Wednesday, September 28, 2016

நூல் அறிமுகம். 
பர்வேஸ் முஷரஃப் பாக் கில் சிக்கிய பல்.

பாகிஸ்தானில் வருடம் முழுதும் உள்நாட்டு யுத்தம்,  கலவரம்,  தீ-வைப்பு, இனி இல்லை என்ற அளவுக்கு அநியாயங்கள்.  இவை அனைத்துக்கும் காரணம் அந்நாட்டின் முன்னாள் ஜனாதிபதி   பர்வேஸ் முஷரஃப்தான் என்கிறார்கள் மக்கள்.  யார் இந்த முஷாரப்  என்ற கேள்விக்கு சரியான அறிமுகத்தை வழங்குகின்ற  இந்த நூல் இராணுவ புரட்சி மூலம் உலகில் ஆட்சியை பிடித்த தலைவர்களில் முஷாரப்பியையும் கூறி நிற்பது சிறப்பானது.

1999ல் நவாஸ் ஷெரீஃபை ஆட்சியை விட்டு நகர்த்தி எரிந்து விட்டு முஷரஃப் ஆட்சிக்கு வந்தபோது பாகிஸ்தான் மக்கள் சந்தோஷமாகவே அவரை வரவேற்றார்கள். ஆனால் மிக விரைவில் அந்த சந்தோஷம் வெறுப்பின் உச்ச கட்டமாக  மாறிப்போனது. இதற்கான காரணங்கள் அடுக்கடுக்காக இந்த நூலில் திறம்பட கூறப்பட்டுள்ளது. 

ஆப்கனிஸ்தான் மீதான அமெரிக்கப் படையெடுப்பின் போது ஜார்ஜ் புஷ்ஷின் ஆதரவாளராக அவர் நின்றதில் தொடங்குகிறது இந்த வன்மம். பாகிஸ்தான் அடிப்படைவாதிகளால் முஷரஃபின் எந்த ஒரு முற்போக்கு முயற்சியையும் சகிக்கமுடியவில்லை. அவரை அடியோடு அளித்து விட அல்லது வேரோடு சாய்த்து விட பாகிஸ்தானில் மட்டுமல்லாது உலக நாடுகள் பலவற்றில் மிக முக்கியமாக  ரஸ்யாவால்  கூட  ஏராளமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

ஆட்சியில் நிலைப்பதற்காக முஷரஃபும் ஏராளமான தகிடுதத்தங்கள் செய்யவேண்டியதானது. அதற்கு   அமெரிக்காவின் கொடுமையான ஜனாதிபதியாக இன்றும்  அந்த நாட்டு மக்களால்   நிலை நிறுத்தப்படும் ஜார்ஜ்  புஷ்சும் மிக முக்கியமானதொரு காரணம். அவர் செய்த பல திகிடு திட்டங்களுக்கு முஷாரப்பும் உடந்தையாக  அருகில் நின்றார்.   இதன் போது தான் முஷாரப்  உலக நாடுகளின்  பழி சொல்லுக்கு ஆளாக்கப்பட்டார் . அவர் அத்தனை காலமும் சம்பாதித்து வைத்த பெயர் புகழ் மங்க தொடங்கியது.அந்தக் கணத்திலிருந்துதான்.

 அதனாலேயே அவர் உருப்படியாகச் செய்த பல நல்ல காரியங்கள் அடையாளமில்லாமல் போயின. 2007ம் வருடத் தொடக்கத்திலிருந்து முஷரஃபை முன்வைத்து பாகிஸ்தானில் நிகழ்ந்த பல சம்பவங்கள் அத்தேசத்தின் சரித்திரத்தை ரத்தப் பக்கங்களால் நிரப்புபவை. வாஜிரிஸ்தான் போர்களும் லால் மசூதித் தாக்குதலும் பாகிஸ்தானின் அப்போதைய உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பதவி நீக்கத்தை அடுத்து நடைபெற்ற ஏராளமான கலவரங்களும் இன்னபிறவும் இன்றும் நெஞ்சை  பாதை பதைக்கச் செய்யும் கோர நிகழ்வுகள்.

மிக முக்கியமாக பாகிஸ்தானின் முன்னாள்  அதிபர் பர்வேஸ் முஷர·பின் இந்த சுயசரிதை நூல் நமக்கு எடுத்துக்காட்டும் அறிமுகம்  யாதெனில் இந்த உலகம், பயங்கரங்களால் ஆனது என்பது மட்டும் இந்த நூலில் மிக நேர்த்தியாக விளங்கும். இப்படி அவர்  ஜார்ஜ்  புஷ்சும்டன்  நிரந்தரமான பிரிவை ஏற்படுத்திக் கொண்டு    பாகிஸ்தான் ஒரு பயங்கரவாத தேசமல்ல என்று பல முறை அழுத்தமாக உலகுக்கு கூற முயன்றாலும் , மத அடிப்படைவாதிகள் தொடங்கி, மண்ணை ஆண்ட மனிதர்கள் வரை அதனை ஏற்றுக் கொள்ள வில்லை. மிக முக்கியமாக இந்த நூலில் நூலாசிரியர் ........  தீவிரவாதத்துக்கு எதிராக அமெரிக்கா மேற்கொண்ட உலகு தழுவிய யுத்தத்தில் பாகிஸ்தான் பங்கெடுக்க நேர்ந்ததன் பின்னணியை வெகு நேர்த்தியாக விபரித்திருக்கிறார்.

இந்த நூலில் மூலமாக முஷாராஃபீன் பல முகங்கள் வெளியில் வரும். உதாரணமாக  , ராணுவத் தளபதியாக இருந்த காலத்தில் அவர் பயணம் செய்த விமானத்தை பாகிஸ்தான் பிரதமரே கடத்தச் சொல்லி உத்தரவிட்டு நடத்திய நாடகம், விமான எரிபொருள் தீர்ந்துகொண்டிருந்தபோது வானவெளியில் அவர் அனுபவித்த  விவரிப்புக்கு அப்பாற்பட்ட பதற்றம், மண்ணுக்கு வந்தபோது நிகழ்ந்திருந்த மாபெரும் ராணுவப் புரட்சி. முஷரஃப் ஒரு மிகத் தேர்ந்த சித்திரிப்பாளராகவும் இந்நூலின் மூலம் அறிமுகமாகிறார்.
தனது நினைவுத்தொகுப்பு நூலான 'In the Line of Fire' ல் முஷரஃப் சொல்லாமல் விடுத்த விஷயங்களையும் 'மாற்றி'ச் சொன்ன விஷயங்களையும் இந்த நூலை வைத்து நீங்கள் ஒப்பிட்டுப் பார்க்கலாம்.  முஷரஃபின் முழுமையான அரசியல் வாழ்க்கை  மாத்திரமன்றி சர்வதேச அரசியலில் ஆர்வம்  கொண்டர்வர்களுக்கான ஒரு பெட்டகம் இந்த நூல் என்பேன்.
நூல் அறிமுகம்.இபின் பதூதா.
வாழும்  காலத்தில் பயணம் செய்பவர்களை நாம் அறிவோம். ஆனால் பயணம் செய்வதற்காகவே வாழ்ந்தவர் இபின்  பதூதா. இன்று நாம் மேற்கொள்ளும் பயணங்களைப் போன்றதல்ல இப்ன் பதூதாவின் பயணங்கள். கால் கடுக்க நடக்க வேண்டும். பாலைவனங்களைக் கடக்கவேண்டும். கடலில் மிதக்க வேண்டும். எங்கும் ஆபத்து, எதிலும் ஆபத்து.ஓர் ஆராய்ச்சியாளருக்கு இருக்கவேண்டிய அத்தனை அம்சங்களும் இப்ன் பதூதாவிடம் இருந்தது. 
30 ஆண்டுக் காலம் பயணியாய், இரு கண்டங்கள், 44 நாடுகளில்   பனி உறைந்த மலைகள், சுட்டெரிக்கும் சகாரா மணல், நைல் நதியின் வெள்ளம், கொந்தளிக்கும் கடல் என்று கடந்து வந்தவர். யுவான் சுவாங் போல மூன்று மடங்கு பயணித்தவர்.
“மாபெரும் பறவையின் சிறகின் மீது இருப்பதாகக் கனவு கண்டேன்; அது என்னுடன் மெக்காவின் திசைவழியில் பறந்து பின்னர் ஏமனை நோக்கிச் சென்றது... இறுதியில் கிழக்கினை நோக்கி நீண்டு பயணித்து, பசுமையும் இருளும் கொண்ட நாடொன்றில் இறங்கி என்னை அங்கே விட்டுச்சென்றது” என்று பதூதா தன் குறிப்புகளில் எழுதுகிறார். நைல் நதியின் டெல்டா பகுதிக் கிராமம் ஒன்றில் இருந்தபோது அவரது பதிவு இது.
அவரது பயணம் பிரம்மாண்டமான பறவையுடன் சென்ற பயணமாகவும், பிரம்மாண்டமான பறவையின் பயணமாகவும் இருக்கிறது. “ஒரு பறவை தன் கூட்டிலிருந்து சிறகடித்துச் செல்வதுபோல், புனிதத் தலங்களைத் தரிசிக்கும் வேட்கையுடனும் உறுதியுடனும், உற்றார் உறவினிடமிருந்து பிரிந்து புறப்பட்டேன்.” இப்புறப்பாடு அவரது 21 வது வயதில்.என்று அவரது மொழியில் அவர் பற்றி அவரது பயணங்கள்  பற்றி எழுதிய ஆதாரங்கள் தான் இந்த நூலில் முலிடம் பிடித்திருக்கின்றன.


மேலும் இபின் பதூதா தனது பயணத்தை ஆரம்பித்தமைபற்றி இந்தநூல் இவ்வாறு சான்றுகளை பகர்கின்றது. அதாவது ஷேக்அபு அப்துல்லா முகம்மது இபின் அப்துல்லா இபின் முகம்மது இபின் இப்ரஹிம் அல்-லாவதி என்னும் முழுப் பெயருடைய இபின் பதூதா மொராக்கோவின் டாஞ்சியர்ஸ் நகரிலிருந்து மெக்காவிற்குப் புனிதப் பயணம் மேற்கொள்ளத் தொடங்குகிறார். வழக்கறிஞர் குடும்ப மரபில் வந்தவராதலால், மெக்காவில் சட்டத் துறை அறிவை மேம்படுத்திக்கொள்ளும் ஆசையைக் கொண்டிருந்தார்.


டுனிஷ், அலெக்ஸாண்டியா, கெய்ரோ, பெத்லகேம், ஜெருசலேம், டமாஸ்கஸ், பாரசீகம், பாக்தாத், ஏமன், ஓமன், ரஷ்யா, ஆப்கானிஸ்தானம், இந்தியா என்று அவரது வழித்தடம் விரிந்துகொண்டே போகிறது. இதற்கிடையே மூன்று முறை ஹஜ் பயணம் மேற்கொள்கிறார். இரண்டாண்டுகள் மெக்காவில் தங்கிச் சட்டம் படிக்கிறார்.


30 ஆண்டுகள் பயணிக்க ஒருவருக்கு எவ்வளவு வசதி வாய்ப்புகள் இருக்க வேண்டும்! ஆனால் பதூதாவைப் பொறுத்தவரை அப்படி இல்லை. சாதாரண குடும்பத்தவரான பதூதாவுக்கு, ஓர் அறிஞர் என்ற வகையில் அவர் செல்லும் நாடுகளின் மன்னரெல்லாம் உதவுகின்றனர். ஒரு மன்னர் குதிரையும் இரு தங்க நாணயங்களும் அளித்தால் இன்னொருவர் பட்டாடை அணிவித்துப் பல்லக்கில் அழைத்துச் செல்கிறார். 

அரண்மனையில் தங்கி எவ்வளவு நாட்களையும் கழித்துவிடலாம்.இந்தியாவில் முகமது பின் துக்ளக் ஆட்சிக் காலத்தில் வந்த அவர், ஏழாண்டுகள் நீதிபதியாக இருந்திருக்கிறார். மாலத்தீவுகளில் 18 மாதங்கள் நீதிபதியாகப் பணியாற்றியிருக்கிறார். துக்ளக்கின் தூதுவராகப் பெரும் பரிவாரம், பரிசுப் பொருட்களுடன் சீனம் சென்று வந்திருக்கிறார்.


மேலும்  பனி மூடியிருக்க, 40 நாட்கள் கடின பயணத்தினால் இந்தியா வந்த போது மொகலாய சாம்ராஜ்யத்தின் மாமன்னர்  துக்ளக்கின்  கோபத்துக்கு ஆளான வரலாறுகள் பற்றிய தக்வல்களும் இந்த நூலில் மேலதிக தகல்களாக சேர்க்கப்பட்டுள்ளன. இஸ்லாத்தின் மிகப் பெரிய பயணி இவர் என்று யாரேனும் கூறினால் அது பொய்யில்லை” என்று அந்தக் குறிப்புகள் முடிகின்றன.
 மார்க்கோபோலோவின் பயணக் குறிப்புகளில்கூடச் சந்தேகங்களும் குழப்பங்களும் உண்டு. ஆனால் பதூதாவின் குறிப்புகள் துல்லியமானவை என்று இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

“வாழ்வென்பது தூய சுடர், நமக்குள்ளேயிருக்கும் புலப்படாத சூரியனால் நாம் வாழ்கிறோம்” என்பார் தாமஸ் பிரவுன். அத்தகைய சூரியன் பதூதாவுக்குள் கனன்றுகொண்டிருந்திருக்க வேண்டும்.
தேடல், புதிய பிரதேங்களை, புதிய மனிதர்களைச் சந்திக்கும் ஆர்வம். கூடுதலாக, உள்ளம் முழுக்க உறுதி.வரலாற்று துறைக்கு சார்ந்தவர்களுக்கு எஸ். சந்திரா மௌலியின் இந்த நூல் வரமே.