் முன் ரத்தமும் சதையும் உலவும் மனிதர்களாக தான் இருக்கின்றார்கள்.


குறிப்பாக என்னால் ஒன்று மட்டும் கூற முடியும் தமிழில் இது வரை வந்துள்ள சிருகதைகளிலும் பார்க்க இந்த சிறுகதைகள் புத்தித் என்று தான் கூற வேண்டும்.இந்த புத்தகத்தின் 40 சிறுகதைகளும் தமிழுக்கு 40 முகங்கள்.வைரமுத்து என்று ஒரு இலக்கிய கர்த்தாவை பார்க்கிறோம் என் தர கன்னட்டத்தோடு இந்த சிறுகதைகளை வாசித்து பாருங்கள்.
வாசிப்பின் முழு பலனையும் இந்த நூல் படித்து முடிக்கும் போது தந்து விடும்.இலக்கிய மோகம் கொண்டவர்களின் கையில் இருக்க வேண்டிய மிக அருமையான நூல் இது.