Thursday, March 17, 2016

மீண்டும் தங்கம் வெல்லும் கனவுடன் இமாஸ எஷான்.



நேற்று முதல் அமெரிக்காவின் போர்ட்லேன்ட் சிட்டி நகரில் கோலகலமாக ஆரம்பமாகியிருந்த உள்ளக மெய்வல்லுனர் போட்டிகளுக்கு இம்முறை இலங்கையிலிருந்து நடந்து முடிந்த ஆசிய மெய்வல்லுனர் போட்டிகளில் ஆசியாவிலேயே வேகமான வீரர் என்ற சாதனையை படைத்த இமாஸ எஷான் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்.

இதன்படி ஓட்ட வீரர் இமாஷ எஷான் அமெரிக்காவில் நடைபெறுகின்ற மெய்வல்லுனர் போட்டிகளில் பங்கு பற்றுகின்ற முதலாவது சந்தர்ப்பம் இதுவென்பதோடு, இலங்கையில் இருந்து குறித்த மெய்வல்லுனர் போட்டிகளுக்கு தேர்வி செயப்படிருக்கின்ற  முதல் இலங்கை வீரர் என்ற பெருமையையும் இமாஷ பெற்றுக்கொண்டுள்ளார்.

கடந்த 15ம் திகதி இப்போடிகளில் பங்குப்பற்றுவதற்காக இமாஷ எஷான் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர ஆசியுடன் அமெரிக்க நோக்கி பயனமாகியிருந்ததோடு வருகிற 19ம் திகதி போட்டிகளில் கலந்துக் கொள்ள இருக்கின்றார்.

16ம் திகதி ஆரம்ப தின நிகழ்வுகளோடு ஆரம்பமான குறித்த போட்டிகள் இம்மாதம் 20ம் திகதி வரை நடைபெறுகின்றன. மொத்தமாக 15 நாடுகளை சேர்ந்த வீர வீராங்கனைகள் குறித்த போட்டிகளில் கலந்துக் கொள்கின்றனர்.
கடந்த மாதம் இந்தியாவில் இடம்பெற்ற ஆசிய மெய்வல்லுனர் போட்டிகளில் இமாஷ எஷான் தங்கப் பதக்கத்தை இலங்கைக்கு தேடிக் கொடுத்ததோடு ஆசியாவிலேயே வேகமான வீரர் என்ற சாதனையையும் படைத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.   


No comments:

Post a Comment