இந்தியா பறந்தார் மலிங்க.
நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற டி20 உலகக் கிண்ண போட்டிகளே தான் விளையாடுகின்ற இறுதிப் போட்டிகளாக சில வேளைகளில் அமையக் கூடும் என இலங்கை அணியின் முன்னால் டி20 அணி தலைவர் லசித் மலிங்க உருக்கமான கருத்தொன்றை முன் வைத்துள்ளார்.கடந்த 14ம் திகதி போட்டிகளில் பங்குபற்றுவதட்காக இந்தியா நோக்கி பயணமாவதற்கு முன்பதாக இலங்கையின் சிங்கள பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
இது பற்றி லசித் மலிங்க மேலும் கூறியுள்ள வருடங்கள் அணியின் வெற்றி தோல்விகளில் பங்கெடுத்துள்ளேன்.அண்மைய காலமாக உபாதை காரணமாக என்னால் அணிக்கு சரியான பங்களிப்பினை செய்ய முடியவில்லை. தொடர் காயங்களால் தொடர்ந்து அவதி பட்டு வருகின்றேன் இதன் காரணமாக எனது உடல் நிலையையும் கவனிக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. எனவே சில சமயங்களில் இந்த டி 20 உலகக் கிண்ண போட்டிகள் கூட எனது இறுதி போட்டிகளாக அமைந்து விடக் கூடும்.
மேலும் தொடர் தோல்விகளால் துவண்டு போய் இருக்கின்ற இலங்கை அணிக்கு ரசிகர்களிடம் இருந்து ஆதரவு மட்டுமே தேவையாக இருக்கின்றது, அந்த ஆதரவை இலங்கை ரசிகர்கள் சரியாக தருவார்கள் என்று நினைக்கிறேன்.
இலங்கை அணி இந்தியா நோக்கி புறப்படும் போது அணி தலைவர் அஞ்சலோ மத்யுஸ் கருத்தொன்றை கூறியிருந்தார். அதாவது இலங்கை ரசிகர்கள் எண்கள் மீது வைத்திருக்கின்ற அபரீதமான நம்பிக்கையை நாம் எப்போதுமே காப்பாற்றுவோம் என்று கூறியிருந்தார். நானும் இந்த சந்தர்ப்பத்தில் அதை தான் கூற விரும்புகிறேன்,இலங்கை அணிக்கு என்னாலான பங்களிப்பு நிச்சயம் இருக்கும் என்று உருக்கமாக கூறி இந்தியாவுக்கு பறந்திருக்கிறார் போட்டிகளில் பங்கு பற்ற மலிங்க.
No comments:
Post a Comment