Wednesday, September 16, 2015

ISIS  உலகின் புதிய அச்சம்

  இந்த கட்டுரை ஒரு முறை இந்திய அச்சு ஊடகம் ஒன்றில் பிரசுரிக்க பட்டு இருக்கிறது.படித்ததும்
இந்த கட்டுரையை எனக்கு பிடித்திருந்தது.அதனால் இந்த கட்டுரையை பிரசுரிக்கிறேன். நன்றி இந்திய ஊடகம்.

இஸ்லாமாபாதாக இருந்தாலும் சரி,ராமநாதபுரமாக இருந்தாலும் சரி அப்பாவி முஸ்லிம்கள் தங்களின்  பிள்ளைகளை முஸ்லிம் அடிப்படைவாத அமைப்புகளிடம் இருந்து காப்பாற்றி ஆக வேண்டிய நெருக்கடியில் இருக்கிறார்கள். பெரும்பான்மை மத வெறியால் தனிமைப்படுத்தப்படும் அப்பாவி இஸ்லாமிய  வாலிபர்கள் சில அடிப்படை வாத அமைப்புக்கள் விரிக்கும் மதவாத படுகுழியில் வீழ்ந்து விடுகின்றனர்.இந்தியாவில் செயல்படும் தீவிரவாத குழுக்களில் தொடக்கி, இன்று  உலகத்தையே அட்சிருத்திக் கொண்டிருக்கும் isis (islamic state of irag and syria ) அமைப்பு வரை இதுதான் நிலவரம் அதிலும் இதுவரை உலகில் தோன்றிய தீவிரவாத குழுக்களில் மிகவும் இறுக்கமான, இரக்கமற்ற அடிப்படைவாத அமைப்பாக இருக்கிறது இசிஸ்.

யார் இந்த isis

சுடப்பட்டு உயிர் தடித்து கொண்டிருக்கும் ஈராக் ராணுவ வீரரை ,ஆட்டை அறுப்பது போல தொண்டையை அறுக்கிறார் ஒருவர்.இன்னொருவர் அதை நிதானமாக படம் பிடிக்கிறார்.துப்பாக்கிகளோடும், கொடிகளோடும் சூழ்ந்து நிற்பவர்கள் கோஷங்களை எழுப்புகின்றனர்.ஈராக்கில்  isis  அமைப்பு நடத்தும் கொலைகளில் இது ஒரு விதம்.கூட்டம் கூட்டமாக சுட்டுக் கொள்வது, கழுத்தை மட்டும் அறுத்துக் கொள்வது, சிலுவை வடிவிலான கம்பங்களில் கட்டிவைத்து சுட்டு கொள்வது என்று வித விதமாக வெளியிடப்படும் வீடியோக்கள் அந்த அமைப்பினரை ஆகக் கொடிய பயங்கரவாதிகளாக அடையலாம் கட்டி இருக்கின்றன.

1990 கலீல் ஜோர்தான் நாட்டை சேர்ந்த அல்ஜர்காவி என்பவரால் தொடக்கப்பட்ட இந்த அமைப்புக்கு ஆரம்பத்தில் ஜமா அத் ஜிகாத் என்று பெயர். அப்போது அல்கொய்தா உலகெங்கும் செல்வாக்குடன் இருந்ததால் இந்த அமைப்பின் பெயர் வெளியில் தெரியவில்லை.பிறகு இந்த குழுவினர் பின்லேடனை தங்கள் தலைவராக ஏற்று அல்கொய்தாவில்  இணைத்தனர்.யூப்ரடிஸ், தைகிரிஸ் நதிகளை ஒட்டியப் பகுதிகளில் செயல்பட்ட இவர்கள் ஈராக்கின் அல்கொய்தா  என அழைக்கப்பட்டனர்.

ஈராக்கில் சதாம் ஆட்சியில் இருந்தவரை சன்னி பிரிவினர் மேலாதிக்கம் செய்கிறவர்களாகவும், ஷியா முஸ்லிம்கள் அடக்கப்பட்டுபவர்களாகவும் இருந்தனர்.பக்கத்துக்கு நாடான சிரியாவிலோ பெரும்பான்மை  சன்னி பிரிவினர் ஒடுக்கு முறைக்கு உள்ளாக சிறுபான்மை சியா பிரிவினர் ஆளும் தரப்பாக இருந்தனர்.

இந்த நிலையில் தான் ஷியா, சன்னி பிளவை பயன்படுத்திம் ஈராக்கை கைப்பற்றியது அமெரிக்கா. 148 ஷியா முஸ்லிம்களை கொன்ற குற்றசாட்டின் பேரில் சத்தமாய் தூக்கில் போட்டது.சத்தமின் மரணத்தோடு சன்னி முஸ்லிம்கள் ஈராக்கில் பலம் இழந்தனர்.அமெரிக்காவின் ஆதரவோடு ஷியா தலைவரான மாலிக் ஆட்சிக் கட்டிலில்  ஏற, சன்னி முஸ்லிம்களின்  பாடு மேலும் திண்டாட்டம் ஆனது.

ஈராக்கில் ஆயுத முனையில் நடந்த இந்த ஆட்சி மாற்றம், அல்கொய்தா அமைப்பினுள் கருத்தியல் ரீதியான பிளவை உருவாக்கியது.முஸ்லிம்களின் பொது எதிரி, முதல் எதிரி யார்? அமெரிக்காவா? அல்லது அமெரிக்காவை ஆதரிக்கும் முஸ்லிம்களா? உண்மையான முஸ்லிம்களான  சன்னிகள் ஏன் ஈராக்கிலும் சிரியாவிலும் நசுக்க படுகிறார்கள்?

அவர்களுக்கு என்று ஒரு தேசம் வேண்டாமா? என்ற ரீதியில் கேள்விகளும் விவாதங்களும் எல.......... எட்டு மாதங்களுக்கு முன்னர் அல்கொதாவில்  இருந்து பிரிந்த இந்த குழுவினர் தங்களை (isis) என்று அழைத்து கொண்டனர்.

சிரியாவையும்,ஈராக்கையும் மீட்டு அங்கு  சன்னிகளை அதிகாரத்துக்கு கொண்டு வருவது தான் அவர்களது ஆரம்ப நிலை கோஷமாக இருந்தது.இன விடுதலை அமைப்பு போன்ற தோற்றத்தை  பெற்ற இந்த குழுவை ஆரம்பத்தில் அனைவருமே போராளிகள் என்று நினைத்தது இதனால் தான் .
இந்த பதிவின் தொடர்ச்சியை அடுத்த பதிவில் இடுகிறேன்.

No comments:

Post a Comment