Thursday, November 19, 2015

அல்லாவின் பெயரால்....
கடந்த வெள்ளிக்கிழமை உலகம் என்றுமே நினைவில் வைத்துகொள்ள வேண்டிய முக்கியமான கருப்பு நாள்.வலி வேதனை எல்லா  மனிதர்களுக்கும் பொதுவான ஒன்று தான் ஆனால் மதத்தின் பெயரால்  மனிதம் உலகில் சாகடிக்கப்படுகிறது.சில வேளைகளில் இந்த கோர சம்பவம் காரணமாக உங்களை அறியாமலேயே உங்களது கண்கள் நீர் மழை பொழிந்திருக்கலாம் பாரிஸ் மக்களிஞ் கண்களில் இவரு தான் கண்ணீர் இன்னும் நின்ற நின்றபாடில்லை.


ஐ.எஸ்.ஐ.எஸ் உலகிலேயே மிகவும் இறுக்கமானதும் என்றுமே ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு தீவிரவாத இயக்கமாக பரிணமித்து விட்டது.கடந்த வெள்ளிகிழமை பிரான்ஸ் பாரிஸ் நகரில் இடம்பெற்ற கோர சம்பவம் இதற்கு ஒரு நல்ல உதாரணம்.சென்ற வாரம் வெள்ளிக்கிழமை பிரான்ஸ் நாடு  விழா கோலம் பூண்டிருந்தது.கரணம் நடப்பு உதப்பந்தட்ட சம்பியனான ஜெர்மனி அணியும் பிரான்ஸ் கால்பந்து அணியும் செயின் டி  பிரான்ஸ் மைதானத்தில் சினேகபூர்வமான கால்பந்தாட்டப் போட்டிகளில் ஒன்றை ஒன்று எதிர்த்தாடி கொண்டிருந்தன.இவை தவிர பிரான்ஸ் நகர்   சொல்லவே வேண்டாம் மகிழ்ச்சியில் நிரம்பி வழிந்துக்கொண்டிருந்தது.திடீரென யாரும் நினைத்து பார்க்காத தருணத்தில் பிரான்சின் முக்கிய 07 இடங்கள்  ரத்தமும் சதையுமாக  காட்சியளித்தது.ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் அந்த 07 இடங்களையும் குண்டு வைத்து தகர்த்து விட்டார்கள்.
இதுவரையில் 160 பேர் உயிரிழந்து இருக்கிறார்கள்.பலர் உயிருக்கு போராடிக்கொண்டு இருக்கிறார்கள் இன்னும் 200 பேர் கடுமையான காயங்களால் உந்தப்பட்டு வைத்தியசாலையில்  தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படிருக்கிரர்கள்.



பிரான்ஸ் நாடே ஒரு நீங்கா இருளுக்குள்  மூழ்கி போய்  இருக்கிறது.03 நாட்களுக்கு பிரான்ஸ் நாட்டில் துக்க தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள அதே வேலை அந்த நாட்டில் அவசர கால நிலையம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.குறித்த மனித வெடி குண்டு தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.இந்த தற்கொலை குண்டு தாக்குதலுக்கு ஐ.எஸ்..ஐ.எஸ் அமைப்பில் இருந்து வரும் நியாயம் இதுதான்.
#.பாலியல் தொழிலுக்கும் ஆபாசத்துக்கும் தலைநகராக விளங்கும் பாரிசில் தாக்குதல் நடத்தியிருப்பது புனித அல்லாவின் கிருபையே.
#.நடந்துக்கொண்டிருப்பது சிலுவை போர்  .ஆகவே எமது முஸ்லிம்கள் தான் எமக்கு முக்கியம்.
#.உலகில் எந்த நாடாக இருந்தாலும் சரி முஸ்லிம்கள் நாடுகள் மீது குண்டு வீசி போர் தொடுப்பவர்களுக்கு இதுதான்  கதி.
#.தற்கொலை தாக்குதல் நடத்திய எங்களது 08 சகோதரர்களுக்கும் அல்லா துணை இருப்பான்,.நாங்கள் தான் உலகை ஆளப்போகிறோம் என்பதற்கான ஆரம்பம் தான் இது.
மேலே ஒரு விடயத்தை நாம் கவனிக்க வேண்டும் ஐ.எஸ்.ஐ.எஸ்  சார்பில் பாதிக்கப்பட்ட இஸ்லாமிய மக்களுக்கு ஆதரவாக நடத்தப்பட்ட புனிதப்போர் என்று இந்த தாக்குதலுக்கு  ஒரு  தார்மிக நியாயம் சொல்லப்பட்டாலும் இறந்தது என்னவோ அப்பாவி உயிர்கள் மட்டுமே என்பது நிதர்சனம்.


இவை தவிர மேலை நாடு கிறிஸ்தவர்களும் ஒடுக்கப்படும் இஸ்லாமியர்களுக்கும் இடையில் பகையுணர்வை ஏற்படுத்தும் நோக்க்கமும் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பால் வெற்றிகரமானதாக நிறைவு  செய்யப்படிருக்கிறது.எல்லாவற்றுக்கும்  மேலாக ஐ.எஸ்.ஐ.எஸ் பிரமுகரான ஜிகாதி ஜான் அமெரிக்கப்படைகளால் கொள்ளப்பட்டதும் இந்த தாக்குதலுக்கு மிக முக்கியமானதொரு காரணமாக இருக்கலாம்.
ஒட்டுமொத்தத்தில் அமெரிக்க,ரஷ்யா என்ற இரு பெரும் வல்லரசுகள் தவிர உலகின் பல நாடுகளில் இருந்தும் பிரான்ஸ் தாக்குதலுக்கு  அனுதாபம் இன்னமும் போய் சேர்ந்துக்கொண்டு தான் இருக்கிறது.கடந்த சனிக்கிழமையில் இருந்து இன்றய நாள் வரைக்கும் உலகம்  முழுக்க சமூக வலைதளங்களில் பிரான்ஸ் தேசியக்கொடி அனைஒவரது சுயவிபர படமாக மாறிப் போய்  இருக்கிறது.
இந்த கோர சம்பவம் என்றுமே மன்னிக்க முடியாத ஒன்று.பிரான்ஸ் ஜனாதிபதி  ஐ.எஸ்.ஐ.எஸ்  அமைப்பை  பெயரிட்டு கண்டித்திருக்கிறார்.இது எங்கள் மீது தொடுக்கப்பட்ட போர் இதற்கு  விரைவில்  பலிக்கு பலி நிச்சயம் கருணையற்ற முறையில் பதிலடி கொடுக்கப்படும் என்று சூளுரைத்திருக்கிறார்.


ஐ.எஸ்.ஐ.எஸ்  அமைப்பு தீவிரத்தன்மை  கொண்ட வாஹபி இஸ்லாத்தை உலகம் முழுக்க எடுத்து செல்ல துடிக்கிறது.இந்த முயற்சிக்கு எதிரான கருத்தியல் போரை அறிவு ஜீவிகள் முன்னெடுக்க வேண்டியது  மிக மிக அவசியம்.வெறுப்பான அரசியல்  சித்தாந்தத்தையும் வளர்த்தெடுக்கும் இத்தகைய இகக்கங்களிடம் இருந்து அப்பாவி பொது மக்கள் காப்பாற்ற பட வேண்டும்.ஐ.எஸ்.ஐ.எஸ்  அமைப்பு தனிமைப்படுத்தப்பட வேண்டும்.

சுதந்திரம்,சகோதரத்துவம்.,சமத்துவம் ஆகிய மிக சிறந்த முழக்கங்களை உலகுக்கு பறை சாற்றிய நாடு பிரான்ஸ்.அந்த முழக்கங்களுக்கு பிரான்ஸ் மக்களுக்கும் உயிரிழந்த மக்களுக்காகவும் உயிர்த்துடிப்போடு பிரார்த்திப்போம்.ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பை தனிமைப்படுத்த எத்தனிப்போம்.

No comments:

Post a Comment