Friday, September 18, 2015

isis பதிவின் தொடர்ச்சி............

இந்த அமைப்பை தொடங்கிய அல்ஜர்க்வாவி 2006 ம் ஆண்டில் அமெரிக்க படைகளால் ஈராக்கில் கொல்லப்பட்டனர்.அடுத்தடுத்து தலைமைக்கு வந்தவர்களும் கொல்லப்பட்டார்கள்.பிறகு தலைமைக்கு வந்தவர்களும்  கொல்லப்பட்டார்கள்.பிறகு தலைமைக்கு வந்தவர் தன அபூபக்கர் அல் பக்தாதி. இவரது வருகைக்கு பின்னர் தான் isis மிகவும் மூர்க்கத்தனமாக மாறியது.இதுவரை அறியப்பட்ட அல்கொய்த தலிபான்களை எல்லாம் பின்னுக்கு தள்ளி விட்டு isis 30 நாட்களில் அதிரடியாக முன் அரங்குக்கு வரக்காரணம் அந்த அமைப்பின் மிகக் கொடுரமான தண்டனை முறைதான்.

இவர்களது நோக்கம் என்ன?

சன்னி முஸ்லீம்களின் ஆதரவை சடுதியில் பெற்ற isis சிரியாவில் ஆசாத் அரசுக்கு எதிராக  கிளர்ச்சியை   தொடங்க சிறியவை பிடிக்காத பல மேற்குலக நாடுகளும் சில அரபு நாடுகளும் அதை ஆதரித்தன, உதவின. விறுவிறுவென சிரியாவில் சன்னி முஸ்லிம்கள் செறிவாக வாழும் பல நகரங்களை கைப்பற்றினார்கள்.அனால் isis இன் நோக்கம் சிரியாவுடன் மட்டும் முடியவில்லை.

ஓட்டோமன் பேரரசுக் காலத்தில் ஸ்பெயின் தொடங்கி இந்தோனேசிய வரை முஸ்லிம்கள் ஆண்டார்கள்.இது போன்ற பரந்துபட்ட தேசம் அமைக்கப்பட வேண்டும். அதன் தொடக்கம் தான்  சிரியாவையும்,ஈராக்கையும் கைப்பற்றியது என்று அவர்கள் அறிவித்த வரைபடத்தில் இந்தியாவும் உண்டு.

இஸ்லாத்தின் பழைமைவாதக் கோட்பாடான வாஹபியசித்தின் வழித்தோன்றல்கள் என்று தங்களை அறிவித்துக்கொண்ட isis  சன்னி அல்லாத பிற முஸ்லிம்களை இழிவானவர்களாகவும், பிற சிறுபான்மை சமூகங்களை சாத்தானை வழிபடுகிறவர்களாகவும் கருதுகிறது.isis  அமைப்பின் செயற்பாடுகளை உலகெங்கிலும் உள்ள பெரும்பான்மை முஸ்லிம் மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

அமெரிக்காவின் பதற்ற தலையீடு.

குர்திஷ் போராளிகளின் கட்டுப்பாட்டில் உள்ள இர்பில் நகரை விரைவில் கைபற்றகூடிய நிலை வந்தபோது தான் அமெரிக்கா இசிஸ் செயற்பாட்டில் தலையிட்டது.அங்கு கிறிஸ்தவர்கள் சிறுபான்மையாக வசிக்கிறார்கள்.மேலும் யஹிதி என்ற பழங்குடிகள் இருக்கிறார்கள்.இவர்களை (isis ) கொன்று குவிக்க தொடங்கியது.

இதனால் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் மலைபகுதிகளில் தஞ்சம் அடைந்தனர்.இதையே காரணமாக வைத்து வான்வழி தாக்குதலில் இறங்கி விட்டது அமெரிக்கா . ஆனால் 2011 இல் ஈராக்கில் தலையிட்டதை போல இப்போது ஒரு முழு யுத்தத்தை நேரடியாக நடத்தவில்லை.அதற்கு பதிலாக குர்திஷ் போராளிகளுக்கு ஆயுதம் கொடுத்து isis உடன் மோத விடுகிறது.குர்திஷ் போராளிகளின் தனிநாட்டு போராட்டத்தை அங்கிகரிக்காத அமெரிக்கா இப்போது தனக்கு காரியம் ஆகா வ்பிண்டும் என்பதற்காக ஆயுதம் கொடுத்து ஊக்குவிக்கிறது.நாளை இவர்கள் வேலை முடிந்ததும் குர்திஷ் படைகளையும் ஒழித்துகட்டுவார்கள். வங்கம் தந்த பாடமும், ஈழம் சொன்ன பாடமும் இதுதான்.ஈராக் விவகாரத்தில் தவறு செய்துவிட்டோம் அங்கிருந்து வெளியேற்றும் முன்பு மத சார்பற்ற குழுக்களுக்கு       ஆயுதம் கொடுத்து அவர்களை வலுப்படுத்தி விட்டு வந்திருக்க வேண்டும் என்று இப்போது வெளிப்படையாக சொல்கிறார் ஹிலரி கிளிண்டன்.இதுதான் அமெரிக்காவின் உண்மையான முகம்.

பொதுவாக மத்தியகிழக்கு மற்றும் கிழக்கு, மற்றும் வளைகுடா நாடுகள், முஸ்லிம் நாடுகள் என அறியப்பட்டாலும் அமெரிக்கா ஆதரவு அல்லது எதிர்ப்பில் பிளவுண்டு கிடக்கின்றன.பாலஸ்தீனம் மீதான இஸ்ரேல் தாக்குதலை இஸ்ரேலுக்குள் வசிக்கும் யூதர்கள் கூட கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துவார்கள் ஆனால் முஸ்லிம் நாடுகள் இவை கூட திறக்காது.

அங்கிருந்துதான் அகண்ட இஸ்லாமிய தேசத்துக்கான அரை கூவல் பிறக்கிறது.ஈராக்கில் நிலை கொண்டிருந்த அமெரிக்கா ராணுவம் தீரப்பசியோடும், பெரும் இழப்புகளோடும் 2011 இல் அங்கிருந்து விலகியது. அப்போது isis அமைப்பிடம் இருந்து தங்களை காப்பாற்றக்கோரி ஈராக் விடுத்த கோரிக்கையை அமெரிக்கா கண்டுகொள்ளவே இல்லை.

நடப்பது நடக்கட்டும் என்று வேடிக்கை தான் பார்த்தது.ஆனால் isis  பரந்துபட்ட இஸ்லாமிய நாட்டை அமைக்க கோரி அரை கூவல் விடுக்கிறது என்று தெரிந்து உடனே வான்வழி தாக்குதலை தொடங்கியிருக்கிறது.

உலகெங்கிலும் இஸ்லாமிய எழுச்சியை ஏற்படுத்த கூடிய குழுவை முஸ்லிம்கள்  கிலாபத் என்கிறார்கள்.இந்திய சுதந்திர போரட்டத்தில் கூட கிலாபத் இயக்கத்துக்கு பெரும் பங்கு உண்டு.isis  அமைப்பு நாங்கள் தான் அந்த கிலாபத் என்கிறது.அதையும் அப்பாவி இஸ்லாமிய இளஞ்சர்கள் நம்பி நம்பி இவர்களது வலையில் வீழ்கிறார்கள் என்பது தான் இதன் நிதர்சனமான உண்மை.

நன்றி இந்திய ஊடகம்.

No comments:

Post a Comment