Thursday, November 19, 2015

வைரமுத்து சிறுகதைகள்
உலக சிறுகதைகளோடு கண்டிப்பாக ஒப்பிடத்தக்கவை.
கவிதை ,திரை பாடல், கட்டுரை, தொடர்கதை,நாவல், தன் வரலாறு என இலக்கியத்தின் பல துறைகளில் கால்பதித்து சாதனைகளை தொட்ட நமக்கு  தெரிந்த பாடலாசிரியர் வைரமுத்து வின் வேறுபட்ட இலக்கிய முயற்சி இது.சிறுகதைகளுக்கான கதை கருக்கள் ஒன்று என்றாலும் இந்த புத்தகத்தில் பேசப்படுகின்ற கதைகலங்கள் வேறுவேறு.காலங்களும் வேறு,கதா பாத்திரங்களும் வேறு.அதிலும் வைரமுத்து சிறுகதைகளில் சிறப்பானது பொய் தானேடி கொள்ளும் மெய் கொல்லாது போன்ற வாசகங்கள் சிறுகதைகளுக்கு மிக சிறந்த வெற்றிகளை தேடிக்க் கொடுத்திருக்கின்றன எனலாம்.


இவற்றுக்கு இடையிலான பொது பண்பு இவை எல்லாமே மனிதத்தை பற்றி பேசுகின்றன.
இந்த அக உலகின் குறுக்கு வெட்டு தோற்றத்தை அச்சு அசலாக பதிவு செய்வதில்  வெற்றி  கண்டிருக்கின்றார்  பாடலாசிரியர்.அதிலும் (மாறும் யுகங்கள் மாறுகின்றன ) போன்ற சிறுகதைகள் மேற்குறிப்பிட்ட எடுத்துக்காட்டுக்கு பொருந்தும் சிறுகதைகள்.தவிர வறுமையில் செம்மையை வலியுறுத்தும் மார்க்கம்,மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம் என்று சொல்லும் ராஜராஜன் ,ஏற்பது இகழ்ச்சி என்பதை நினைவூட்டும் விதத்திலும்,காந்தியின் கடைசி கதைகள் போன்ற கதைகள் இன்றைய சிறுகதை தலைமுறையினர் படமாக பயில வேண்டியை


இந்த தொகுப்பிலுள்ள இறந்தக் காலங்கள் இறந்தே போகட்டும் இப்படியும் ஒருவன் இருந்தான் போன்ற சிறுகதைகள் தமிழுக்கு புதிது.அதிலும் பாடலாசிரியர் கூறியிருக்கும் கருத்துக்கள் வார்த்தைகள் கரிர் என்று தைகின்றன.எல்லாவற்றுக்கும் மேலாக புத்தர்,ஷாஜஹான்,ராஜராஜன்  போன்ற மனிதர்களில் தொடக்கி வாழ்வின் பல இடுக்குகளில் வாழ்பவர்கள் பல மதங்களை சேர்ந்தவர்கள், பல்வேறு குணங்கள் உடையவர்கள் என விதவிதமான மனிதர்கள் இந்தக் கதைகளில் இடம்பெற்றாலும் எல்லோருமே நம் முன் ரத்தமும் சதையும் உலவும் மனிதர்களாக தான் இருக்கின்றார்கள்.


குறிப்பாக என்னால் ஒன்று மட்டும் கூற முடியும் தமிழில் இது வரை வந்துள்ள சிருகதைகளிலும் பார்க்க இந்த சிறுகதைகள் புத்தித் என்று தான் கூற வேண்டும்.இந்த புத்தகத்தின் 40 சிறுகதைகளும் தமிழுக்கு 40 முகங்கள்.வைரமுத்து என்று ஒரு இலக்கிய கர்த்தாவை பார்க்கிறோம் என் தர கன்னட்டத்தோடு இந்த சிறுகதைகளை வாசித்து பாருங்கள்.
வாசிப்பின் முழு பலனையும் இந்த நூல் படித்து முடிக்கும் போது தந்து விடும்.இலக்கிய மோகம் கொண்டவர்களின் கையில் இருக்க வேண்டிய மிக அருமையான நூல் இது. 

No comments:

Post a Comment