Tuesday, February 16, 2016

இந்த முறை ஆசிய கிண்ணம் யார் வசம்?





உச்சத்தைத் தொட்ட பிறகு எல்லா அணிகளுக்கும் தான் தம் அணியை பற்றிய ஒரு பிரமிப்பு இருக்கும் அந்த வகையில் இந்த முறை ஆசிய கிண்ணத்தில் பங்கு பற்ற போகின்ற ஆசிய அணிகளுக்கு தமது அணி பற்றிய கனவு இருப்பது சாதாரணம் தான்.

இந்நிலையில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆகிய டெஸ்ட் அந்தஸ்து பெற்ற அணிகளும் இன்னும் தம்மை, தமது திறமையை சரியாக நிரூபிக்க தவறாத அணிகளாக ஆசிய கண்டங்களில் இனங்கான பட்டிறிக்கின்ற மாலைத்திவுகள்,ஐக்கிய அரபு ராச்சியம், ஹாங் காங், ஆப்கானிஸ்தான் மற்றும் நேபாளம் ஆகிய அணிகளில் ஒரு அணி தெரிவு செய்யப்பட்டு இந்த போட்டிகள் இடம்பெறுகின்றன. 








போட்டிகள் பங்களதேசில் நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் போட்டிகள் வருகின்ற 24ம் திகதி ஆரம்பமாகின்றது. இதன்படி முதல் போட்டியில் இந்தியாவும் பங்காளதேஷ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

குறித்த 05 அணிகளும் மற்றைய 04 அணிகளுடன்  மோதிக் கொள்ளும் இதன்படி 02  போட்டிகளில் வெற்றி பெறுகின்ற அணிகள் தரப்பட்டியலில் முதல் இரு இடங்களை பிடிக்கின்ற அணிகள் வருகின்ற மார்ச் மாதம் 05ம் திகதி இருஹிபோஅடியில் மோதிக் கொள்ளும்.மேலும் முதல் சுற்று போட்டிகளில் மிகவும் விறுவிறுப்பான போட்டி உலகிலேயே அதிக ரசிகர்கள் ரசிக்கின்ற ,அதிக ரசிகர்கள்  மைதானங்களில் கூடுகின்ற போட்டி வருகின்ற 24ம் திகதி நடைபெறுகிறது. யார் இந்த இரு அணிகளும் என்று பார்க்கிறிர்களா இந்திஆயவும் பாகிஸ்தானும் தான்.


ஒரு பக்கம் ஆசிய கிண்ணத்தை கைப்பற்றியாக வேண்டும் என்று  ஒரு கனவு ,ஒரு எதிர்பார்ப்பு இருந்தாலும் இந்த மறை ஆசிய கிண்ணம் டி20 போட்டிகளாக மாற்றப்பட்டிருக்கின்ற  காரணத்தினால் குறித்த ஆசிய அணிகள் இந்த போட்டிகளை உலக கிண்ணம் டி20 போட்டிகளுக்கான முன்னோட்ட போடிகளாகவே பார்க்கும் என்பதுனான் உட்பட கிரிக்கெட் ஆர்வலர்களின் கருத்து. இந்நிலையில்  எந்த அணி  இந்த முறை ஆசிய கிண்ணத்தை கைப்பற்றும் என்பதான ஒரு சிறிய அலசல்.


01.இந்தியா


கடந்த முறை ஆசிய கிண்ண போட்டிகளில் அரையிறுதிப் போட்டிகளோடு பாகிஸ்தானுடன் பலத்த அடி வாங்கியிருந்த இந்திய அணி இந்த முறை விட்ட தவறுகளை திருத்திக் கொண்டு விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அண்மைய காலமாக பல விமர்சனங்களை சந்தித்திருகின்ற இந்திய அணி அண்மையில் இலங்கை அணிக்கு எதிராக  டி20 தொடரை கைப்பற்றியதையடுத்து கொஞ்ச குஷியாக இருகின்றது.

மிக முக்கியமாக ஆதிரடியை வழங்கக் கூடிய தவான், ரோஹித் ஷர்மா ஜோடி பந்த்கு வீச்சாளர்களை துவம்சம் செய்யும் என்று எதிர்பார்க்கலாம். மேலும் அணிக்கு மீண்டும்  திரும்பி இருக்கின்ற யுவராஜ் சிங்க் மீதும் பலரது எதிர்பார்ப்பும் இருகின்றது என்றே கூறலாம். 



குறிப்பாக அனைவரது கவனமும் தற்போது மகேந்திர சிங்க் டோனி மீதும் விராத் கொஹ்லி மீதும் தான் இருகின்றது காரணம் இரண்டு  தலைவர்கள் சகல விதத்திலும் நம்பிக்கையான  இருக்கின்ற இந்திய அணியை வெற்றி பாதைக்கு அழைத்து செல்வார்கள் என்று எதிர்பார்க்கலாம். மேலும் துடுப்பாட்டத்திலும் சுழற பந்து வீச்சிலும் கலக்கி வருகின்ற சென்னை பையன் அஷ்வின் மீது  தற்போது எல்லோரது கவனமும். அதே போல இந்திய அணிக்கு சகிர் கானின் நிரந்தர ஓய்வுக்கு பிறகு மிக சிறந்த பந்து வீச்சு பரிதிகளை வழங்கி வருகின்ற பும்ரா அதிகமாக கவனிக்கப்படுவார் ரசிகர்களால்.


02. இலங்கை 


சென்ற வருடம் பாகிஸ்தான் அணிக்கு எதிராக இறுதிப் போட்டியில் விளையாடி கிண்ணத்தை கைப்பற்றிய  அதே சந்தோசத்தோடு இந்த முறையும் களம் காண காத்திருக்கிறது இளம் இலங்கை அணி. ஒரே ஒரு குறை தான், சென்ற தொடரில் விளையாடிய அதே நேரத்தில் இலங்கை அணிக்கு எந்த நேரத்திலும் மிக பெரிய துண்களாக விளங்கிய மஹேல,மற்றும் சங்கா என்ற இரு பெரும் நட்சத்திரங்கள் இந்த முறை விளையாட மாட்டார்கள் காரணம் அவர்கள் ஓய்வு பெற்றதனால்.




மேலும் திலகரட்ன டில்ஷான் அனுபவம் வாய்ந்த வீரராக இலங்கை அணிக்கு நம்பிக்கை தர கூடிய வீரராக இந்த  முறை இலங்கை ரசிகர்களால் நோக்கப்படுவார். இதேபோல தற்போது உபாதையில் சிக்கி தவித்துக்  கொண்டிருக்கும் ரங்கன ஹேரத்தும் பந்து வீச்சில் இலங்கை அணிக்கு பலம் தருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மற்ற படி அதே இலங்கை அணி லசித் மலிங்கவின் தலைமையின் கீழ் இந்த மறையும் ஆசிய கிண்ணம் வெல்லும் முனைப்போடு இலக்கை நோக்கி இலங்கை அணி ஆடுகளங்களில் போராடும்.


03.பாகிஸ்தான்.


கடந்த தொடரில் இலங்கை அணியிடம் வாங்கிய மிக நீண்ட அடியும்,சில விமர்சனங்களும் நிச்சயம் அப்ரிடி தலைமையிலான பாகிஸ்தான் அணிக்கு நிச்சயம் நினைவில் இருக்கும். பல வீரர்களின் ஓய்வுக்கு  பிறகும் பாகிஸ்தான் நிமிர்ந்து போராட தயாராக இருக்கிறது என்பது அண்மைய காலங்களில் பாகிஸ்தான் அணி நியூசிலாந்து அணிக்கு எதிராக வெளிபடுத்திய  மிக சிறந்த பெறுபேறுகளில்  இருந்து தெரிய வருகிறது.



மேலும் போதை பொருள் குற்ற சாட்டில் சிக்கி  தற்போது பாகிஸ்தான் அணிக்கு திரும்பியுள்ள மொஹமட் அமீரின் பந்து வீச்சு மீதும் ரசிகர்களின்  பார்வை அதிகமாக இருக்கும். மற்றபடி அப்ரிடியின் தலைமையில் பாகிஸ்தான் அணி  மிக சிறந்த பெறுபேறுகளை வெளிப்படுத்தும் என நான் உட்பட எல்லோரும் எதிர்பார்த்து காத்திருகிறோம்.


05.பங்களாதேஷ். 



 அடுத்த ஆஸ்திரேலிய அணி என்ற புகழப்படுகின்ற அளவுக்கு பங்களாதேஸ் அணியின் வளர்ச்சியை அண்மைய போட்டிகளின் மூலம் காணக் கூடியதாக இருக்கிறது. முதலில் இந்திய அணிக்கு எதிராக  பெற்ற தொடர் வெற்றி, அடுத்து தென்னாபிரிக்க அணிக்கு எதிராக பெற்ற டி20 தொடர் வெற்றி என பங்களாதேஷ்  அணி கொடுத்தல் குஷியில் இருக்கிறது தாமும் மேற்கூறிய முதல் தர அணிகளுக்கு சவால் விடக் கூடிய அணி தான் என்ற நம்பிக்கையில். 



சொந்த மண்ணில் விளையாடுகிற  படியால் அதிகமான அழுத்தங்களை பங்களாதேஷ் அணி பிரயோக்கும் அதே நேரத்தில் எதிரணிகள் வீழ்த்தி கிண்ணத்தை கைப்பற்றும் நோக்கோடு போட்டிகளில் பங்கு பற்றும் என எதிர்பார்க்கலாம்.




1984 ம் ஆண்டு முதல் நடைபெறுகின்ற ஆசிய  கிண்ணப் போட்டிகளில் இதுவரையில் இந்திய அணி  06 தடவைகளும், இலங்கை அணி 04 தடவைகளும், பாகிஸ்தான் அணி 02 தடவையும் கின்னங்களைகைபற்றியுள்ளன. அதே நேரத்தில் பங்களாதேஷ் அணி எந்த வருடமும் கிண்ணத்தை கைப்பற்ற வில்லை. எனவே எல்லா பக்கமும்  மேற்குறிப்பிட்ட 04 அணிகளும் கிண்ணத்தை கைப்பற்ற கடுமையாக போராடும்.

No comments:

Post a Comment