Monday, September 7, 2015

தீவிரவாதத்தின் உச்சம் செப்டம்பர் 11

உலகத்துக்கு இழப்புகள் என்றல் என்ன என்பதை பறை சாற்ற இந்த தசாப்தத்தின் மிகப்பெரிய கோர சம்பவம் செப்டம்பர் 11 தாக்குதல்.
உலகை படிய வைக்க வேண்டும் என நினைத்த ஐக்கிய அமெரிக்காவின் எதேட்ச அதிகார போக்கை எதிர்த்து அமெரிக்காவை உருகுலைய வைத்தநாள் செப்டம்பர் 11.
மொத்தமாக 2973 பேர்,இரத்தம்,வலிகள் ,வேதனைகள்,அமெரிக்க நகரெங்கும் கரை படிந்த கண்ணீர் பதிவுகள் அந்த பேரிழப்பை கூற வார்த்தைகள் கிடையாது.

அமெரிக்கவை கதிகலங்க வைத்த சம்பவங்களை பட்டியலிட்டால் அதில் மிக முக்கிய இடம் பிடிப்பது செப்டெம்பர் 11 தாக்குதல்.இந்த தாக்குதல் நடைபெற்று நாளைய தினத்தோடு சேர்த்து 14 வருடங்கள் பூர்த்தியாகிறது.
உலகை உலுக்கி கொண்டிருக்கின்ற தீவிரவாதிகளிலே ஒசாமா பின்லேடனும் அவரது தீவிரவாத குழுவான அல்கொய்தா தீவிரவாத அமைப்பும் சேர்ந்து திட்டமிட்டு,அமெரிக்காவின் அதிக எரிபொருட்களை கொண்ட 4 விமானங்களைக் கடத்தினர்.

திட்டமிட்டு செய்யப்பட்ட இந்த தீவிரவாதத் தாக்குதல் அமெரிக்காவின் மிக முக்கிய இடங்களான நியூயோர்க்கின் இரட்டை கோபுரம்,அமெரிக்க பாதுகாப்பு அமைச்சின் கட்டமான பெண்டகன்,வோசின்க்டனின் டி.சிப கோபுரம் என மிக முக்கிய 4 இடங்களை குறிவைத்தது.

இதன்படி அல்கொய்தா தீவிரவாத அமைப்பின் 19 தீவிரவாதிகளும் அல்லாவின் புனிதம் இந்த தாக்குதல் என்று தம்மை சுதாகரித்து கொண்டு கடத்தப்பட்ட 4 விமானங்களில் முதலாவது விமானமான பிளைட் 11 மூலம் அமெரிக்க இரட்டை கோபுரத்தை நோக்கி செலுத்தினர்.
சரியாக 2001 செம்டெம்பர் 11 செவ்வாய்கிழமை காலை 8.45 க்கு இரட்டை கோபுரம் தகர்கபட்டது.

பெரும் சத்தம்,நெருப்பு குழம்பு,புகை,மரண ஓலம்,என பேரிழப்புகள் அங்கெ கிளம்ப ,நியூயார்க் வானம் கரும்புகையால் அப்பி காணப்பட்டது.எப்பேற்பட்ட பேரிழப்பு என்று எல்லோரும் பதற ஆரம்பித்த தருணத்தில் சரியாக 18 நிமிடங்கள் களைத்து பெண்டகன் மீது மற்றொரு விமானம் மோதியது.மறுபடியும் 16 நிமிடங்கள் கழித்து 4 வது விமானம் வொசிக்டனின் டி,சி யை நோக்கி பரந்த சந்தர்பத்தில் பென்சிலெனியாவில் ஒரு விவசாய நிலத்தில் வீழ்ந்து தீப்பற்றி எரிந்தது.

மொத்தமாக 2973 பேர் ஸ்தலத்திலே கொல்லப்பட்டனர்.இதில் 115 நாடுகளை சேர்ந்த 300 பேர் அடங்குவர்.அமெரிக்காவுக்கு இந்த இழப்பிலிருந்து மீண்டு வருவதற்கே சிறிது காலம் தேவைப்பட்டது.உடனடியாக இந்தத்  தாக்குதலுக்கு அல்கொய்தா அமைப்பும்,அதன் தலைவர் ஒசாமா பின்லேடனும் தான் பதில்  கூற வேண்டும் என அறிவித்த போதிலும்,அல்கொய்தா சார்பாக இந்த கருத்துகளும் வெளியிடப்பட்டவில்லை.

இதற்கு பின் முழுமையான அமெரிக்க இரட்டை கோபுரமும்,பென்டகன் கட்டமும் கட்டபட்டாலும் அந்த கோர தாக்குதலில் பலியான அப்பாவி உயிர்களின் மனித எச்சங்கள் அகற்றபடாமலே புதைக்கபட்டன என்பது தான் உண்மை.

மீண்டும் அமெரிக்கா மீண்டு எழுந்தது,பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என அறிவித்து விட்டு ஆப்கான், ஈராக் உள்ளிட்ட நாடுகள் மீது படையெடுக்க ஆரம்பித்தது.தீவிரமாக ஒசாமா பின்லேடனை தேட ஆரம்பித்தது.இதன்படி 7 வருடங்களின் பின் 2007 இல் ஒசாமா பின்லேடன் பாகிஸ்தானில் அமெரிக்கா ராணுவத்தினரால் சுட்டு கொல்லப்பட்டார்.

அதிகாரத்துக்கு எதிராக நடத்தப்பட்ட இந்த தாக்குதல் போபால் வாயு விளைவு போல அமெரிக்கா மக்களையும் இன்றும் பாதித்துகொண்டு தான் இருக்கிறது என்றாலும்,உலக வரலாற்றில் ஒவ்வொரு பக்கத்திலும் இந்த வரலாறு இருந்தே தீரும்.

புனிதத்தின் பெயரில் மனித உயிர்களைக் காவு கொண்டு நடத்தப்பட்ட இந்த தாக்குதல் எப்போதுமே மறக்கவும்,மன்னிக்கவும் முடியாத ஒன்று.
14 வருடங்கள் கடந்து விட்ட நிலையில் இந்த இழப்பில் உயிரிழந்த அப்பாவி உயிர்களை நினைவு கூறுவோம்.        

No comments:

Post a Comment