இடி அமின்.
உகாண்டா மக்கள் மட்டுமல்ல உலகமே உச்சரிக்க பயந்த
ஒரு பெயர் இடியமின். இந்த கொடூர மனிதர் தான் இறக்கின்ற வரைக்கும் கொன்றொழித்த மனித
உயிர்களின் எண்ணிக்கை மட்டும் சுமார் ஒரு லட்சம் முதல் ஐந்த லட்சம் வரை இருக்கும்
என வரலாற்றியர்கள் கணக்கெடுக்கிறார்கள். மனித ரத்தம் குடிப்பார் , மனித உடல் பாகங்களை
தின்பார் ஒட்டு மொத்தத்தில் நர மாமிசம் தின்னும் ஒரு மனிதரை பற்றிய ஆவணம் இந்த
புத்தகம்.
இடியமின் குறித்த வதந்திகளும் கட்டுக்கதைகளும்
மிக அதிகம் என்றாலும் உகாண்டாவின் சர்வாதிகாரியாக அவர் ஆட்சியில் இருந்தக்
காலத்தில் அரங்கேறிய இனப் படுகொலைகளும் , அரசியல் அராஜகங்களும் ,பல உகாண்டா இளம் பெண்கள்
மீதான கற்பலிப்புக்கலுக்கும் மனித உரிமை மீறல்களுக்கும் வலுவான ஆதாரங்கள் இன்றும் இடியமின்
மீது முன்வைக்கப்படுகின்றன.
எதிர்ப்பவர்களை மட்டுமல்ல தன்னை எதிர்க்க நினைப்பவர்களையும்
அமின் என்ற கொடுங்கோலன் அழித்திருக்கிறான்.
இவ்வாறு நூலில் மொத்தம் பதினோரு தலைப்புக்களில் இடியமின்
பற்றி குறிப்பிடப் பட்டிருக்கின்ற தகவல்கள் அனைத்தும் உண்மையில் ஒரு நிமிடம் நம்மை
சஞ்சலப் படத்தான் வைக்கின்றன.சாதாரண ஒரு சமையல் காரனாக தனது வாழ்க்கையை தொடங்கி
படிப்படியாக உகண்டா ராணுவத்தில் ராணுவ வீரர்களுக்கு பணிவிடை செய்தது,ராணுவ
சிப்பாய் அதன் பின் ராணுவ வீரனாக மாறியது
பின்பு ராணுவ சார்ஜன் , தலைமைப் படை அதிகாரி, படை தளபதி, பில்ட் மார்ஷல் உகாண்டா
நாட்டின் ஜனாதிபதி என்று தொடர்கின்ற நூலில் இடியமின் பற்றிய தகவல்கள் வாசிப்பை
தூண்டுகின்றன.
இடியமினின் மிக முக்கிய பலமே எந்த சந்தர்ப்பத்திலும்
யார் முன்னேயும் அமைதியுடனும் , ஆரவாரமின்றியும் நடந்துக் கொள்வது தான். இவ்வாறாக
அடிமை சங்கிலி என்று தலைப்பிடப் பட்ட கட்டுரையில் இடியமின் ராணுவ தளபதியான
வரலாறும் , வளர்த்த கடா என்ற கட்டுரையில் அரசாங்கத்தை கவிழ்த்து தான் சர்வாதிகாரியாக
ஆனமை பற்றியும், இந்தியனே வெளியேறு என
தலைப்பிடப் பட்ட கட்டுரையில் இந்தியர்களை
இடியமின் எவ்வாறு எல்லாம் சித்திரவதைகள் படுத்தினார் அதற்கான காரணங்கள் என்ன ?
போன்ற தகவல்களும் காதல் காமம் கொலை என்ற தலைப்பிடப் பட்ட கட்டுரையில் இடியமினின்
மனைவிகள் , அவரது ஆசைக்கு அடங்கிய இளம் பெண்கள், அவரால் கற்பழித்து கொலை செய்யப்
பட்ட பெண்களின் எண்ணிக்கை என்று தகவல்கள் நீள்கிறது நூலில்.
இஸ்ரேல் கொடுத்த அடி, பேராயர் கொலை , மனிதக் கறி
, ஓடிப் போனமை , ஒழிந்தமை ,இறந்தமை உகாண்டாவில் சுதந்திரக் காற்று என மேலதிகமாக
இருக்கின்ற தலைப்புக்கள் அனைத்தும் இடியமினின் கொடுமைகளை கண் முன் நிறுத்துகின்றன.
இடியமின் செய்தது சீர் திருத்தமா , சீரழிவா
என்பதை உலகம் என்றுமே புரிந்துக் கொள்ள வில்லை. உண்மை தெரிய வந்தப் போது ஒரு தேசம்
அங்கெ அழிந்துக் கொண்டிருந்தது. ஹிட்லர் , முசோலினி வரிசையில் மனித குலத்துக்கு
பெரும் நாசம் விளைவித்த சர்வாதிகாரியான இடியமினின் வாழ்க்கையை உகண்டா தேசத்தின்
வரலாறோடு சேர்த்து தந்திருக்கிறார் நூலாசிரியர் ச.ந கண்ணன். நிச்சயம் இந்த நூலை
சந்தர்ப்பம் கிடைத்தால் வாசித்து பாருங்கள்.